தடை


ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.


எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது...!


கருவேலமரங்களை ஒழிப்போம் !

 சீமைக் கருவேல மரங்கள்... இந்த மரத்தினை பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்க முடியாது. தமிழ்நாட்டின் எல்லா மாநிலங்களிலும் வளர்ந்துக் கொண்டு இருக்கிற ஒரு மரம். எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது . தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும். 


"நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது. சில ஆண்டுகளுக்குமுன் ஒரு திட்டமிடலுடன் செயல்பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது. கேரளா 'கடவுளின் சொந்த நாடு' என்கிற விதமாய் அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்."
 
இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலைப்படாது. ஏனெனில் ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது.காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும்,எண்ணெய்ப்பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது. தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது யாருக்கும் இதுவரை புரியவில்லை.

ஆனால் இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள். தங்கள் வீடுகளுக்கும், வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைகிறார்கள். வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர். இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அரியது இருக்கிறார்கள்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்.


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத்தன்மையாக மாறிவிடுகிறது.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பதுதான் இந்த சீமை கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால்தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி ! ஆகவே கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம்

சந்தை செய்திகள்

நாட்டின் நிதி பற்றாக்குறை:

 நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை, 5.3 சதவீதமாக இருக்கும். இது, வரும் நிதியாண்டில், 4.8 சதவீதமாக குறைக்கப்படும்.

நடப்பாண்டு பட்ஜெட்டில், நிதிப்பற்றாக்குறை, 5.1 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகரித்து வரும் மானியச் செலவுகளால், நிதிப்பற்றாக்குறை அதிகரித்து, 5.3 சதவீதமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.


மத்திய அரசு, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், நாட்டின் பொருளாதார தர குறியீடு குறைப்பு குறித்த, பன்னாட்டு நிறுவனங்களின் அச்சுறுத்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.வரும், 2016 - 17ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை, 3 சதவீதமாக குறையும்

பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை 


எதிர்வரும் 2013-14 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவன பங்குகளின் விற்பனை ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு குறையாது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அப்போது, "பொதுத்துறை நிறுவனங்களை தனியார்  மயமாக்கும்  திட்டம் எதுவுமில்லை. அரசுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விரும்புகிறோம். வரும் நிதியாண்டிலும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை குறையாது என்பதில் அரசு நம்பிக்கையுடன் உள்ளது.


மேலும்  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 % சதவிகிதத்துக்கு குறையாது. அதோடு எதிர்வரும் நிதி ஆண்டில் 6 முதல் 7 சதவிகித வளர்ச்சி அடையும் வகையில் முன்னேற்றம் காணும்" என்றும் கூறியுள்ளார். கடந்த 2011-12 நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5% சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

ரிசிர்வ் வங்கி வட்டி  விகிதம் 

வரும் செவ்வாய் அன்று நடைபெறவுள்ள ரிசிர்வ் வங்கி கூட்டத்தில் repo rate எனப்படும் வட்டி விகிதத்தை, இந்தியாவின் மத்திய வங்கி குறைத்து இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


இந்திய பங்குசந்தைகள் தற்போது bull run எனப்படும் காளையின் பிடியில்  உள்ளது ,அவை வரும் march மாதத்திற்குள் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது 

வியக்க வைக்கும் வெஸ்பா எஸ்எக்ஸ்125


நாற்பது வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே கம்பீரம், பிரமிப்பான செயல்
திறன் வித்தியாசமான மிடுக்கான கட்டமைப்பு அத்துடன் காலத்தின் தேவைக்கேற்ப செய்யப்பட்ட சிற்சில மாற்றங்கள் தோற்றத்திலும் வசதிக்கான அம்சங்களிலும், தொழில்நுட்பங்களிலும், இதுவே இன்றைய எல்எம்எல் வெஸ்பாவின் சிறப்பான அடையாளங்கள்.

 தரம், நிறம், விலை என்று எதிலும் சமரசம் செய்துக் கொள்ளாமல் தனக்கான வாடிக்கையாளர்களின் திருப்தியை கருத்தில் கொண்டு
உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் ஆண், பெண் என்று அனைத்து தரப்பினரின் தேவையையும் பூர்த்தி செய்யக்கூடியதாய் உள்ளது. வெஸ்பா எல்எக்ஸ்125 சக்திவாய்ந்த 125சிசி, கார்ப்ரேட்டட், 3 வால்வு என்ஜினைக் கொண்டுள்ளது. இது 7500 ஆர்பிஎம்எமில் 10.06 bhp பவரையும், 6000ஆர்பிஎம்மில் 10.6 mn டார்க்கையும் வழங்குகிறது. ஒரு பட்டனைத்தட்டி இயக்கக்கூடிய என்ஜின் வழுவழுப்பான, உறுதியான, ஸ்திரமான நேரம் பாதுகாப்பான ஓட்டும் அனுபவத்தை வழங்குகிறது.இந்த இந்தோ-இத்தாலிய மாடலான எல்எக்ஸ்125 ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கிள் சைடட் ஹைட்ராலிக் ஷாக் அப்சர்வரும் பின்புறம் ஹைட்ராலிக் மோனோ ஷாக் அப்சர்வரும் இருப்பதால் மேடு பள்ளங்கள் நிறைந்த நகரச்சாலைகளிலும் சிறுசிறு திருப்பங்களிலும் சுலபமாக இயக்கும் வகையில் இருக்கிறது.

வெஸ்பாவின் உறுதியான, ஸ்திரமான நீடித்து உழைக்கும் நம்பகமான கட்டமைப்பிற்கான காரணம் இதன் மோனோகாக் ஸ்டீல் லோட்-பேரிங் பாடி ஆகும். அதாவது இதன் முக்கிய முன் மற்றும் பின்புற பாடி ஸ்டீலினாலானது மட்டுமின்றி எந்த இணைப்பும் இல்லாத ஒரே ஸ்டீல் தகடினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இது மிகவும் உறுதியாக இருப்பதுடன், மற்ற பாகங்கள் மட் கார்ட், ஹெட்லைட் ‌செட் போன்றவை பைபரினால் உருவாக்கப் பட்டு இதன் வடிவமைப்பு சீராக உள்ளதாலும் அதிக எடையின்றி பெண்களும் சுலபமாக இயக்கும் வண்ணமுமே உள்ளது.

இதன் அழகான கவர்ச்சியான தோற்றத்திற்கு காரணங்களாக கிரோம் கோர்ட்டிங் கொண்ட கிரில், ரியல் வியூ மிர்ரரின் வடிவம், சஸ்பென்ஷன் கவர், டெயில் லைட் செட், கிரிஸ்டல் ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர், ஹை-டெபனேஷன் (hd), பாடியின் பெயின்ட், ஆர்ட் லெதர் சீட்கள் மற்றும் 3ஸ்போக் சாடின், பினிஷ் கொண்ட அலாய் காம்பினேஷன் வீல் போன்றவைகள் உள்ளன. ஆறு அழகிய நிறங்களில் கிடைக்கும் வெஸ்பா எல்எக்ஸ்125 அழகிய வித்தியாசமான வடிவம், சிறப்பான தொழில்நுட்ப அம்சங்கள், உறுதியான கட்டமைப்பு என்று ஸ்கூட்டர் செக்டாரில் தனக்கென ஒரு கம்பீரமான இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிறுவன பங்குகள் 8 ருபாய் என்ற அளவில் bse(500255)  இல் வணிகமாகி வருகிறது, நீண்டகால முதலீட்டாளர்கள் ,குறைந்த அளவில் வங்கி வைக்கலாம் 

சந்தை எங்கே செல்கிறது?

 இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிவந்தைதுள்ளது , அது பற்றிய ஒரு தொழில்நுட்ப பகுப்பாய்வு 

daily chart படி sensex 50 நாளைய சராசரியான 19135(its also previous swing low ) கீழே வர்த்தகம் முடிவடையும் வரை காளைகளின் பிடி ஓங்கியிருக்கும் 



weekly chart படி sensex இல்  சில bearish indications உள்ளது ,அதனை மேலே உள்ள வரைபடத்தில் சுட்டி உள்ளேன் 

முதலீட்டாளர்கள் 19135 புள்ளிகளை ,sensex உடைக்கும்வரை  buy  on  dips என்ற உத்தியை கையாளலாம்