சந்தையின் போக்கு

இந்திய பங்குசந்தைகள் சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது

4720-4620 மிக பெரிய ஒரு சப்போர்ட் லெவல் ஆகும்

இதனை நிஃப்டி உடைக்குமானால் 3900 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது

செல்வம் சேர்





















  • ஆசைப்படுங்கள்.
  • தன்னம்பிக்கை (Self confidence).
  • சூழ்நிலைகள் (Environment).
  • குறிக்கோள்கள்-வழிமுறைகள் (Goal- Strategy).
  • எண்ணங்களில் பழக்கங்களில் மாற்றம்.
  • வாழ்க்கையின் சிறு கஷ்டங்களில் கவனம் செலுத்தாதீர்கள்-தீர்வுகளில் மனதை செலுத்துங்கள்.
  • தாழ்வு மனப்பான்மையையும் எதிர்விளைவு எண்ணங்களையும் மாற்றுங்கள்.
  • பயத்தைப் போக்குங்கள்.
  • நேரத்தை கணக்கிட கற்றுக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் செய்கிற தொழிலை,மற்றவர்களைவிட 'மாற்றுமுறையில்' செய்யுங்கள் (You need not do different things;but,do'differently than others).
  • நிர்வாகத் திறமையுள்ளவர்களை உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • உங்களின் மூலதனம் என்ன என்று புரிந்துகொள்ளுங்கள்.
  • உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் (Own your responsibility).
  • தவறு செய்தால் தவறு என்று ஒப்புக் கொள்ளுங்கள் (I made mistake).
  • கவனியுங்கள் (Always Listen).
  • விடாமுயற்சி.
  • கிரீஸ் :குழப்பத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி



    சர்வதேச நிதியமைப்பு உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து, கிரீஸ் பொது ஓட்டெடுப்புக்கு அழைப்பு விடுத்தது குறித்து, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் எரிச்சல் அடைந்துள்ளார். "கடந்த முறை முடிவு செய்தது குறித்து, இன்னொரு முறையும் விவாதித்து முடிவெடுக்க முடியாது' என, காட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.

    "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி மிக இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. பிரான்சின் கேன்ஸ் நகரில் இன்று துவங்கும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில், "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி தான் முக்கிய விவாதப் பொருளாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ போட்டுள்ள புது குண்டு, "யூரோ' மண்டலத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    என்ன நடந்தது? : தனது கடன் நெருக்கடி தீர, சர்வதேச நிதியமைப்பு (ஐ.எம்.எப்.,), ஐரோப்பிய யூனியன் (இ.யு.,) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (இ.சி.பி.,) ஆகியவற்றில், கிரீஸ் இரு தவணைகளாக நிதியுதவி பெற்றுள்ளது.

    ஆயினும், அதன் கடன் குறையவில்லை என்பதால், கடந்த அக்டோபரில் நடந்த ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில், மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கிரீசுக்கு கடன் பத்திரங்கள் அளித்த தனியார் நிதி நிறுவனங்கள், தங்கள் கடனில் 50 சதவீதத்தை ரத்து செய்து விட வேண்டும். மூன்றாவது தவணையாக, 100 பில்லியன் யூரோ அளிக்கப்படும். இதற்குப் பதிலாக, அரசு ஊழியர் எண்ணிக்கை குறைப்பு, சம்பளம், ஓய்வூதியம் வெட்டு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும் என, மூன்று அமைப்புகளும் நிபந்தனை விதித்தன.

    பொது ஓட்டெடுப்பு: நிபந்தனையை ஏற்ற கிரீஸ் பிரதமர், அதற்கு பார்லிமென்ட்டின் ஒப்புதலையும் பெற்றார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ம் தேதி பேட்டியளித்த அவர், "மூன்று அமைப்புகள் கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து, கிரீஸ் மக்களிடம் பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும்' என்றார். அவரது இந்த அறிவிப்பு, ஐரோப்பாவில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.

    அமைச்சரவை ஆதரவு: இந்நிலையில், நேற்று, ஏழு மணி நேரம் நடந்த கிரீஸ் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. பொது ஓட்டெடுப்பு இந்தாண்டு டிசம்பரில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    எம்.பி.,க்கள் எதிர்ப்பு: எம்.பி.,க்கள் சிலர் பிரதமரை விமர்சித்த போதிலும் ஆதரவு அளிப்பதாகவே கூறினர். ஆளும் கட்சியின் ஒரு எம்.பி., தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஆறு எம்.பி.,க்கள் பிரதமர் ராஜினாமாவை கோரியுள்ளனர். இந்தச் சூழலில், நாளை, ஆளும் கட்சி மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க இருக்கிறது.

    ஜெர்மனி எச்சரிக்கை: கிரீஸ் பிரதமரின் அதிரடி அறிவிப்பு குறித்து நேற்று பேட்டியளித்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்,"ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விவகாரத்தை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தி முடிவு எடுக்க முடியாது' என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கிரீஸ் பிடிவாதம்: ஆனால், அதற்கு பதிலளித்த பப்பண்ட்ரீ,"இந்த பொது ஓட்டெடுப்பு, "யூரோ' மண்டலத்தில் கிரீசின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்தும். ஆனால், "யூரோ' கரன்சியில் கிரீஸ் தொடரும்' என்றார்.

    குழப்பத்தில் பிரான்ஸ், ஜெர்மனி: ஜி 20 கூட்டத்தில், கிரீஸ் மற்றும் "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி விவகாரத்தை முக்கியமாக வைக்கக் கருதிய பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஜெர்மனி பிரதமர் மெர்க்கெல் இருவரும், இதுகுறித்து குழப்பம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இரு நாடுகளும், "யூரோ' ஒப்பந்தம் முழுவேகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளன. அதன் மூலம் தான், "யூரோ' கடன் நெருக்கடி ஓரளவு தீரும் என்பது, அவர்களின் நம்பிக்கை. அதற்கு சீனாவும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர்.


    பணக்காரர்கள்



    டெல்லி: போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்கள் பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ள சாவித்ரி ஜிந்தால் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆவார். முகேஷ் அம்பானி முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

    பணக்கார இந்தியர்கள் பட்டியலை அமெரிக்காவின் முன்னணி பப்ளிஷிங் மற்றும் மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து 4வது முறையாக முதல் இடத்தில் உள்ளார் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி. அவரது சொத்து மதிப்பு 22.6 பில்லியன் டாலர். ஆனால் அவரது தம்பி அனில் அம்பானி 10வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    19.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள ஸ்டீல் நிறுவன அதிபர் லக்ஷ்மி மிட்டல் இரண்டாவது இடத்தில் உள்ளார். விப்ரோ நிறுவனர் ஆசிம் பிரேம்ஜி 3வது இடத்திலும், 9.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சாவித்ரி ஜிந்தால் 5வது இடத்திலும் உள்ளனர். இன்றைய தேதிக்கு இந்தியாவின் பணக்காரப் பெண் சாவித்ரி ஜிந்தால் தான்.

    இந்த பணக்கார பட்டியிலில் 14 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளன. இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ராகுல் பாட்டியா மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் பெயர்கள் முதன்முறையாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

    இந்த பட்டியிலில் இருந்த வினோத் கோயன்கா மற்றும் ஷாஹித் பால்வா ஆகியோரின் பெயர்கள் தற்போது இல்லை. அவர்கள் இருவரும் 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகின் பணக்கார அம்மா சாவித்ரி ஜின்டால்


    உலகின் பணக்கார அம்மாக்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார் சாவித்ரி ஜின்டால். ஆசிய அளவில் முதலிடத்தில் இருக்கும் பணக்கார அம்மா இவரே!

    பணக்கார அம்மாக்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் 70 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச தாய்மார்கள் தினத்தையொட்டி பணக்கார அம்மாக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ்.

    ஓ.பி. ஜின்டால் குழுமத்தை உருவாக்கிய ஓம் பிரகாஷ் ஜின்டாலின் மனைவியான சாவித்ரி ஜின்டாலின் நிகர சொத்து மதிப்பு 1,220 கோடி டாலர் (ரூ. 55,000 கோடி). 60 வயதாகும் சாவித்ரிக்கு 9 குழந்தைகள் உள்ளனர்.

    ஓ.பி. ஜின்டால் குழுமம் ஸ்டீல் மற்றும் மின்னுற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தை ஓ.பி. ஜின்டால் 1952ல் உருவாக்கினார். 2005ம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஓம் பிரகாஷ் ஜின்டால் உயிரிழந்ததைத் தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர் குழுமத்தில் பொறுப்புகள் அற்ற இயக்குநராக பதவியேற்றார்.

    ஏனெனில் ஜின்டால் உயிருடன் இருந்தபோதே தனது நிறுவனப் பொறுப்புகளை நான்கு மகன்கள் பிருத்விராஜ், சஜன், ரத்தன், நவீன் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். தற்போது இவர்கள் நால்வரும் தனித்தனி பிரிவுகளுக்கு தலைமை ஏற்று நடத்துகின்றனர்.

    பணக்கார அம்மாக்கள் பட்டியலில் 70 பேர் இடம் பெற்றிருந்தபோதிலும் 2 பேர் மட்டுமே தங்களது சொந்த வருவாய் மூலம் கோடீஸ்வர அம்மாக்களாக திகழ்கின்றனர்.

    இதில் ஹாரி பாட்டர் கதையை எழுதி கோடீஸ்வரியான ஜே.கே. ரவ்லிங்கும் ஒருவர். மற்றொருவர் எம்இஜி விட்மன்.

    பணக்கார அம்மாக்கள் பட்டியலில், கணவர் மூலம் கோடீஸ்வரிகளான தாய்மார்களே அதிகம். சில கோடீஸ்வர குடும்பங்களின் வாரிசுகளும் இதில் உள்ளனர்.

    வால்மார்ட் தொடர் நிறுவனத்தை உருவாக்கிய சாம் வால்டனின் மருமகள் கிறிஸ்டி வால்டன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 2,250 கோடி டாலராகும்.

    உலகம் முழுவதும் பிரபலமான அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான லோரியல் குழுமத்தின் லிலியேன் பெடன்கோர்ட் (87) இரண்டாவது இடத்திலும், பேக்கேஜிங் துறையின் பிரபலமான டெட்ரா லேவல் குழுமத்தைச் சேர்ந்த பிர்கிட் ராஸிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

    இவர்களுக்கு அடுத்தபடியாக சாவித்ரி ஜின்டால் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் ஹரியாணா மாநிலம் ஹிஸாரில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் சாவித்ரி.

    இவரது மகன்களில் ஒருவரான நவீன் ஜின்டால், ஹரியாணாவின் குருஷேத்ரா தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார்.

    எண்ணெய் நிறுவனங்களின் 3 மாத நஷ்டம் ரூ.21,374!!

    டெல்லி: 2011-12ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.21,374 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுவிட்டதால் அதனால் இந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏதும் இல்லை. ஆனால், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.64,900 கோடியாகும்.

    ஒரு லிட்டர் டீசல் விற்கையில் ரூ.7.06ம், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயை விற்கும்போது ரூ.25.90ம், ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவை விற்கையில் ரூ.270.50ம் இந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

    அதாவது ஒரு நாளைக்கு இந்த 3 நிறுவனங்களுக்கும் ரூ.272 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.