ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் கடந்த நான்கு மாதங்களாக குறைந்த வந்த பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரியில் 6.62 சதவீதமாக இருந்த பணவீக்கம் பிப்ரவரியில் 6.84 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களான அரிசி, கோதுமை, வெங்காயம் மற்றும் பழவகைகளின் விலை உயர்வால் பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதேமாதத்தில் பணவீக்கம் 7.56 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் 6.84 சதவீதமாக உயர்வு
Posted by
vista consultants
on 14 March 2013
ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் கடந்த நான்கு மாதங்களாக குறைந்த வந்த பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரியில் 6.62 சதவீதமாக இருந்த பணவீக்கம் பிப்ரவரியில் 6.84 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களான அரிசி, கோதுமை, வெங்காயம் மற்றும் பழவகைகளின் விலை உயர்வால் பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதேமாதத்தில் பணவீக்கம் 7.56 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள்
Posted by
vista consultants
on 12 March 2013
Labels:
சிரிச்சு பழகுங்க
0
comments
அமெரிக்கர்கள் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள்
கிடைத்தன. உடனே அவர்கள்
அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள்
மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்
கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்.”
இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள்
கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே
டெலிபோனை பயன்படுத்தியுள் ளார்கள்”
தமிழர்களும் தோண்டினார்கள். 1000
அடி தாண்டியும் ஒன்றும்
கிடைக்கவில்லை.
உடனே அறிவித்தார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக்
காலத்திலேயே வயர்லெஸ்
தொழில்நுட்பத்தை ப் பயன்படுத்தியுள் ளார்கள்”
என்று....!
இந்திய பொருளாதார வளர்ச்சி6 சதவீதத்தை தாண்டும்: உலக வங்கி
Posted by
Unknown
இந்திய பொருளாதாரம், வரும் நிதியாண்டில், 6 சதவீதமும், வருங்காலத்தில்
அதற்கு மேலும் வளர்ச்சி காணும் என, உலக வங்கி தலைவர் ஜிம் யங் கிம்
தெரிவித்தார்.மூன்று நாள் பயணமாக டில்லி வந்துள்ள அவர், மத்திய
நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம்
பேசியதாவது:இந்தியாவின், 5 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏமாற்றம் அளிப்பதாக
உள்ளபோதிலும், இதுவரையிலான நிகழ்வும், இனி நடைபெற உள்ளதும் ஊக்கமளிக்கும்
வகையில் உள்ளன.
அவற்றின் அடிப்படையில், இந்தியா உயரிய வளர்ச்சி நிலையை எட்டும் என, நம்புகிறோம்.சர்வதேச சந்தை நிலவரங்கள் மேம்பட்டு வருகின்றன. ஏற்றுமதி சந்தை சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளது. அதனால், இந்தியாவும் சிறப்பாக வளர்ச்சி காணும்.கடந்த 2005ம் ஆண்டு முதல், 2010ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில், சர்வதேச பொருளாதாரத்தில், இந்தியாவின் பங்களிப்பு, இரு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை, நிதியமைச்சர் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு ஜிம் யங் கிம் தெரிவித்தார்.இதனிடையே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த 4-5 ஆண்டுகளில், 7-8 சதவீதமாக உயரும் என, திட்டக் குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
அவற்றின் அடிப்படையில், இந்தியா உயரிய வளர்ச்சி நிலையை எட்டும் என, நம்புகிறோம்.சர்வதேச சந்தை நிலவரங்கள் மேம்பட்டு வருகின்றன. ஏற்றுமதி சந்தை சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளது. அதனால், இந்தியாவும் சிறப்பாக வளர்ச்சி காணும்.கடந்த 2005ம் ஆண்டு முதல், 2010ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில், சர்வதேச பொருளாதாரத்தில், இந்தியாவின் பங்களிப்பு, இரு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை, நிதியமைச்சர் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு ஜிம் யங் கிம் தெரிவித்தார்.இதனிடையே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த 4-5 ஆண்டுகளில், 7-8 சதவீதமாக உயரும் என, திட்டக் குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களை கவர சிதம்பரம், வெளிநாடு செல்ல திட்டம்
Posted by
vista consultants
on 7 March 2013
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக வரும் ஏப்ரல், மே மாதங்களில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
மத்திய பட்ஜெட் குறித்து தொழிலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், "இந்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 5.2 சதவீதமாக இருக்கும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதையும் விட குறைவாக இருக்கும் என்று இப்போது தெரிகிறது. அடுத்த நிதியாண்டில் பற்றாக்குறையை 4.8 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க முயற்சிப்போம். நிதி நிர்வாகத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்று காட்டுவது இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று. அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். நிதிப் பற்றாக்குறையைவிட, நடப்புக் கணக்கு பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்னையாகும்.
இதனை சீர் செய்ய ஏற்றுமதிகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதனை முன்வைத்து தீவிர நடவடிக்கைகள் வேண்டியுள்ளது. அதிக அளவில் முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வர வேண்டியிருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துச் சொல்ல ஏப்ரல், மே மாதங்களில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்குச் செல்ல இருக்கிறார் .
செபி தலைவர் யு.கே.சின்ஹா வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களை கூடுதல் முதலீடு செய்ய அழைக்கும் விதமாக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பேச இருக்கிறார்.
புதிய வங்கிகள் தொடங்க விதிமுறைகள்
Posted by
vista consultants
on 24 February 2013
நாட்டில் புதிய வங்கிகளைத் தொடங்குவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.
வங்கித் துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த 1993-ஆம் ஆண்டில் வங்கித் துறையில் தனியாரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. கடைசியாக, 2001-ஆம் ஆண்டு கோடக் மஹிந்திரா மற்றும் யெஸ் வங்கி ஆகிய இரு வங்கிகள் உரிமம் பெற்றன.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தனியார் வங்கி தொடங்குவது குறித்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.
வங்கி தொடங்க திட்டமிடும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் முக்கியமானவை:
வங்கித் துறையில் ஈடுபடத் திட்டமிடும் நிறுவனங்களுக்கு முந்தைய 10 ஆண்டுகளில் சிறந்த செயல்பாடு இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச மூலதனம் ரூ. 500 கோடியாக இருக்க வேண்டும். அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், வெளிநாடுவாழ் இந்தியர் ஆகியோரின் சார்பில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 49% வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கி தொடங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களை இந்த ஆண்டு ஜூலை முதல் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். உரிமம் வழங்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் வங்கி தொடங்கப்பட வேண்டும். 3 ஆண்டுகால செயல்பாட்டுக்குப் பின்னர் வங்கியை பங்குச் சந்தையில் பட்டியலிட வேண்டும். வங்கியின் 25% கிளைகள் கிராமங்களில் அமைக்க வேண்டும். விண்ணப்பித்த நிறுவனங்களின் பெயர்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்படும். வங்கிக்கான உரிமம் வழங்கும் முன், அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்டறியப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





