வர்த்தகத்தில் எப்படி டோஜியை உபயோக்கிகலாம்?

candle stick -

doji ஐ உபயோகித்து எப்படி trade செய்வது என்பதைப் பார்ப்போம், Doji பல வகைப்பட்டாலும், ஒரு நாளின் open மற்றும் close - இவ்விரண்டும் 0.5% அளவுக்குள் வித்தியாசப்பட்டிருப்பதை மட்டும் Doji என கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

பெரும்பாலும் doiji, trend - ன் முடிவில் நல்ல பலனைத் தருமென்பதால், டோஜியை வைத்து முடிவெடுக்குமுன் பங்கின் ட்ரெண்டை பற்றி அறிவது அவசியம் ஆகும். பங்கின் ட்ரெண்டை முடிவு செய்ய boillingar band ஐயும் துணைக்கு வைத்துக் கொண்டால், பங்கைப் பற்றி நெருக்கமான முடிவை அறியலாம்.

மாதிரி போல்லிங்கேர் பேண்ட் வரைப்படம் :

போல்லிங்கேர் பாண்டில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியவை:
1. upper bollingar band 2. lower bollinger band and 3. moving average

இந்த மூன்று நிலைகளிலும் டோஜி எவ்வாறு அமைந்துள்ளது எனப் பார்த்து அதற்கு தகுந்தார்ப்போல் நம் வர்த்தக முடிவை (BUY OR SELL) எடுக்க வேண்டும்.
டோஜியின் open மற்றும் close இவ்விரண்டையும் ஸ்டாப் லாஸ் ஆக வைத்து, மறு நாளுக்கான வர்த்தகத்தில் ஈடுபடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

ஒரு நாளில் டோஜி அமைந்து, மறுநாள் வர்த்தகம் டோஜியின் ஓபன் விலையைத் தொடாமல் மேலேறிச் சென்றால் அது மேலும் விலை அதிகரிப்பற்க்கான அறிகுறியாகக் கொள்ளலாம். இது மாதிரியான அமைப்பு NIFTY SPOT CHART ல் அமையும் போதெல்லாம் அது ட்ரெண்டை உறுதி செய்வதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.




டோஜி அமைப்பு வர்த்தக வாய்ப்பை உருவாக்கிய இடங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது!!


Rajesh V Ravanappan

Disclaimer:
Above content is only our own observation from market and it is not proven theory . We are not responsible for any profit / loss from implementation of this strategy. Investors request to study market well before enter into any trade.



நீரில் இறங்காமல்... நீந்த முடியாது !!



பங்குச்சந்தையில் ஈடுபட முனையும் ஒருவர் அவருக்கான நோக்கத்தையும், இலக்கையும் தெளிவாகக்கொண்டிருப்பது அவசியம், அது ஆயிரங்களை ஈட்டுவதாக இருக்கலாம் அல்லது ஆயிரம் போட்டு கோடிகளை அடைவதாக இருக்கலாம், ஆனால் அது அவரவருடைய ஆசையாகவும், நோக்கமாகவும் இருக்கவேண்டும். பங்குச்சந்தையில் எதுவும் சாத்தியம். . சந்தை நம் சிந்தனை சக்தியை விடப் பெரியது.. இதில் ஈடுப்பட்டு நோக்கத்தை அடைவது என்பது உங்கள் கையில்தான் உள்ளது.


உங்களின் நோக்கம் அல்லது லட்சியமே, பங்குச்சந்தை கற்பதிலும், ஈடுபடுத்திக்கொள்வதிலும் உங்களுக்கு தூண்டுகோலாகவும் துணையாகவும் நிற்கும். உங்களைப் பற்றி உங்களை விட வேறு யாரும் சரியாக அறிந்திருக்க மாட்டார்கள். உங்கள் பணநிலவரம், குடும்பசூழல், தனிப்பட்ட இயல்பு, ரிஸ்க் எடுக்கும் அளவு என உங்களைவிட மற்றவர் புரிந்திருக்கமாட்டார்.

உங்கள் கனவு உங்களுக்கு சுகம், மற்றவருக்கு அது சுமை.. எனவே உங்கள் நோக்கத்தை நீங்களே அடைய முயலுங்கள்.. உங்களுக்கான பாதையை நீங்களே தீர்மானியுங்கள்!!!!

உதாரணமாக, வாரன் பப்பெட் அவர்களால் கோகோ கோலா பங்கை வாங்கி 30 வருடங்கள் வைத்திருக்க முடியும், தற்போதும் அவர் 1980 களில் வாங்கிய பங்குகளை வைத்துள்ளார். இது அனைவருக்கும் சாத்தியமா??
இது அவரின் தியரி அவருக்கு சரி ஆனால் எனக்கு தவறு.. என் பார்வை அவருக்கு தவறாக இருக்கலாம் ஆனால் அது அவருக்கு 1500% வருவாயை ஈட்டுக்கொடுத்துள்ளது.

பங்குச்சந்தை வாரன் பப்புட், ஜார்ஜ் சோரஸ் மற்றும் பல சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது, இன்றும் பங்கு சந்தை மக்களே உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் கடந்த 100 ஆண்டுகாலமாக சிறந்த இடத்தை பிடித்துள்ளனர். ஆனால் அவர்கள் மற்றவர்களின் பாதையில் பயணிக்கவில்லை, தங்களுக்கான தேவைகளை அவர்களே பூர்த்தி செய்தனர். ஒரு விளையாட்டு கோச் விளையாட்டின் நுணுக்கங்களை பற்றியும், சிறந்த விளையாட்டு யுக்திகளையும் சொல்லிக்கொடுப்பாறேயன்றி நமக்காக விளையாடமாட்டார்..

களம் உங்களுக்காக தயாராக உள்ளது, சிறிது சிறிதாக கற்போம்.. உங்கள் பாதை அமைய நங்கள் துணை நிற்கிறோம். ஆனால் பாதையை நீங்கள் தீர்மானியுங்கள்!!

வெற்றி கைக்குள்தான்.. சுவாசித்துப் பார்


சாகா வரம் வேண்டுமா?


சிற்றூர் ஒன்றில் ஒரு சிறு குடும்பம். குடும்பத்தலைவன் துணையில்லாத நிலையில் பத்துவயதான தன் ஒரே மகனுடன் வசித்து வந்தாள் அந்த தாய். தன் எதிர்காலத்தை அந்த மகனின் வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்ட சராசரி இந்திய நடுத்தரவர்க்க தாய். மகனின் எதிர்கால வாழ்க்கை ஒன்றைப் பற்றியே கடவுளிடம் நித்தம் வேண்டிக் கொண்டிருந்த அவர் வாழ்க்கையில் ஒரு பேரிடி. சாலையில் விளையாடிக்கொண்டிருந்த அந்த பத்து வயது சிறுவன், எதிர்பாரதவிதமாக சாலை விபத்தில் சிக்கி உயிர்நீத்தான். ஏற்கனவே துணைவன் இல்லாத அந்த அபலைப்பெண் இப்போது தன் ஒரே மகனும் இறந்துவிட, மீளாத் துயர் கொண்டார். வாழ்வின் பிடிப்பற்றவராய், கடவுளிடம் கோபம் கொண்டார்.
"நித்தம் உன்னையே வேண்டிக்கிடந்தேனே!! என் பக்தி பொய்யா? என் கடமை உண்மையில்லையா? எந்த வரமுமே கேட்காத எனக்கு ஏன், இருளை சாபமாக அளித்தாய்?" என கடவுளிடம் மன்றாடினார். அந்த ஏழைத் தாயின் துயர்குரல் கேட்டு அவள் முன் தோன்றினார் கடவுள்!! " என் மகளே !! இந்த உலகில் தோன்றிய அனைவருமே ஒருநாள் இறக்கக் கூடியவர்களே, உன் மகனும் உலக நியதியான சாவை அடைந்தானே அன்றி, இது உனக்கு வழங்கப்பட்ட சாபம் அல்ல" எனச் சொல்லி சாந்தப்படுத்த முயன்றார். அவர் சொன்ன எதனையும் கேட்கும் மனநினையில் இல்லை, மகனையிழந்த அந்த தாய். மகனின் உயிர் மீட்குமாறு மன்றாடினார். கடவுளின் எந்த சமாதானமும் உண்மை நிலையை அவருக்கு உணர்த்தமுடியவில்லை.

முடிவாய் கடவுள் இப்படி சொன்னார், " சரி மகளே !! உன் மகனை மீண்டும் உயிர்ப்பிக்க நான் சம்மதிக்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை !!", அவரே தொடர்ந்தார், " இந்த ஊரில் எவரொருவர் வீட்டில் இதுவரை மரணம் நிகழ்ந்ததில்லையோ, அவரிடம் சென்று ஒருப்படி தானியம் வாங்கி வா!! நான் உன் மகனை மீண்டும் உயிர்ப்பிக்க செய்கிறேன்" என்றார்.

தன் மகன் மீண்டும் உயிர்த்தெழ நம்பிக்கைக் கொண்ட அந்தப் பெண் அவ்வூரின் ஒவ்வொரு வீடாக சென்றாயினும், மரணம் இல்லாத வீட்டை அடைய முடிவுசெய்தார். முதல் வீட்டை அடைந்தார், ஒருப்படி தானியம் கேட்டவர் அவர்கள் தானியத்தை தர விளையுமுன் கடவுள் சொன்னதை கேட்டார், " உங்கள் வீட்டில் யாரேனும் மரணம் அடைந்ததுண்டா? ", சென்ற ஆண்டு அவர்கள் வீட்டில் அத்தை மரணமடைந்ததைக் குறிப்பிடவே, அடுத்த வீட்டிற்கு சென்றார். எப்படி ஒவ்வொரு வீடாக சென்றுக் கேட்டார்.. அவர்களும் அத்தையோ, மாமாவோ, அம்மா, அப்பா, மகன், மகள் - என ஏதாவது ஒரு உறவினர்களை இழந்தவர்களாகவே இருந்தனர்.. இறுதியாக எல்லா வீடுகளிலும் சோதித்து கடவுளிடம் திரும்பினார் அந்தப் பெண்.

கடவுள் சொன்னார், " மகளே!! மரணம் உலக நிகழ்வுகளில் ஒன்று!! இது யாருக்கும் தரப்படும் சாபம் அல்ல!! யாருடைய மரணமும் இயற்கையே" என்று அந்த பெண்ணை தெளிவுப்படுத்தி அனுப்பினார். மரணம் மாற்றமுடியாத இயற்க்கை நிகழ்வு, அதை நாம் உணர்ந்து நம் வாழ்க்கையை தொடரவேண்டும் என்ற உண்மை உணர்ந்தவராய் நகர்ந்தார் அந்தப்பெண்..

நமக்கேன் இந்த கதை?
மகனின் மரணத்தை ஏற்க மறுக்கும் அந்த பெண்ணின் மனநிலையே, பங்கு வர்த்தகத்தில் நட்டத்தை ஏற்க மறுப்பதின் பின்னுமுள்ளது!!

மீண்டும் ஒருமுறை பங்குவர்த்தகத்தை நிகழ்நிலை( Spot trading) வர்த்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுகிறேன். ஒரு வணிகர் தன் எல்லா வர்த்தகத்திலுமே ஒரே அளவு லாபம் வரவேண்டுமென எதிர்பார்ப்பதில்லை. வாடிக்கையாளருக்கு தகுந்ததுப்போல் தன் லாபவிகிதத்தை மாற்றி அமைக்க அவர் தயங்குவதில்லை. நிகழ்நிலை வர்த்தகத்தில் நட்டம் ஏற்படாமல் முடிவெடுக்க வர்த்தகருக்கு காலஅவகாசம் உள்ளது. ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் அவ்வாறன காலஅவகாசம் பங்குவர்த்தகருக்கு இருப்பதில்லை, உடனடியாக மாறிக்கொண்டே இருக்கும் பங்கு வர்த்தகத்தில் அதற்கு தகுந்தார்ப்போல் உடனடியாக முடிவெடுப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். எனவே லாப நட்டம் இரண்டையுமே ஏற்கும் மனோபக்குவம் கண்டிப்பாக ஒரு பங்கு வர்த்தகருக்கு வேண்டும்.

பங்குவர்த்தகத்தில் நட்டம் என்பது, நம் லாப விகிதத்தை குறைக்கும் செயல் அல்ல. இங்கு நட்டத்தை வர்த்தகர் ஏற்க வேண்டுமென நாம் குறிப்பிடுவது, ஸ்டாப் லாஸ் (STOP LOSS) ஆர்டரைப் பற்றி..
உடனடியாக மாறிக்கொண்டே இருக்கும் பங்கு வர்த்தகத்தில் அதற்கு தகுந்தார்ப்போல் உடனடியாக முடிவெடுப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். எனவேதான் உங்கள் ஒவ்வொரு வர்த்தகத்திற்கான ENTRY & EXIT இரண்டுமே முன்க்குட்டியே முடிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் (பங்கு ஆய்வாளரின் துணையோடு இது சாத்தியப் படும்). ஒருமுறை ENTER (BUY / SELL) ஆகிவிட்டால் உங்கள் NEARBY TARGET அல்லது STRICT STOP LOSS - இந்த இடங்களில் வெளியேறுவது எவ்வளவு முக்கியமென நாம் உணர்திருக்க வேண்டும்.

நட்டத்தையும் ஏற்று பங்கு வர்த்தகத்தில் நிகர லாபம் ஈட்டுவது என்பது ஒரு மந்திரம் அல்ல - அது ஒரு கலை...

MARKET IS NOT A MAGIC - IT IS A SYSTEM

Rajesh V Ravanappan

சந்தை மந்திரமா? 2



வர்த்தகத்திற்கும், நுகர்வோருக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தப்பின், பங்குச்சந்தையிலும், மற்ற முதலீட்டு வகைகளிலும் எப்படி நுகர்வு பண்பும், வர்த்தக பண்பும் இணைத்திருக்கின்றது என்பதைப் பார்ப்போம் . .
பங்குச்சந்தையுடன் ஒத்த மற்ற முதலீடுகள் - வங்கி வைப்பு, ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள், அரசு மற்றும் தனியார் பாண்டுகள்; இங்கு பங்குச்சந்தை என நாம் பொருள் கொள்வது எல்லா வகை ஆன்லைன் வர்த்தககங்களையும் சேர்த்துத்தான் (பங்கு, கமாடிட்டி மற்றும் கரன்சி).

பங்குச்சந்தையில், பங்குமுதலீடு (நுகர்வோர் பண்பு) - பங்குவர்த்தகம் என இருப்பிரிவு உண்டு, பங்குமுதலீட்டுக்கான வருவாய் எனப் பார்க்கும்போது பங்கின் விலை ஏற்றம் ஒரு கூடுதல் பயனேயன்றி, அதுவே பிரதான நோக்கம் அல்ல. பங்குமுதலீட்டுக்கான வருவாய் என்பது - டிவிடென்ட், போனஸ் போன்ற பங்கின் fundamental basic ஐப் பொறுத்தது. முதலீடு என்பது நுகர்வோர் பண்பு - ஒரு நுகர்வோர் பொருளை வாங்குவது அதன் நீண்டக்கால பயனின் அடிப்படையில் தானே அன்றி, அதனை மறுவிநியோகம் அல்லது மறுவிற்பனை செய்ய அல்ல என்பதை நாம் முன்பே கண்டதை இங்கே மற்றுமொருமுறை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
பங்குவர்த்தகம் - பங்கின் விலை மாறுப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஈடுபடும் எல்லா பிற பரிவர்த்தனைகளுமே (Day trading, Swing trading) பங்குவர்த்தகத்தின் கீழேதான் வரும்.(பங்குவர்த்தகர்களிடையேயான வேறுபாட்டை வேறுவொரு பதிவில் பார்ப்போம், அதுவரை short term, long term என எல்லா வகைகளையும் வர்த்தகர் என்றே கொள்வோம்)

இப்படி சொல்வதால் பங்குவர்த்தகத்தின் மேல் எந்தவிதமான பயமோ, நமக்கான தளம் இல்லையென்றோ நெகடிவாக முடிவேடுக்கவேண்டியதில்லை. ஒரு வியாபாரி எவ்வாறு அவரின் வணிகத்தை அன்றாடம் கையாளுகிறாரோ , அதன் அடிப்படையில் பங்குவர்த்தகத்தில் ஈடுபட பழக்கிக்கொண்டால் நாமும் பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம்.

பங்குச்சந்தையில் ஜெயிற்பதற்கு நாம் சிறந்த ஆய்வாளராக(analyst) இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. பங்குகளை பற்றிய சிறந்த அறிவே பங்குச்சந்தையில் வெற்றிப்பெற உதவும் என்றால், முதலீட்டாளர்களை விட ஆய்வாளர்களே அதிகம் பணம் கண்டவராக இருக்கவேண்டும். ஆனால் உண்மையில் யார் லாபம் ஈட்டுகிறார்கள்?? இது மில்லியன் டாலர் கேள்வியா?? பதில் சொல்வது மிகவும் கடினமா? பங்குச்சந்தையில் பணம் செய்பவர் பெரிய பணமுதலீட்டாளர்ஒ, சிறந்த ஆய்வாளரோ அல்ல.. ஆனால் ஒரு நல்ல வர்த்தகர் கண்டிப்பாக அவர்கள் இருவரையும் விட லாபம் ஈட்டுபவராக இருப்பார்..

இங்கே நாம் மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டுவருவோம் - "பங்குச்சந்தையில் நாம் அனைவரும் செய்யும் அடிப்படை தவறு எது என்று?? நாம் அனைவரும் பங்கு - வர்த்தகத்தில் ஈடுபடுகிறோம் ஆனால் ஒரு நுகர்வோரின் மனநிலையோடு.. இப்போது நாம் புரிந்துக்கொள்வோம் ஏன் நமக்கு தனிமனித கட்டுப்பாடு போதனைகள் சந்தையில் கர்ப்பிக்கப்படுகின்றன என்று... முன்னரே சொன்னப்படி பங்குச்சந்தையில் நாம் வர்த்தகர்கள் (வியாபாரிகள்), எனவே நமக்கு வர்த்தகர்களுக்குத் தேவைப்படும் மனோநிலை, மனோப்பக்குவம் தேவைப்படுகிறது"

இப்போது நமக்கு வர்த்தகர் என்றால் யார் என்ற கேள்வியே வந்திருக்கும்? சில உதாரணங்களைப் பார்ப்போம் - விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு வர்த்தகர், விவசாயப்பொருளை நுகர்வோரிடம் சேர்ப்பதன் மூலம், மற்ற இருவரையும் விட லாபமடைகிறார். கணினி விற்பவருக்கு கணினியின் தொழில்நுட்ப அறிவு, ஒரு எஞ்சினியரைப் போல இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரியல் எஸ்டேட் பிசினசில் லாபம் சம்பாரிப்பவர் கூட சிறந்த வர்த்தகரே அன்றி சிறந்த கட்டுமாளர் அல்ல..
இங்கே பங்கு ஆய்வாளரின் அறிவு - விவசாயி மற்றும் எஞ்சினியர் போல தொழில்நுட்ப தொடர்புடையது.. நாம் சிறந்த வர்த்தகர்கள்எனில் ஆய்வாளர்களின் உதவியுடன் எப்படி சிறப்பாக வர்த்தகம் செய்வது என்பதைப் பற்றி யோசிப்போமே அன்றி, நாமும் ஆய்வில் ஈடுபட தேவையில்லை..

மற்ற வணிகங்களிருந்து பங்குச்சந்தை மாறுபட்டது என்பதை இங்கு மறுக்க இயலாது, ( நகை வியாபாரிகள் அனைவரும் ஆன்லைன் கமோடிட்டி வர்த்தகத்தில் ஜெயிப்பதில்லை).. நாம் இங்கே மீண்டும் வலியுறுத்துவது - வர்த்தககர்களின் சில முக்கிய பண்புகளை பின்ப்பற்றுவதேஅன்றி, நிகழ்கால வர்த்தகத்தை அப்படியே செயலாக்குவது அல்ல..

பொறுமை, நிதானம் தவிர ஒரு வர்த்தகரின் மற்றபிற பண்புகளை அலசுவதன் மூலம், பங்குச்சந்தைக்கு ஏற்ற வர்த்தகராக நாம் எவ்வாறு மாற முடியும் என்பதை வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். .


Rajesh V Ravanappan

சந்தை மந்திரமா? 1

நுகர்வோருக்கும், வர்த்தகருக்கும் வர்த்தகப்பொருளை அணுகுவதில் அடிப்படை வேறுபாடு உண்டு. ஆனால் முதலீட்டாளரும் நுகர்வோரும் ஒன்றா? காலையில் காய்கனி வாங்குவதும், தங்கம் வாங்குவதும் ஒத்த செயல்களா? இப்படி சில ஐயப்பாடுகள் நமக்கு வருவது நியாயம்தான்.

தங்கம் நுகர்வதும், காய்கனி நுகர்வதும் ஒன்றா என்றால் நமக்கு சந்தேகம் எழுகிறது. . ஆனால் இப்படிக் கேட்டுப்பாருங்கள் தங்கம் விற்பதும், காய்கனி விற்பதும் ஒத்த செயல்களா? கண்டிப்பாக ஒத்த செயல்களே. . இவ்விரு பொருட்கள் என்றில்லை அனைத்துவகையான பொருள் விற்போரும், கட்டண சேவை வழங்குவோரும் அவர் அவர்களின் வர்த்தகப்பொருட்களை ஒரே கண்ணோட்டத்துடனே அணுகுகின்றனர். அவர்களின் அடிப்படை நோக்கம் " தங்கள் பொருட்களுக்கு உற்பத்தி/ கொள்முதல் விலையை விட விற்பனை விலை கண்டிப்பாக அதிகமாக இருக்க வேண்டும்" - இதுவே எந்த ஒரு வர்த்தகரின் அடிப்படை தேவை, லாபம் இன்றி அவர் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை நாம் வர்த்தகர்கள் என்று சொல்வதில்லை.. டிரஸ்ட் வொர்க் என்று வகைப் படுத்துகிறோம். .

இப்போது சொல்லுங்கள் நாம் ஒவ்வொருவரும் பங்குச்சந்தையில் ஈடுபடும்போது மேற்குறிய எந்த வகையான மனோநிலையுடன் நாம் பங்குச்சந்தையை அணுகுகிறோம்? தங்கம் அல்லது காய்கனி வாங்குபவர் போல் அணுகுகிறோமா? ? அல்லது அவற்றை விற்பவர் (அ) வர்த்தகர் போல பங்குச்சந்தையை அணுகுகிறோமா? ? கண்டிப்பாக லாபம்ஈட்டுவதே என கூறிவிடலாம். .
ஆனால் மற்ற முதலீடுகளும் ( வங்கி வைப்பு, ரியல் எஸ்டேட், தங்கம்) லாபம் ஈட்டுகின்டறனவே!!! ஆனால் அவற்றை நாம் வாங்கும்போது அல்லது முதலீடு செய்வதை வர்த்தகர் மனநிலையுடன் ஒப்பிட்டுபார்ப்பதில்லையே ? ஏன் பங்குச்சந்தை லாபமஈட்டுவது மட்டும் எப்படி வர்த்தக கண்ணோட்டமாகும்??
பங்குச்சந்தை மட்டுமே வர்த்தகக் கண்ணோட்டம் கொண்டதா? அல்ல மற்ற முதலீடுகள் நாம் மேற்கண்ட வர்த்தக மனோநிலை அற்றதா??
பதில் - மற்ற முதலீடுகளும் வர்த்தக மனோநிலை கொண்டவையே... பங்குச்சந்தையும் தங்கம் மற்றும் காய்கனி வாங்குவதைப் போல நுகர்வோர் பண்பை உள்ளடக்கியதே... இதன் அடிப்படை வேறுபாடு நாம் முதலிடுகளை அணுகுவதற்கான நோக்கத்தில்தான் உள்ளது..
நம் முதலீட்டின் நோக்கம் மறுவிநியோகம் இல்லையெனில் நாம் நுகர்வோர் என்ற வகையில் சேருவோம்.. அவ்வாறன்றி எந்த முதலீட்டையும் மறுவிநியோக நோக்கதினுடன் அணுகினால் நாம் வர்த்தகர்களாகிறோம். . ஒருவர் வர்த்தகத்தில் நுகர்வோராக ஈடுபடும் போதுஅவசியப்படாத சில விஷயங்கள், வர்த்தகராக - வியாபாரியாக ஈடுபடும்போது தேவைப்படுகிறது.. அதுவே நாம் நம் முன்னுரையில் கண்ட தனிமனிதக் கட்டுப்பாடுகள்!!!
அனேகமாக இப்போது நாம் தெளிவாக இருப்போம் என நம்புகிறேன், பங்குச்சந்தையில் நாம் அனைவரும் செய்யும் அடிப்படை தவறு எது என்று?? நாம் அனைவரும் பங்கு - வர்த்தகத்தில் ஈடுபடுகிறோம் ஆனால் ஒரு நுகர்வோரின் மனநிலையோடு.. இப்போது நாம் புரிந்துக்கொள்வோம் ஏன் நமக்கு தனிமனித கட்டுப்பாடு போதனைகள் சந்தையில் கர்ப்பிக்கப்படுகின்றன என்று... முன்னரே சொன்னப்படி பங்குச்சந்தையில் நாம் வர்த்தகர்கள் (வியாபாரிகள்), எனவே நமக்கு வர்த்தகர்களுக்குத் தேவைப்படும் மனோநிலை, மனோப்பக்குவம் தேவைப்படுகிறது.

வர்த்தகத்திற்கும், நுகர்வோருக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தப்பின், பங்குச்சந்தையிலும், மற்ற முதலீட்டு வகைகளிலும் எப்படி நுகர்வு பண்பும், வர்த்தக பண்பும் இணைத்திருக்கின்றது என்பதைப் பார்ப்பது அவசியமாகும் . .
ஒருவர் எவ்வாறு முதலீடு வகைகளில் (பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், வங்கி வைப்பு) நுகர்வோராகவும், வர்த்தகராகவும் செயல்பட வாய்ப்புள்ளது என அடுத்தப் பதிவில் பார்ப்போம்..

Rajesh V Ravanappan