எண்ணெய் நிறுவனங்களின் 3 மாத நஷ்டம் ரூ.21,374!!

டெல்லி: 2011-12ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.21,374 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுவிட்டதால் அதனால் இந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏதும் இல்லை. ஆனால், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.64,900 கோடியாகும்.

ஒரு லிட்டர் டீசல் விற்கையில் ரூ.7.06ம், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயை விற்கும்போது ரூ.25.90ம், ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவை விற்கையில் ரூ.270.50ம் இந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

அதாவது ஒரு நாளைக்கு இந்த 3 நிறுவனங்களுக்கும் ரூ.272 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.