நான் இரசிக்கின்ற முதலீட்டாளர்கள்

நான் இரசித்த, இன்னும் தொடர்ந்து இரசிக்கின்ற முதலீட்டாளர்களை

1. வாரன் பஃபட் (warren Buffett)

பஞ்ச் டலயாக் : Risk comes from not knowing what you're doing

பிறப்பு : 1930, ஒமாஹா, நெப்ராஸ்கா மாகாணம், அமெரிக்கா

* நடிப்புக்கு சிவாஜி என்றால், முதலீட்டிற்கு வாரன்.
* அவரது 'பிராண்ட்' முத்திரையைக் குத்தி எதை எழுதினாலும் விற்றுத் தீர்ந்து விடுவது வாடிக்கை.
* இவர் 1965 ஆம் ஆண்டு அப்போது நலிந்திருந்த Berkshire Hathway நிறுவனத்தைக் கையில் எடுத்த சமயத்தில் அதன் பங்குகளை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தால், இன்றைய மதிப்பு சுமார் 50 மில்லியன் (5 கோடி). அதே 1965 இல் அதே பத்தாயிரத்தை S&P குறியீட்டில் முதலிட்டிருந்தால் அது வெறும் ஐந்து இலட்சமாகத் தான் வளர்ந்திருக்கும்.
* 40 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துச் சேர்த்து வைத்திருந்தாலும் தான் இறந்த பின் அதன் பெரும்பகுதி அனாதைகளுக்குப் போய்ச் சேருமாறு உயில் எழுதியிருக்கிறார்.
* ஒமாஹாவின் முனிவர் (Oracle of Omaha) எனப் பலராலும் செல்லமாக அழைக்கப்படுபவர்.
* 40 ஆண்டுகளுக்கு முன் முப்பதாயிரம் டாலருக்கு வாங்கிய அதே வீட்டில் இன்னும் வசித்து வருகிறார்.
* ஒழுக்கம், கட்டுப்பாடு, பகுத்தறிதல், பொறுமை ஆகியவற்றைப் போதிப்பதோடு நில்லாமல், கடைபிடித்துக் காட்டியவர்.
* 1990 களின் இறுதியில் சகட்டுமேனிக்கு ஏறிய 'டெக் & டாட் காம்' கம்பெனிகளைத் தவிர்த்த வெகு சில முதலீட்டாளர்களில் தலையாயவர்.
* ஆங்கிலத்தில் வேடிக்கையாகச் சொல்வார்கள். You might be an atheist; but when it comes to investing Warren is your god
* பங்குதாரகளுக்கு அனுப்பும் ஆண்டறிக்கையில் இவர் எழுதும் கருத்துக்கள், நேரு இந்திராவிற்கு எழுதிய கடிதங்களின் அளவிற்குப் பிரபலம்.


2. ஜார்ஜ் சோரஸ் (George Soros)



பஞ்ச் டயலாக்: "It's not whether you're right or wrong that's important, but how much money you make when you're right and how much you lose when you're wrong."

பிறப்பு : 1930, புடாபெஸ்ட், ஹங்கேரி

* சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல ஆரம்பித்தது இவர் வாழ்க்கை.
* டவுசர் போட்ட காலத்தில் ஹிட்லரின் இனவெறிப் படைகளுக்குப் பயந்து பதுங்கு குழியில் ஒளிந்து வாழ்ந்த ஹங்கேரி யூதச் சிறுவன் ஜார்ஜ்.
* இங்கிலந்தில் அகதியாகத் தஞ்சம் புகுந்து, அங்கே பட்டம் பெற்றுப் பின்னர் அமெரிக்கா வந்தவர்.
* வாரன் பஃபட் பேட்டிங் திராவிட் பாணி என்றால், ஜார்ஜுக்கு சேவாக் பாணி.

* 'விலை இறங்கும் முன் விற்க வேண்டும்' எனப் பலர் நினைப்பர். ஆனால் சோரஸ் விற்றதால் மட்டுமே விலை இறங்கிய காலமெல்லாம் உண்டு.
* ஷேர் மார்க்கெட் தவிர்த்து, நாணயம், தங்கம் என இவர் தொடதே இடமே இல்லை.
* ஜான் மேஜர் ஆட்சிக்காலத்தில் ஒரே நாளில் பிடிட்டிஷ் நாணயமான 'பவுண்ட்' ஐ விற்று ஒரு பில்லியன் டாலர் (ரூ4,500 கோடி) எடுத்தவர்.
* இவர் சொன்ன ஒரேயொரு வார்த்தைக்காக ரஷ்யப் பங்குச் சந்தை ஒரு மணி நேரத்தில் 12% சரிந்தது எனக் கூறுவார்கள்.
* சோரஸ் ஆரம்பித்த குவாண்டம் நிதியில் (quantum fund) 1969 ஆம் ஆண்டு ஒரு ரூபாய் இட்டிருந்தால் 1994 இல் அது 1,500 ரூபாயாகப் பெருகியிருக்கும்.

3. பீட்டர் லிஞ்ச் (Peter Lynch)

பஞ்ச் டயலாக்: Go for a business that any idiot can run - because sooner or later, any idiot probably is going to run it.
பிறப்பு : 1944 அமெரிக்கா

* 1978 இல் இவரது Fidelity Magellan Fund நிதியில் ஒரு ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு 1990 இல் அது 700 ரூபாயாகத் திரும்பக் கிடைத்திருக்கும்.
* 46 வயதில் ஓய்வு தாமாக விரும்பி ஓய்வு பெற்ற மனிதர்.
* உலகின் மிகப் புகழ் மிக்க மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகிகளில் ஒருவர்
* அப்போதைக்கு எது சிறப்பாக இருக்கிறதோ அதில் முதலீடு செய்து காலத்திற்குத் தக மாற்றிக் கொள்வதால் இவரைப் 'பச்சோந்தி' என்று கூடக் குறிப்பிடுவார்கள்.
* இவர் எழுதிய One upon Wall street புத்தகம் பற்றித் தெரியாதவர்கள் மிகக் குறைவு.

4. ஜான் டெம்பிள்டன் (John Templeton)

பஞ்ச் டயலாக்: The time of maximum pessimism is the best time to buy and the time of maximum optimism is the best time to sell

பிறப்பு : 1912 டென்னிசி, அமெரிக்கா

* டெம்பிள்டன் குழுமத்தைத் துவங்கியவர்.
* உலக மியூச்சுவல் ஃபண்ட்களில் தந்தை என அறியப்படுபவர்.
* உலகப்போர் நடந்த சமயத்தில் வங்கியில் எவ்வளவு கடன் கிடக்குமோ அவ்வளவு கடன் வாங்கி, ஒரு டாலருக்குக் குறைவாக விற்ற அத்தனை ஷேர்களையும் வாங்கிய இருபது(கள்) வயதுத் துணிச்சல்காரர்.
* நான்கு வருடத்தில் அது நான்கு மடங்கானது அதன் பின்னர் சரித்திரமாகிப் போன சங்கதி.
* இவரிடத்தில் 65 ஆயிரம் டாலர் கொடுத்துவைத்த லெராய் என்பவர், நாற்பது வருடத்திற்குப் பின் 3.7 கோடி டாலராகத் திருப்பிப் பெற்றாராம்.


5. ராகேஷ் ஜுஞ்சுன்வாலா

பிறப்பு: 1960, மும்பை, இந்தியா

* படித்தது CA, வெளிநாடு சென்று ஆடிட்டர் வேலை பார்க்காமல், 1985 ஆம் ஆண்டு ரூ5,000 த்துடன் மும்பைப் பங்குச் சந்தையில் நுழைந்தவர்.
* ஐந்தாயிரம் இன்று பல ஆயிரம் கோடிகளைத் தாண்டி நிற்கிறது.
இருந்தாலும் உண்மையான சொத்து மதிப்பினை மீடியாவிற்குச் சொல்வதில் இவருக்கு விருப்பம் இல்லை.
* இவர் கால்பதித்த போது 150 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் இன்று 20,000 புள்ளிகளில், கிட்டத்தட்ட 70 மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், அண்ணாச்சி பல ஆயிரம் மடங்கு தன் பணத்தைப் பெருக்கியுள்ளார்.
* BSE சந்தையில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த சமோசா விற்பவரை இன்னும் நினைத்துப் பார்க்கிறார்.
* இந்தியாவில் பங்கு முதலீட்டைப் புரிந்து கொண்டு சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ராகேஷ் முன் மாதிரி எனச் சொல்லலாம்.


பெஞ்சமின் கிரகாம் போன்ற சிலர் இன்னும் இருந்தாலும், ஆறாவது யார் ரசிக்கப்படவேண்டும்? நம்மில் ஒருவர்............

from:panguvanigam.blogspot.com/2006/06/6.html

0 comments: