நான் இரசிக்கின்ற முதலீட்டாளர்கள்

நான் இரசித்த, இன்னும் தொடர்ந்து இரசிக்கின்ற முதலீட்டாளர்களை

1. வாரன் பஃபட் (warren Buffett)

பஞ்ச் டலயாக் : Risk comes from not knowing what you're doing

பிறப்பு : 1930, ஒமாஹா, நெப்ராஸ்கா மாகாணம், அமெரிக்கா

* நடிப்புக்கு சிவாஜி என்றால், முதலீட்டிற்கு வாரன்.
* அவரது 'பிராண்ட்' முத்திரையைக் குத்தி எதை எழுதினாலும் விற்றுத் தீர்ந்து விடுவது வாடிக்கை.
* இவர் 1965 ஆம் ஆண்டு அப்போது நலிந்திருந்த Berkshire Hathway நிறுவனத்தைக் கையில் எடுத்த சமயத்தில் அதன் பங்குகளை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தால், இன்றைய மதிப்பு சுமார் 50 மில்லியன் (5 கோடி). அதே 1965 இல் அதே பத்தாயிரத்தை S&P குறியீட்டில் முதலிட்டிருந்தால் அது வெறும் ஐந்து இலட்சமாகத் தான் வளர்ந்திருக்கும்.
* 40 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துச் சேர்த்து வைத்திருந்தாலும் தான் இறந்த பின் அதன் பெரும்பகுதி அனாதைகளுக்குப் போய்ச் சேருமாறு உயில் எழுதியிருக்கிறார்.
* ஒமாஹாவின் முனிவர் (Oracle of Omaha) எனப் பலராலும் செல்லமாக அழைக்கப்படுபவர்.
* 40 ஆண்டுகளுக்கு முன் முப்பதாயிரம் டாலருக்கு வாங்கிய அதே வீட்டில் இன்னும் வசித்து வருகிறார்.
* ஒழுக்கம், கட்டுப்பாடு, பகுத்தறிதல், பொறுமை ஆகியவற்றைப் போதிப்பதோடு நில்லாமல், கடைபிடித்துக் காட்டியவர்.
* 1990 களின் இறுதியில் சகட்டுமேனிக்கு ஏறிய 'டெக் & டாட் காம்' கம்பெனிகளைத் தவிர்த்த வெகு சில முதலீட்டாளர்களில் தலையாயவர்.
* ஆங்கிலத்தில் வேடிக்கையாகச் சொல்வார்கள். You might be an atheist; but when it comes to investing Warren is your god
* பங்குதாரகளுக்கு அனுப்பும் ஆண்டறிக்கையில் இவர் எழுதும் கருத்துக்கள், நேரு இந்திராவிற்கு எழுதிய கடிதங்களின் அளவிற்குப் பிரபலம்.


2. ஜார்ஜ் சோரஸ் (George Soros)



பஞ்ச் டயலாக்: "It's not whether you're right or wrong that's important, but how much money you make when you're right and how much you lose when you're wrong."

பிறப்பு : 1930, புடாபெஸ்ட், ஹங்கேரி

* சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல ஆரம்பித்தது இவர் வாழ்க்கை.
* டவுசர் போட்ட காலத்தில் ஹிட்லரின் இனவெறிப் படைகளுக்குப் பயந்து பதுங்கு குழியில் ஒளிந்து வாழ்ந்த ஹங்கேரி யூதச் சிறுவன் ஜார்ஜ்.
* இங்கிலந்தில் அகதியாகத் தஞ்சம் புகுந்து, அங்கே பட்டம் பெற்றுப் பின்னர் அமெரிக்கா வந்தவர்.
* வாரன் பஃபட் பேட்டிங் திராவிட் பாணி என்றால், ஜார்ஜுக்கு சேவாக் பாணி.

* 'விலை இறங்கும் முன் விற்க வேண்டும்' எனப் பலர் நினைப்பர். ஆனால் சோரஸ் விற்றதால் மட்டுமே விலை இறங்கிய காலமெல்லாம் உண்டு.
* ஷேர் மார்க்கெட் தவிர்த்து, நாணயம், தங்கம் என இவர் தொடதே இடமே இல்லை.
* ஜான் மேஜர் ஆட்சிக்காலத்தில் ஒரே நாளில் பிடிட்டிஷ் நாணயமான 'பவுண்ட்' ஐ விற்று ஒரு பில்லியன் டாலர் (ரூ4,500 கோடி) எடுத்தவர்.
* இவர் சொன்ன ஒரேயொரு வார்த்தைக்காக ரஷ்யப் பங்குச் சந்தை ஒரு மணி நேரத்தில் 12% சரிந்தது எனக் கூறுவார்கள்.
* சோரஸ் ஆரம்பித்த குவாண்டம் நிதியில் (quantum fund) 1969 ஆம் ஆண்டு ஒரு ரூபாய் இட்டிருந்தால் 1994 இல் அது 1,500 ரூபாயாகப் பெருகியிருக்கும்.

3. பீட்டர் லிஞ்ச் (Peter Lynch)

பஞ்ச் டயலாக்: Go for a business that any idiot can run - because sooner or later, any idiot probably is going to run it.
பிறப்பு : 1944 அமெரிக்கா

* 1978 இல் இவரது Fidelity Magellan Fund நிதியில் ஒரு ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு 1990 இல் அது 700 ரூபாயாகத் திரும்பக் கிடைத்திருக்கும்.
* 46 வயதில் ஓய்வு தாமாக விரும்பி ஓய்வு பெற்ற மனிதர்.
* உலகின் மிகப் புகழ் மிக்க மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகிகளில் ஒருவர்
* அப்போதைக்கு எது சிறப்பாக இருக்கிறதோ அதில் முதலீடு செய்து காலத்திற்குத் தக மாற்றிக் கொள்வதால் இவரைப் 'பச்சோந்தி' என்று கூடக் குறிப்பிடுவார்கள்.
* இவர் எழுதிய One upon Wall street புத்தகம் பற்றித் தெரியாதவர்கள் மிகக் குறைவு.

4. ஜான் டெம்பிள்டன் (John Templeton)

பஞ்ச் டயலாக்: The time of maximum pessimism is the best time to buy and the time of maximum optimism is the best time to sell

பிறப்பு : 1912 டென்னிசி, அமெரிக்கா

* டெம்பிள்டன் குழுமத்தைத் துவங்கியவர்.
* உலக மியூச்சுவல் ஃபண்ட்களில் தந்தை என அறியப்படுபவர்.
* உலகப்போர் நடந்த சமயத்தில் வங்கியில் எவ்வளவு கடன் கிடக்குமோ அவ்வளவு கடன் வாங்கி, ஒரு டாலருக்குக் குறைவாக விற்ற அத்தனை ஷேர்களையும் வாங்கிய இருபது(கள்) வயதுத் துணிச்சல்காரர்.
* நான்கு வருடத்தில் அது நான்கு மடங்கானது அதன் பின்னர் சரித்திரமாகிப் போன சங்கதி.
* இவரிடத்தில் 65 ஆயிரம் டாலர் கொடுத்துவைத்த லெராய் என்பவர், நாற்பது வருடத்திற்குப் பின் 3.7 கோடி டாலராகத் திருப்பிப் பெற்றாராம்.


5. ராகேஷ் ஜுஞ்சுன்வாலா

பிறப்பு: 1960, மும்பை, இந்தியா

* படித்தது CA, வெளிநாடு சென்று ஆடிட்டர் வேலை பார்க்காமல், 1985 ஆம் ஆண்டு ரூ5,000 த்துடன் மும்பைப் பங்குச் சந்தையில் நுழைந்தவர்.
* ஐந்தாயிரம் இன்று பல ஆயிரம் கோடிகளைத் தாண்டி நிற்கிறது.
இருந்தாலும் உண்மையான சொத்து மதிப்பினை மீடியாவிற்குச் சொல்வதில் இவருக்கு விருப்பம் இல்லை.
* இவர் கால்பதித்த போது 150 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் இன்று 20,000 புள்ளிகளில், கிட்டத்தட்ட 70 மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், அண்ணாச்சி பல ஆயிரம் மடங்கு தன் பணத்தைப் பெருக்கியுள்ளார்.
* BSE சந்தையில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த சமோசா விற்பவரை இன்னும் நினைத்துப் பார்க்கிறார்.
* இந்தியாவில் பங்கு முதலீட்டைப் புரிந்து கொண்டு சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ராகேஷ் முன் மாதிரி எனச் சொல்லலாம்.


பெஞ்சமின் கிரகாம் போன்ற சிலர் இன்னும் இருந்தாலும், ஆறாவது யார் ரசிக்கப்படவேண்டும்? நம்மில் ஒருவர்............

from:panguvanigam.blogspot.com/2006/06/6.html

தங்கம்

ஏற்கனவே கூறியபடி தங்கம் புதிய உச்சத்தை தொடுகிறது

தங்கம் மேலும் புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கபடுகிறது

முந்தைய பதிவை காண இங்கே செல்லவும்

சந்தையின் போக்கு

இந்திய பங்குசந்தைகள் இரண்டு வார ஏற்றத்திற்கு பிறகு weekly chart இல் bearish hammer என்ற candlestick அமைப்புடன் trendline இல் இருந்து resist ஆகி doji ஆக முடிவடைந்து உள்ளது .

இது ஒரு bearish signal ஆகும்

5177 சந்தை மேல் நோக்கி வந்தது, 6338 இருந்து வீழ்ச்சிக்கான retracement rally போன்று தோன்றுகிறது

நிஃப்டி p/e ratio 22.36 என்ற புள்ளிகளில் உள்ளது

market updates மற்றும் value picks & long term investment ideas ஆகியவை எங்களுடைய ஆங்கில வலைப்பூவில் update செய்யபடுகிறது


பங்கு மதிப்பு

நிறுவனத்தின் உண்மையான (பங்கு) மதிப்பு

-குப்புசாமி செல்லமுத்து


பொருளாதாரத் துறையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம் பணத்தின் உண்மையான மதிப்பை அறிந்து கொள்வது தான். காலம் பொன் போன்றது; அதன் மதிப்பை அறியாமல் கால விரயம் செய்பவர்கள் சமுதாயப் பிணி. பணமும், காலமும் தராசில் நிறுக்கப் பட்டால் இரண்டும் ஒரு நிறை, ஒரு எடை.


பங்குகள் வாங்கும் போது விலையைத் தான் பார்க்கிறோமே தவிர, வாங்குகின்ற தொழிலின் மதிப்பைப் பார்ப்பதேயில்லை. 'அதெல்லாம் எப்படிப் பாக்கறது?' கேள்வி எழலாம். உலகளாவிய நியதி ஒன்று சொல்கிறேன். ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம். முதல் முறை வாசிக்கும் போது புரிவதற்குச் சற்று கடினமாக இருக்கலாம். மேற்கொண்டு படித்துவிட்டு, பதிவின் இறுதியில் இன்னோர் தடவை திருப்பி வாசித்தால் புரிவது உறுதி.


அதற்கு முன் தற்போதைய மதிப்பைப் பற்றிய ஒரு சிறு பார்வை.இன்றைய நூறு ரூபாய் நாளைய நூறு ரூபாயை விடப் பெரிது. சுமார் 5% பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அடுத்த வருடம் கிடைக்கும் ரூ100, இன்றைய ரூ95 க்குச் சமம். இது தான் வருங்காலப் பணத்தின் தற்போதைய மதிப்பு (present value of future cash). ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ரூ100 சம்பாதிக்கிறோம் எனில், அந்த சம்பாத்தியத்தின் தற்போதைய மொத்த மதிப்பு ரூ429.82.




"நூறு ரூவா குடு. 5 வருசத்துல அதத் திருப்பித்தரேன்" என யாராவது கேட்டா, "சாரி. 77 ரூவா முப்பத்தெட்டுக் காசுக்கு மேல குடுக்க முடியாது"ன்னு சொல்லிருங்க.


சரி, தற்போதைய மதிப்பு (PV - Present value) பற்றிப் பார்த்தோம். ஒரு தொழிலில் முதலீடு செய்யும் போது எங்கனம் இதை பயன்படுத்துவது என ஒரு எளிய உதாரணம் கொண்டு ஆராயலாம்.


திரு.காசப்பன் கார் ஒன்றை, ஓட்டுனர் வைத்து வாடகைக்கு விட்டுச் சம்பாதித்து வருகிறார். ரொம்பப் பழைய காராகையால் இன்னும் மூன்று வருடம் தான் ஓடும். அதற்கு மேல் அதைப் பேரிச்சம் பழத்துக்குத் தான் போடவேண்டும். சும்மா ஜோக்குக்காகச் சொன்னாலும், மூன்று வருடத்தில் விற்றால் ஒன்றரை இலட்சம் கிடைக்கும். அதற்கு மேல் வண்டி ஓடாது என வைத்துக் கொள்வோம். சீசனுக்குத் தகுந்த மாதிரி வருடா வருடம் டிரைவர் சம்பளம், போலீஸ் மாமூல், அரசுக்கான வரி இவையெல்லாம் போக கிடைக்கும் இலாபத்தையும் கீழே கொடுத்துள்ளோம். நம் கணக்கில் பணவீக்க வீதம் 5% என்பதாகக் கொள்வோம்.


முதலாம் ஆண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ60,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ57,000

இரண்டாமாண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ50,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ45,125


மூன்றாமாண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ60,000
கார் விற்ற காசு = ரூ1,50,000
மொத்தப் பணம் = ரூ2,10,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ1,80.048.80

மூன்று வருடத்திலும் கிடைக்கும் மொத்தப் பணத்தின் நிகர மதிப்பு = 57,000 + 45,125 + 1,80.048.80 = ரூ2,82,173.8


இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், காசப்பனிடம் இருந்து கார் பிசினஸை நீங்கள் வாங்கினால், இரண்டு இலட்சத்து என்பதாயிரத்துக்கு மேல் கொடுப்பது புத்திசாலித்தனமல்ல. அதே ஒரு நிறுவனமாக இருந்து அதில் 1000 பங்குகள் இருந்தால், பங்கு ஒன்றுக்கு 282 ரூபாய் தான் அதிகபட்ச விலை. சந்தையில் 400 ரூபாய்க்கு அவை விற்பனையானால், நீங்கள் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.


இப்பதிவின் ஆரம்பத்தின் சொன்ன உலக நியதியை மீண்டுமொரு முறை வாசிக்கலாமா? "ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம்."


தற்போதைய பணமதிப்புத் தத்துவம் வாழ்வின் எல்லா இடங்களிலும் கையாளப்படலாம். பங்கு முதலீடு, கடன் கொடுத்தல், ஆராய்ச்சியில் அதிகப் படியான பணத்தை விரயமாக்குதல், கடன் வாங்கிப் மேல் படிப்புப் படித்தல், வங்கி வைப்பீட்டுத் திட்டத்தில் பணம் போடுதல் என எல்லாவற்றிலும்.. அட அவ்வளவு ஏங்க, மாமனார் வரதட்சினை இந்த வருசத்துக்குப் பதிலா அடுத்த வருசம் தருவதாச் சொன்னாக் கூட ஏமாந்துராதீங்க.


வளம் பெறுவோம்.


பி.கு:

1. பணவீக்கம் 5% என்பது கணக்கிட எளிதான ஒரு கற்பனை. நிஜ வாழ்வில் இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ அது இருக்கலாம்.

2. காசப்பன் கார் தொழிலில் (3 வருடமும்) கிடைக்கும் வருவாய் எளிதாக முன் கூட்டியே நிர்ணயம் செய்தோம். நடைமுறையில் அது சாத்தியமல்ல. ஒரு தொழில் சிறக்குமா சிறக்காதா, எவ்வளவு வருவாய் ஈட்டித் தரும் என்பதெல்லாம் அறுதியிட்டுக் கூற முடியாத விஷயங்கள். பங்குச் சந்தையில் விற்று, வாங்கும் எவரும் தத்தமது எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே விலையை நிர்ணயிப்பார்கள் (இதுவும் ஒரு கற்பனையா??)

3. சுலபமாக கணக்குப் போட ஏதுவாக, கார் வாடகைக்கு விடும் தொழிலின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் எனக் கொண்டோம். மூன்று வருடத்தில் மண்டையைப் போடும் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதில்லை என்பது ஆறுதல்

4. வரதட்சனை குறித்தான வரிகள் நகைச்சுவைக்காக மட்டுமே


from:http://panguvanigam.blogspot.com/2006/05/blog-post_27.html