இந்தியா: வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு


இந்தியாவில் மக்களின் வருமானத்தில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் கடந்த இருபது வருடங்களில் இரு மடங்காகியுள்ளதாக ஒரு அறிக்கை கூறியுள்ளது.

இந்த விசயத்தில் வளரும் நாடுகளில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

நாட்டின் மிகவும் அதிகமான வருமானத்தைப் பெறும் முதல் 10 வீதத்தினர், மிகவும் குறைவான வருமானத்தைப் பெறும் 10 வீதத்தினரை விட 12 மடங்கு அதிகமான வருமானத்தைப் பெறுகிறார்கள் என்றும் 20 வருடங்களுக்கு முன்னதாக இந்த வித்தியாசம் 6 மடங்காக மாத்திரமே இருந்தது என்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு கூறியுள்ளது.

உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான வறிய மக்கள் இருக்கிறார்கள் என்றும் அது கூறியுள்ளது. அதாவது 121 கோடி இந்திய மக்களில் 42 வீதமானவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 60 ரூபாவிற்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்கிறார்கள்.

பிரஸில், இந்தோனேசியா மற்றும் சில குறியீடுகளின் அடிப்படையில், ஆர்ஜண்டீனா ஆகிய நாடுகள் கடந்த 20 வருடங்களில், இந்த வருமான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாக, இந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கு மாறாக சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த வருமான வேறுபாடு அதிகரித்துள்ளது.

வறுமைக் குறைப்பு நடவடிக்கைகளிலும் இந்தியா சரியாக செயற்படவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

37 வீதமான இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வதாக இந்திய அதிகாரபூர்வ அறிக்கை கூறுகின்ற போதிலும், 42 வீதமான இந்தியர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பாரிஸை தளமாகக் கொண்ட இந்த அமைப்பில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வருகின்ற 34 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

கிராமங்களில் உணவு, கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான தனிச்செலவுகளை சமாளிப்பதற்கு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 26 ரூபாய் வருமானமே போதுமானதாகும் என்று அண்மையில் கூறியதற்காக இந்திய அரசாங்கம் விமர்சனங்களுக்கு உள்ளானது.

நகரங்களைப் பொறுத்தவரை இந்தச் செலவுகளுக்கு 32 ரூபாய் போதுமானது என்றும் இந்தியா கூறியிருந்தது.

வறியவர்களை வரையறுப்பதற்கான வருமான மட்டம் மிகவும் குறைவாக அங்கு இருப்பதாகவும், வறிய மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் காண்பிப்பதற்காக வேண்டுமென்றே இந்த மட்டம் குறைத்துக் காண்பிக்கப்படுவதாக பல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வறுமையை ஒழிப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்று உலக வங்கியின் அறிக்கை ஒன்று மே மாதத்தில் கூறியிருந்தது.

ஊழல், மோசமான நிர்வாகம் மற்றும் குறைவான ஊதியம் போன்ற காரணங்களால் உதவித் திட்டங்கள்கூட சரியான பலனைத் தரவில்லை.

கிங்ஃபிஷர் வழியில் ஜெட் ஏர்வேஸ்...


நிதி நெருக்கடி என்ற கிங்ஃபிஷரின் ஒப்பாரியை விரைவில் ஜெட் ஏர்வேஸும் பாடக்கூடும் எனத் தெரிகிறது.

அதற்கு முன்னோட்டமாக, ஜெட் ஏர்வேஸ் விரைவில் கூடுதல் நிதியை உருவாக்க வேண்டும், பண ஓட்டத்தை சீராக்க வேண்டும் என்று அந்நிறுவன ஆடிட்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கிங்ஃபிஷர் நிறுவனம் கிட்டத்தட்ட திவால் என்று கூறிக் கொண்டு வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களிடம் கடன் கேட்டு நிற்பதற்கு முன், இதே ஆடிட்டர்கள் இப்படித்தான் 'எச்சரித்தனர்' என்பதால், இது திட்டமிட்ட நாடகமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ்தான் இந்தியாவில் மிகப்பெரிய தனியார் விமான சேவை நிறுவனம். லாபத்தில் இயங்குவதாக கூறிக் கொண்டாலும், அடிக்கடி நஷ்டக் கணக்கும் காட்டி வருகிறது.

சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அரசு உதவி வேண்டும் என்று கோரவும் தவறுவதில்லை ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயல்.

சமீபத்தில் கிங்பிஷர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி கிட்டத்தட்ட திவால் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நரேஷ் கோயல் உடனே 'கிங்ஃபிஷருக்கு அரசு பெயில் அவுட் தர வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் இப்போது, கிங்ஃபிரைப் போலவே நிதிப் பற்றாக்குறை ஜெட் ஏர்வேஸுக்கு வந்துள்ளதாக அதன் ஆடிட்டர்கள் எச்சரித்துள்ளனர். ஜெட்லைட் பிரிவால் இந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டம் கண்டு வருவதால் இந்த நிலை என்றும் ஆடிட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 'இது நாடகமாக இருக்காது என நம்புவோம். காரணம் விஜய் மல்லையாவின் பிஸினஸ் ஸ்டைல் வேறு, ஜெட் ஏர்வேஸின் வர்த்தக பாணி வேறு. சர்வதேச விமான சேவைகளைக் கொண்டுள்ளது ஜெட் ஏர்வேஸ். எனவே நெருக்கடியை அந்த நிறுவனம் சமாளித்துவிடும்,' என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.

சந்தையின் போக்கு

இந்திய பங்குசந்தைகள் சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது

4720-4620 மிக பெரிய ஒரு சப்போர்ட் லெவல் ஆகும்

இதனை நிஃப்டி உடைக்குமானால் 3900 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது

செல்வம் சேர்





















  • ஆசைப்படுங்கள்.
  • தன்னம்பிக்கை (Self confidence).
  • சூழ்நிலைகள் (Environment).
  • குறிக்கோள்கள்-வழிமுறைகள் (Goal- Strategy).
  • எண்ணங்களில் பழக்கங்களில் மாற்றம்.
  • வாழ்க்கையின் சிறு கஷ்டங்களில் கவனம் செலுத்தாதீர்கள்-தீர்வுகளில் மனதை செலுத்துங்கள்.
  • தாழ்வு மனப்பான்மையையும் எதிர்விளைவு எண்ணங்களையும் மாற்றுங்கள்.
  • பயத்தைப் போக்குங்கள்.
  • நேரத்தை கணக்கிட கற்றுக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் செய்கிற தொழிலை,மற்றவர்களைவிட 'மாற்றுமுறையில்' செய்யுங்கள் (You need not do different things;but,do'differently than others).
  • நிர்வாகத் திறமையுள்ளவர்களை உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • உங்களின் மூலதனம் என்ன என்று புரிந்துகொள்ளுங்கள்.
  • உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் (Own your responsibility).
  • தவறு செய்தால் தவறு என்று ஒப்புக் கொள்ளுங்கள் (I made mistake).
  • கவனியுங்கள் (Always Listen).
  • விடாமுயற்சி.
  • கிரீஸ் :குழப்பத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி



    சர்வதேச நிதியமைப்பு உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து, கிரீஸ் பொது ஓட்டெடுப்புக்கு அழைப்பு விடுத்தது குறித்து, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் எரிச்சல் அடைந்துள்ளார். "கடந்த முறை முடிவு செய்தது குறித்து, இன்னொரு முறையும் விவாதித்து முடிவெடுக்க முடியாது' என, காட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.

    "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி மிக இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. பிரான்சின் கேன்ஸ் நகரில் இன்று துவங்கும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில், "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி தான் முக்கிய விவாதப் பொருளாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ போட்டுள்ள புது குண்டு, "யூரோ' மண்டலத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    என்ன நடந்தது? : தனது கடன் நெருக்கடி தீர, சர்வதேச நிதியமைப்பு (ஐ.எம்.எப்.,), ஐரோப்பிய யூனியன் (இ.யு.,) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (இ.சி.பி.,) ஆகியவற்றில், கிரீஸ் இரு தவணைகளாக நிதியுதவி பெற்றுள்ளது.

    ஆயினும், அதன் கடன் குறையவில்லை என்பதால், கடந்த அக்டோபரில் நடந்த ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில், மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கிரீசுக்கு கடன் பத்திரங்கள் அளித்த தனியார் நிதி நிறுவனங்கள், தங்கள் கடனில் 50 சதவீதத்தை ரத்து செய்து விட வேண்டும். மூன்றாவது தவணையாக, 100 பில்லியன் யூரோ அளிக்கப்படும். இதற்குப் பதிலாக, அரசு ஊழியர் எண்ணிக்கை குறைப்பு, சம்பளம், ஓய்வூதியம் வெட்டு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும் என, மூன்று அமைப்புகளும் நிபந்தனை விதித்தன.

    பொது ஓட்டெடுப்பு: நிபந்தனையை ஏற்ற கிரீஸ் பிரதமர், அதற்கு பார்லிமென்ட்டின் ஒப்புதலையும் பெற்றார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ம் தேதி பேட்டியளித்த அவர், "மூன்று அமைப்புகள் கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து, கிரீஸ் மக்களிடம் பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும்' என்றார். அவரது இந்த அறிவிப்பு, ஐரோப்பாவில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.

    அமைச்சரவை ஆதரவு: இந்நிலையில், நேற்று, ஏழு மணி நேரம் நடந்த கிரீஸ் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. பொது ஓட்டெடுப்பு இந்தாண்டு டிசம்பரில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    எம்.பி.,க்கள் எதிர்ப்பு: எம்.பி.,க்கள் சிலர் பிரதமரை விமர்சித்த போதிலும் ஆதரவு அளிப்பதாகவே கூறினர். ஆளும் கட்சியின் ஒரு எம்.பி., தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஆறு எம்.பி.,க்கள் பிரதமர் ராஜினாமாவை கோரியுள்ளனர். இந்தச் சூழலில், நாளை, ஆளும் கட்சி மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க இருக்கிறது.

    ஜெர்மனி எச்சரிக்கை: கிரீஸ் பிரதமரின் அதிரடி அறிவிப்பு குறித்து நேற்று பேட்டியளித்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்,"ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விவகாரத்தை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தி முடிவு எடுக்க முடியாது' என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கிரீஸ் பிடிவாதம்: ஆனால், அதற்கு பதிலளித்த பப்பண்ட்ரீ,"இந்த பொது ஓட்டெடுப்பு, "யூரோ' மண்டலத்தில் கிரீசின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்தும். ஆனால், "யூரோ' கரன்சியில் கிரீஸ் தொடரும்' என்றார்.

    குழப்பத்தில் பிரான்ஸ், ஜெர்மனி: ஜி 20 கூட்டத்தில், கிரீஸ் மற்றும் "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி விவகாரத்தை முக்கியமாக வைக்கக் கருதிய பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஜெர்மனி பிரதமர் மெர்க்கெல் இருவரும், இதுகுறித்து குழப்பம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இரு நாடுகளும், "யூரோ' ஒப்பந்தம் முழுவேகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளன. அதன் மூலம் தான், "யூரோ' கடன் நெருக்கடி ஓரளவு தீரும் என்பது, அவர்களின் நம்பிக்கை. அதற்கு சீனாவும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர்.