பொன்மொழிகள்


ஒன்று நிகழப் போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது. -யாலப் தாம்சன்.


தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்கு கண்ணியம் தொடங்குகிறது. -பங்.


முயற்சி என்பது இதயத்துள் உண்டாகும் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோள் அது. -தாகூர்.


கோழைகளைத் தவிர வேறு யாரும் பொய் சொல்வதில்லை. -மர்பி.


அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள். -டிரைடன்.


வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும் -பீசீசர்.


நீயும் உடன்படாவிடில், நீ தாழ்ந்தவன் என்ற உணர்வை உன் மேல், எவராலும் எங்கும் சுமத்த முடியாது. -எலினார் ரூஸ்வெல்ட்.


நீங்கள் விரும்பும் உரிமைகளை எல்லாம் பிறருக்கும் அளித்து விடுங்கள். - இங்கர்சால்.


மரியாதையாகப் பேசுவதும், நடப்பதுவும் செலவில்லாத செல்வங்கள். - செர்வாண்டில்.


ஓடுவதில் பயனில்லை, நேரத்தில் புறப்படுவதே தேவை. - ஜீந்தொஃபோன்தேன்.


ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பிரயாணம் மிகக் கடினம். ஆனால் திரும்பி வருவது எளிது. -ஜப்பான்.


பூமியில் குடிசை கட்டுவதற்கு சக்தியற்ற சிலர், ஆகாயத்தில் அநேக அரண்மனைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். -வேல்ஸ்.


தொடர்ந்து மூன்று நாள் பசித்துக் கிடந்தால், ஒரு மனிதன் திருடவும் துணிவான். -கொரியா.


உங்கள் சந்ததியினருக்குச் சரியான இரண்டு வழிகளைச் சொல்லிக் கொடுங்கள். அவை இலக்கியமும் விவசாயமும். -சீனா.


தண்டிக்கப்படுகிறவன் திருடனல்ல. திருடிவிட்டு அகப்பட்டுக் கொள்கிறானே அவன்தான் திருடன். -செக்கோஸ்லோவேகியா.


பொய்யினால் வரும் இன்பத்தை விட உண்மையால் வரும் துன்பம் எத்தனையோ வகைகளில் சிறந்தது. -டென்மார்க்.


வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு பரீட்சை. அதன் முடிவை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது. -துருக்கி.


உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது. - நைஜீரியா.


நூறு ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய். நாளையே இறந்து விடுபவனைப் போல் சிந்தனை செய். - பல்கேரியா.


பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்விதம் அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்க வேண்டும். - பிரான்ஸ்.


இனிப்புப் பண்டங்கள் உடலைக் கெடுக்கின்றன. புகழ் சிறந்தவர்களையும் கெடுத்து விடுகிறது. - பின்லாந்து.


மரம் ஏறத் தெரியாதவன் குரங்கை நம்பி பணத்தைக் கொடுக்கக் கூடாது. - பெல்ஜியம்.


இளமை முதுமையை நோக்கி விரைகிறது. இன்பம் துன்பத்தை நோக்கி நகருகிறது. -ருமேனியா.

சீர்திருத்த நடவடிக்கைகளால் அன்னிய நிறுவனங்கள் ரூ.88,000 கோடி பங்கு முதலீடு


மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்திய பங்குச் சந்தையில், நடப்பாண்டில், இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் 1,600 கோடி டாலர் (88 ஆயிரம் கோடி ரூபாய்) முதலீடு மேற்கொண்டுள்ளன.இது குறித்த புள்ளி விவரத்தை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ளது. ஆசிய நாடுகள்:அதில், நடப்பு ஆண்டு, செப்., 28ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில்,1,611 கோடி டாலர் (ரூ.88,605 கோடி) அளவிற்கு நிகர முதலீடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நடப்பு செப்டம்பர் மாதம் மட்டும், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில், 382 கோடி டாலர் (21,010 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளன.


இந்தவகையில், நடப்பாண்டில், ஆசிய நாடுகளிலேயே, இந்திய பங்குச் சந்தைகளில் தான், அதிக அளவில் அன்னிய முதலீடு குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திடீர் எழுச்சிக்கு, உள்நாட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்த திட்டங்களும், வெளிநாட்டு மத்திய வங்கிகளின் நடவடிக்கைகளால், சர்வதேச பணப்புழக்கம் உயர்ந்துள்ளதுமே காரணம் என, பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்."சென்செக்ஸ்' :நடப்பு ஆண்டில், ஆசிய அளவில், இந்திய பங்குச் சந்தையின், "சென்செக்ஸ்' மற்றும் தேசிய பங்குச் சந்தையின், "நிப்டி' குறியீட்டு எண்களின் வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.நடப்பாண்டு, பிப்ரவரி மாதம், மிக அதிக அளவாக, 500 கோடி டாலருக்கும் அதிகமாக, இந்திய பங்குச் சந்தையில், அன்னிய முதலீடு குவிந்தது.

இது, மார்ச் மாதம் 150 கோடி டாலராக குறைந்தது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து, முறையே 10.30 கோடி டாலர் மற்றும் 27.30 கோடி டாலர் அளவிற்கு, முதலீடுகளை திரும்பப் பெற்றன.இந்த நிலையில், ஜூலை மாதம், மீண்டும் அன்னிய முதலீடு அதிகரித்தது. அன்னிய முதலீட்டாளர்கள் 200 கோடி டாலருக்கும் அதிகமாக இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தனர்.நடப்பாண்டில், பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீடுகளை பொறுத்தவரையில், சீனா நீங்கலான ஆசிய நாடுகளில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து, தென்கொரியா, 1,309 கோடி டாலர் அன்னிய முதலீடுகளை ஈர்த்து, இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜப்பான்:இதர ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள், தலா 200 - 400 கோடி டாலர் அளவிற்கு அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளன.வழக்கமாக, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுகளை, அதிக அளவில் ஈர்க்கும் ஜப்பான் நாட்டின் பங்குச் சந்தையில், நடப்பாண்டில், இதுவரை 369 கோடி டாலர் அளவிற்கு மட்டுமே அன்னிய முதலீடு குவிந்துள்ளது.

இந்திய பங்குச் சந்தையின் அண்மைக்கால எழுச்சி காரணமாக, பல ஆய்வு நிறுவனங்கள், "சென்செக்ஸ்' குறியீடு குறித்த இலக்கை உயர்த்தியுள்ளன.மார்கன் ஸ்டேன்லி நிறுவனம், 2013ம் ஆண்டு டிசம்பருக்குள், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', 23,069 புள்ளிகளை எட்டும் என, மதிப்பீடு செய்துள்ளது. இது, இதுவரை எட்டாத நிலையாகும்.கடைசியாக, கடந்த 2008ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி,"சென்செக்ஸ்' 21,206.77 புள்ளிகளை எட்டியிருந்தது. இதுவே, அதிகபட்ச அளவாகும். வரும் ஆண்டு, இதை விட அதிகமாக உயரும் என,மார்கன் ஸ்டேன்லி மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூடு பிடிக்கும் வர்த்தகம்:அன்னிய முதலீடு அதிகரித்து வருவதால், இந்திய பங்குச் சந்தைகளின் தினசரி வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், செப்டம்பர் மாதத்தில், அன்றாடம் சராசரியாக 14,150 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, சென்ற பிப்ரவரியில், மிகவும் அதிகபட்சமாக 19,887 கோடி ரூபாயாக இருந்தது.மே - ஆகஸ்ட் வரையிலான நான்கு மாதங்களில், தினசரி வர்த்தகம், சராசரியாக 12,000 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே நடைபெற்றது.

பணக்காரன்


ஒரு பணகாரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்க கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்து சென்று இரு தினங்கள் தங்கிவிட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான் :

அப்பா நம் வீட்டில் ஒரே ஒரு நாய் இருக்கிறது கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன.......,
நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம் அந்த கிராமத்தில் எண்ணில் அடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது......, நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது......, நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம் அவர்கள் உடனடியாக சூடு மாறாத பாலை கறந்து சாபிடுகிரர்கள்...., நாம் வாடிய காய்கறிகளை சாப்பிடுகிறோம் அவர்கள் செடியில் இருந்து பறித்து பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிர்றார்கள் ......., நாம் வீட்டை சுற்றி compound கட்டி பாது காக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிகொண்டே சென்றான்....மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது....

தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று.....!!!

அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் ரூ.3,000 கோடி முதலீடு




கடந்த இரு வாரங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,) இந்திய பங்குச் சந்தைகளில், 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இதையடுத்து, நடப்பு ஆண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில் செய்துள்ள முதலீடு, 65,954 கோடி ரூபாயை எட்டியுள்ளது.


பன்முக சில்லரை வர்த்தகத்தில், 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி மற்றும் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களில், 49 சதவீத அளவிற்கு, வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள், பங்குகளை வாங்க ஒப்புதல் ஆகியவற்றிற்கு மத்திய அரசு, அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக, வரும் மாதங்களில், அன்னிய முதலீடு மேலும் சிறப்பான அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது 

நிறுவனங்களின் முன் கூட்டிய வரியில் முன்னேற்றம்



நடப்பு 2012-13ம் நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்துள்ளது. இந்திய நிறுவனங்கள், ஒரு நிதியாண்டிற்கு, நான்கு தவணைகளில், முன்கூட்டிய வரியை செலுத்துகின்றன.இவ்வகையில், நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் 15ம் தேதிக்குள் (இரண்டாவது தவணை), நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட அதிகரித்துள்ளது.

பெரும்பான்மையான நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் செலுத்திய வரி நல்ல அளவில் உயர்ந்துள்ளது."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்' என்பது போல, இதுவரை முன்கூட்டிய வரி செலுத்தியுள்ள நிறுவனங்களுள், எல்.ஐ.சி., நிறுவனம், இரண்டாவது காலாண்டில், செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி, 1,300 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 1,165 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலாண்டுகளில், எச்.டீ.எப்.சி. பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, 2.38 சதவீதம் அதிகரித்து, 800 கோடி ரூபாயிலிருந்து, 1,100 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, 4.97 சதவீதம் வளர்ச்சிகண்டு, 650 கோடி
ரூபாயிலிருந்து, 815 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

பொதுத் துறையை சேர்ந்த பேங்க் ஆப் பரோடா செலுத்திய வரி, 600 கோடி ரூபாயிலிருந்து, 620 கோடி ரூபாயாகவும், தேனா பேங்க் செலுத்திய வரி, 77 கோடி ரூபாயிலிருந்து, 180 கோடி ரூபாயாகவும் அதிகரித்துஉள்ளன. வெளிநாட்டு வங்கியான சிட்டி பேங்க் செலுத்திய வரி, 100 கோடி ரூபாயிலிருந்து, 400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நுகர்பொருள் துறையில், முன்னணியில் உள்ள இந்துஸ்தான் யூனிலீவர் செலுத்திய வரி, 190 கோடி ரூபாயிலிருந்து, 300 கோடி ரூபாயாகவும், அம்புஜா சிமென்ட்ஸ் செலுத்திய வரி, 95 கோடியிலிருந்து, 160 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.


மோட்டார் வாகனத் துறையை சேர்ந்த மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், செலுத்திய முன்கூட்டிய வரி, 176 கோடி ரூபாயிலிருந்து, 200 கோடி ரூபாயாக வளர்ச்சிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நிறுவனம், செலுத்தும் முன்கூட்டிய வரியை வைத்து, அக்காலாண்டில், அந்நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அதாவது, குறிப்பிட்ட காலாண்டில், ஒரு நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்திருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் நல்ல அளவில் உயர்ந்திருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.