பரம ரகசியம் 2

TRADING STRATEGY யை ரகசியமாக வைப்பதென்பது ஒரு சுயநல காரியம் அல்ல. பங்குசந்தையில் INTRA DAY TRADE என்பது கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனை போன்றது.. ஒரே வித்தையை அனைவரும் பயன்படுத்துவதென்பது பெரிய பலன்கள் எதுவும் கிடைத்திறாது.


மேலும் பங்குச்சந்தை BUYER மற்றும் SELLER இடையேயான ஒரு கயிறு இழுக்கும் போட்டியைப் போன்றது. யார் ஜெயிப்பார் என முன்கூட்டியே அறிந்து அனைவரும் ஒரே முனையில் இழுக்க முற் படுவமேயானால்.. போட்டியே கேள்விக்குறியாகிவிடும். ஆதலால் எந்த பங்கு ஜெயிக்கும் என தேடுவதை விட என்ன செய்தால் ஜெயிப்போம் என்ற விழிப்புணர்வே INTRA DAY இல் முக்கியம்.



நாம் செய்ய வேண்டியது இதுதான் .. பங்குசந்தை மிகப்பெரிய கடலைப் போன்றது. . அப்படியே அள்ள ஆசைப்படாமல், நம் தேவைகளை முன்கூட்டியே  வரையறுத்துக்கொண்டு நமது எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க முயல வேண்டும். இல்லையென்றால் எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் போல உதவிக்கு ஆள் இல்லாமல் திண்டாட வேண்டியதுதான்.. !! 

மீண்டும் சிந்திப்போம்..!!!