Trend Lord மூலம் BANK NIFTY யில் பணம் அள்ள





பணம் தரும் பங்குச்சந்தை வாசகர்கள் அனைவருக்கும் எங்களது வணக்கம்


VISTAFOREX.IN  மூலம் FOREX  வணிகர்களுக்கு மென்பொருள் சேவை வழங்கி வந்த   நாங்கள், வரும் புத்தாண்டு முதல் இந்திய  பங்குவனிகர்களுக்கு
TREND LORD   எனும் மென்பொருள் வாயிலாக வணிகம் செய்யும் சேவையை வழங்க இருக்கிறோம்

இந்த மென்பொருள்  BANK-NIFTY  யில் வணிகம் செய்வதற்கு எற்ற வகையில் வடிவமைத்து உள்ளோம்

இதன் மூலம் கடந்த 6 மாதத்தில் 4350 புள்ளிகளை லாபமாக ஈட்டி உள்ளோம்

எங்களது வணிக விபரங்களை அறிய இங்கே அமுக்கவம் 

இது SUB-BROKERS ,FRANCHISEE OWNERS மற்றும் SWING-TRADE செய்பவர்களுக்கு இது  மிகவும் உபயோகமான ஒரு மென்பொருள் ஆகும்


வணிக தொடர்புக்கு  ராஜாமணி -97510-25999



உதவி

 ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பங்குச்சந்தை ரகசியம்




பணவீக்க உயர்வு

ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகம் என மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஆசியாவில் மட்டுமின்றி உலகிலேயே அதிக பணவீக்க விகிதத்தை கொண்ட நாடும் இந்தியா தான்.

கடந்த ஆண்டில் நாட்டின் வளர்ச்சி குறித்த புள்ளி விபரத்தை மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில், ஆசியாவிலேயே 3வது பெரிய பொருளாதார நாடாக கருதப்படுவது, இந்தியா. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி குறைவாக இருப்பதுடன், விலைவாசி பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த குறைவான வளர்ச்சி மற்றும் அதிகளவிலான பணவீக்கம், மத்திய வங்கியின் கொள்கைகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தொழில்துறை வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வளர்ச்சி விகிதம் வெகுவாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 8.4 சதவீதமாக இருந்த தொழில்துறை வளர்ச்சி, நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 2 சதவீதத்திற்குள் குறைவான வளர்ச்சியே இருந்துள்ளது.



குறைந்த வருமானம், மக்கள் தொகை நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கிராமப்புறங்களில் பணவீக்க விகிதம் 11.7 சதவீதமாகவும், நகர்புறங்களில் 10.5 சதவீதமாகவும் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள தோல்வி காரணமாக சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது, நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால், காங்கிரஸ் கட்சி மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாகவே அக்கட்சிக்கு எதிராக வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளதற்கு காரணம். மத்திய வங்கியின் ஆதரவு மண்டலத்தை விட பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அதே சமயம் நாட்டின் வளர்ச்சி குறைந்த அளவில் உள்ளதால், கொள்கை அளவிடுதலை கவனமாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சில வர்த்தக பரிமாற்ற முறைகளை கையாண்ட வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்க உயர்வு குடும்பதாரர்களின் பட்ஜெட்டை கடுமையாக பாதித்து வருகிறது. ஆனால்,பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் மத்திய அரசு, சந்தை சட்டங்களையும் சீரமைக்க மாநில அரசுகள் தவறியதே பணவீக்க உயர்விற்கு காரணம் என மாநில அரசுகளை குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது புதிய பணக் கொள்கையை அடுத்த வாரம் வெளியிட உள்ளது. இதனால் நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி வட்டிவிகிதத்தை அதிகரிக்க உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 9.9 சதவீதமாக இருந்த தொழில்துறை உற்பத்தி, நடப்பு ஆண்டு அக்டோபரில் 2 சதவீதமாக குறைந்துள்ளது. நிலக்கரி சுரங்க உற்பத்தியும் 3.5 சதவீதத்தில் இருந்து 0.2 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மின்துறை வளர்ச்சி மட்டும் 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 

மார்க் ஃபேபர் (MARC FABER)

 #முதலீட்டு ஆலோசகர், ஃபண்ட் மேனேஜர், எழுத்தாளர், பேச்சாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.

#ஸ்விட்சர்லாந்தில் பிறந்த இவர் 24 வயதில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் (ஜூரிச் பல்கலைகழகத்தில்) பெற்றவர்.

#மாற்று சிந்தனையாளர் (contrarian) என முதலீட்டாளர்கள் இவரை அழைப்பார்கள்.

#The Gloom, Boom and Doom என்ற மாதாந்திர மாற்று முதலீட்டு அறிக்கையை இவர் வெளியிடுவார். மேலும் முன்னணி பத்திரிகைகள் மற்றும் கருத்தரங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்.

#Tomorrow's Gold, 'Asia's Age of Discovery உள்ளிட்ட சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். இந்த புத்தகங்கள் அமேசான் இணையதளத்தில் பல வாரங்களாக விற்பனையில் முன்னணியில் இருந்தன. மேலும் கொரியா, தாய் மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

#1987ல் அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, 1990ல் ஜப்பானில் ஏற்பட்ட சரிவு, 1997/98ல் ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு போன்றவற்றை கணித்தவர் மார்க். 

அனலிஸ்ட்களுக்கு புதிய விதிமுறை: செபி



பங்குச்சந்தை வர்த்தகத்தில் அனலிஸ்ட்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் கொடுக்கும் அறிக்கை சாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை உயரும். ஒரு வேளை பாதகமான அறிக்கை வரும் பட்சத்தில் பங்குகளின் விலை சரியும் அபாயமும் இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறையினை செபி வெளியிட்டிருக்கிறது.

இதன்படி வெளிநாட்டு புரோக்கிங் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை பற்றி கருத்து கூறுவதற்கு புதிய விதிமுறைகளை கொண்டுவரப்போகிறது செபி. வெளிநாட்டு நிறுவனங்களின் துணை நிறுவனம் இந்தியாவில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை பற்றி எந்தவிதமான கருத்துகளையும் கூற முடியாது.

ஒருவேளை கருத்து கூற வேண்டும் என்றால் இந்தியாவில் ஓர் துணை நிறுவனத்தை அமைத்து, அந்த நிறுவனம் மூலம் விண்ணப்பித்த பிறகு தான் பங்குச்சந்தை கணிப்புகளைக் கூற முடியும்.

வெளிநாட்டு புரோக்கரேஜ் நிறுவனங்கள் இது போல சில அறிக்கைகளை வெளியிட்டு அதன்மூலம் பங்குகளின் விலை சரிந்ததால் செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

கனடாவை சேர்ந்த வெரிட்டாஸ் நிறுவனம் டி.எல்.எஃப்., ரிலையன்ஸ், இந்தியாபுல்ஸ் ஆகிய நிறுவனங்களை பற்றி கூறிய கருத்துகள், அந்த பங்குகளின் விலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தின. இதன் காரணமாகவே செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்தது.

மேலும் சர்வதேச பங்குச்சந்தை அமைப்பும் (ஐ.ஓ.எஸ்.சி.ஓ) பங்குச்சந்தை அனலிஸ்களுக்கு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று செபியிடம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

புதிய வழிகாட்டு நெறிமுறையின் படி, முறையான சான்றிதழ் இல்லாமல் ஒருவரும் பங்குச்சந்தை அனலிஸ்டாக இருக்க முடியாது. அதே சமயத்தில் அனலிஸ்ட்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குலைக்கும் வகையிலோ, அல்லது அந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்காக கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.



மேலும் அனலிஸ்ட்கள் தங்களது முதலீடுகளை, நேரடி மற்றும் மறைமுக வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட தகவல்களை வெளியே சொல்ல வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறது.

மேலும் ஒர் அனலிஸ்ட் தான் பரிந்துரை செய்த அல்லது நிறுவனம் பரிந்துரை செய்த பங்குகளில் 30 நாள்களுக்கு முன்பாகவோ அல்லது பரிந்துரை வெளியான 5 நாட்களுக்கு உள்ளாகவோ அந்த பங்கில் எந்தவிதமான பரிவர்த்தனை செய்யவும் அனுமதி இல்லை. 

ஜார்ஜ் சோரஸ் - இவரைத் தெரியுமா?




                                                          ஜார்ஜ் சோரஸ்

 #ஹங்கேரியில் பிறந்த இவர், நாஜிக்களின் காலத்தில் அங்கிருந்து வெளியேறினார். இப்போது அமெரிக்காவில் இருக்கும் இவருக்கு, உலகின் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவர், சமூகசேவையாளர் என பல முகங்கள் இவருக்கு இருக்கிறது.

#லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கானாமிக்ஸில் படித்தவர். படித்து பிறகு அமெரிக்காவில் உள்ள எப்.எம்.மேயர் புரோக்கரேஜ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

#அதன்பிறகு சில நிறுவனங்களில் வேலை செய்த சோரஸ் 1973-ம் ஆண்டு சொந்தமாக தன் பெயரில் ஒரு ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

#1992-ம் ஆண்டு இங்கிலாந்து பொருளாதாரத்தில் பெரிய பிரச்னை ஏற்பட்டது. அந்த வீழ்ச்சியை பயன்படுத்தி பேங்க் ஆஃப் இங்கிலாந்தை உடைத்தவர் என்றும் இவரை சொல்லுவார்கள்.

#அந்த வீழ்ச்சியை பயன்படுத்தி 100 கோடி டாலர் சம்பாதித்தார். வரலாற்றில் அது கருப்பு புதன்கிழமை என்று சொல்லுவார்கள்.

#Financial Turmoil in Europe and the United States, The Alchemy of Finance உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தங்களை எழுதி இருக்கிறார்.

#‘‘மக்களிடையே சென்று சேரவேண்டும் என்பதற்காகவோ, குற்ற உணர்ச்சியிலோ நான் சமூக சேவை செய்ய வரவில்லை. என்னால் பணம் செலவழிக்க முடிகிறது. அதனால் செய்கிறேன்” என்று சொன்னவர் இவர். 

ஜோசியம்

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார். கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது.

தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார். தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான். “இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர். தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான். ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

 “அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன். கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார். நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது. வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!

இசை பிரியா - கையால் ஆகாத காங்கிரஸ், திமுக,ஆதிமுக ........


இந்த நாய்களுக்கு பதிவி ஆசை தான் ஒரே இலக்கு ................


கொதித்து எழுந்திரிக்க வேண்டாமா ?????


ஏன் இன்னுமும் ஒருவர் கூட  ராஜினாமா செய்யவில்லை 


திமுக வின் கருத்து என்ன?


இந்திய அரசே,இலங்கை மீது போர் தொடு







இலக்கு

நாளை என்னவாகப் போகிறீர்கள் ..?????

எவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆளும்
அரசனாக இருந்தாலும் அவனும்
ஒரு காலத்தில் அழுது கொண்டிருந்த
குழந்தை தான்.

எத்தனை பெரிய
அடுக்குமாடி கட்டிடமாக
இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில்
வரைபடம் தான்.

எவ்வளவு அழகான சிலையாக
இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில்
வெறும் கல் தான்.

நீங்கள் இன்று என்னவாக
இருக்கிறீர்கள் என்பது ஒரு போதும்
முக்கியமல்ல.நாளை என்னவாகப்
போகிறீர்கள் என்பதே முக்கியம்..


ஒருவர் வாழ்க்கையில் முன்னேற........... முதல் தேவை இலக்கு !!!!



இந்திய பங்குச்சந்தை - ஒரு கண்ணோட்டம்




மேலே உள்ள படத்தில் nifty 6100 எனும் resistance level இல்  உள்ளது ,மேலும் வெள்ளியன்று  HANGING MAN எனும் candle pattern உருவாகி  உள்ளது ,இது இறக்கதிற்கான ஒரு அறிகுறியாகும் 

கடும் நிதிநெருக்கடியில் அமெரிக்க அரசு

17 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு அமெரிக்காவில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அமெரிக்க பார்லிமென்ட் அங்கீகாரம் கொடுக்காததால் அதிபர் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூடி விட முடிவு செய்துள்ளது. இதன் தாக்கம் இந்தியா முதல் அனைத்து நாடுகளிலும் பொருளாதார நிலையை ஆட்டம் காண செய்யும் என்ற அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

 ஒபாமா அரசு 2 வது முறை பொறுப்பேற்றது முதல் நிதி நிலையில் பெரும் ஆட்டம் கண்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக ஒபாமா கொண்டு வந்த பட்ஜெட்டுக்கு பார்லி.,யில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் நிதிச்செலவினம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 சுகாதார திட்டத்திற்கு நிதி செலவினம் அதிகம் ஒபாமா அரசு ஒதுக்கியதால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒபாமா நிர்வாகம் அரசு நிறுவனங்களை மூட முடிவு செய்தது. அரசு ஊழியர்களை சம்பளம் இல்லாத விடுப்பிற்கு செல்ல ஆணை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக 7 லட்சத்து 83 ஆயிரம் பேர் வேலை இழப்பர். இந்த மாதச்சம்பளம் மட்டும் தந்து விடுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.




The United States Federal Government has shut down on 18 occasions since 1976
YearStart dateEnd dateTotal daysExplanation
1976September 30October 1110Citing out of control spending, President Gerald Ford vetoed a funding bill for the United States Department of Labor and the United States Department of Health, Education, and Welfare (HEW), leading to a partial government shutdown. On October 1, the Democratic-controlled Congress overrode Ford's veto but it took until October 11 for a continuing resolution ending funding gaps for other parts of government to become law.
1977September 30October 1312The Democratic-controlled House continued to uphold the ban on using Medicaid dollars to pay for abortions, except in cases where the life of the mother was at stake. Meanwhile, the Democratic-controlled Senate pressed to loosen the ban to allow abortion funding in the case of rape or incest. A funding gap was created when disagreement over the issue between the houses had become tied to funding for the Departments of Labor and HEW, leading to a partial government shutdown. A temporary agreement was made to restore funding through October 31, 1977, allowing more time for Congress to resolve its dispute.
1977October 31November 98The earlier temporary funding agreement expired. President Jimmy Carter signed a second funding agreement to allow for more time for negotiation.
1977November 30December 98The second temporary funding agreement expired. The House held firm against against the Senate in its effort to ban Medicaid paying for the abortions of victims of statutory rape. A deal was eventually struck which allowed Medicaid to pay for abortions in cases resulting from rape, incest, or in which the mother's health is at risk.
1978September 30October 1818Deeming them wasteful, President Carter vetoed a public works appropriations bill and a defense bill including funding for a nuclear-powered aircraft carrier. Spending for the Department of HEW was also delayed over additional disputes concerning Medicaid funding for abortion.
1979September 30October 1211Against the opposition of the Senate, the House pushed for a 5.5 percent pay increase for congress members and senior civil servants. The House also sought to restrict federal spending on abortion only to cases where the mother's life is in danger, while the Senate wanted to maintain funding for abortions in cases of rape and incest.
1981November 20November 232President Ronald Reagan pledged that he would veto any spending bill that failed to include at least half of the $8.4 billion in domestic budget cuts that he proposed. Although the Republican controlled Senate passed a bill that met his specifications, the Democratic House insisted on larger cuts to defense than Reagan wanted and for congressional and civil servant pay raises. A compromise bill fell $2 billion short of the cuts Reagan wanted, so Reagan vetoed the bill and shut down the federal government. A temporary bill restored spending through 15 December and gave Congress the time to work out a more lasting deal.
1982September 30October 21Congress passed the required spending bills a day late.
1982December 17December 213The Democratic controlled House and the Republican controlled Senate wished to fund jobs, but President Reagan vowed to veto any such legislation. The House also opposed plans to fund the MX missile. The shutdown ended after Congress abandoned their jobs plan, but Reagan was forced to yield on funding for both the MX and Pershing II missiles. He also accepted funding for the Legal Services Corporation, which he wanted abolished, in exchange for higher foreign aid to Israel.
1983November 10November 143The Democratic controlled House increased education funding, but cut defense and foreign aid spending, which led to a dispute with President Reagan. Eventually, the House reduced their proposed education funding, and also accepted funding for the MX missile. However, the foreign aid and defense cuts remained, and oil and gas leasing was banned in federal wildlife refuges. Abortion was also prohibited for being paid for with government employee health insurance.
1984September 30October 32The House wished to link the budget to both a crime-fighting package President Reagan supported and a water projects package he did not. The Senate additionally tied the budget to a civil rights measure designed to overturn Grove City v. Bell. Reagan proposed a compromise where he abandoned his crime package in exchange for Congress dropping theirs. A deal was not struck, and a three-day spending extension was passed instead.
1984October 3October 51The three-day spending extension expired, forcing a shutdown. Congress dropped their proposed water and civil rights packages, while President Reagan kept his crime package. Funding for aid to the Nicaraguan Contras was also passed.
1986October 16October 181A dispute over multiple issues between the Democratic controlled House and President Reagan and the Republican Senate forced a shutdown. The Democratic controlled House dropped many of their demands in exchange for a vote on their welfare package, and a concession of the sale of then-government-owned Conrail.
1987December 18December 201Democrats, who now controlled both the House and the Senate, opposed funding for the Contras, and wanted the Federal Communications Commission to begin reenforcing the "Fairness Doctrine". They yielded on the "Fairness Doctrine" in exchange for non-lethal aid to the Contras.
1990October 5October 94President George H.W. Bush vowed to veto any continuing resolution that was not paired with a deficit reduction package, and did so when one reached his desk. The House failed to override his veto before a shutdown occurred. Congress then passed a continuing resolution with a deficit reduction package that Bush signed to end the shutdown.
1995November 13November 195In the shutdown of 1995 and 1996 President Bill Clinton vetoed a continuing resolution passed by the Republican-controlled Congress. A deal was reached allowing for 75 percent funding for four weeks, and Clinton agreed to a seven-year timetable for a balanced budget.
1995December 16January 6, 199621Subsequently the Republicans demanded President Clinton propose a budget with the seven-year timetable using Congressional Budget Office numbers, rather than Clinton'sOffice of Management and Budget numbers. However, Clinton refused. Eventually, Congress and Clinton agreed to pass a compromise budget.
2013October 1OngoingOngoingDue to disagreement regarding inclusion of language delaying the Affordable Care Act,[11]the Government has not passed a funding bill. Negotiations have come to a stop and theUnited States federal government shutdown of 2013 is in progress.

நாவல் பழம்

 மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழம்
நாவல் பழத்தை சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது.



ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள்.

நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம்.

மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும்.

நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.

மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.


நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும். எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்

சிரிச்சு பழகுங்க




 தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...

மகன்: ஃபெயிலாயிட்டா..?

தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!
......................................................

 ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?

மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?
...................................................

 ராமு: நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?

சோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!
................................................

நண்பர் 1: ""அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''

நண்பர் 2: ""எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''
...........................................

 ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!

மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?
...............................................................

 ஆண்: என்னோட மனைவியைக் காணோம்....................ஒரு அஞ்சு
நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?

பெண்: எதுக்கு?

ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்
பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!
...............................................

 நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே

டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.
...........................................................................

நண்பர் 1 : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...

நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!

பங்குச்சந்தை: sensex 30000 புள்ளிகளை நோக்கி செல்கிறது


sensex 9 ஆண்டுகளுக்கு பிறகு bullish hammer எனும் pattern ஐ வாரந்திர chart இல் உருவாக்கி உள்ளது ........இது 9 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி உள்ளது



21/5/2004 அன்று sensex bullish hammer உடன் 4961.57 வாரந்திர முடிவாக இருந்து அடுத்த முன்றரை  ஆண்டுகளில் 21206.801 புள்ளிகள் வரை சென்றது

அதே போல் இப்போது sensex 18519.44 வாரந்திர முடிவாக உள்ளது வரும் சில நாட்களில் புதிய உச்சத்தை தொடும் ........பின் சில ஆண்டுகளுக்குள்  30000 புள்ளிகளும் அதற்கு மேலும் செல்லும் 

காலர் டூயுன் எப்படி deactivate பண்ணுவது ?

பரங்கி மலை பக்கத்துல இருக்க பாழடைஞ்ச பங்களாவுக்கு போனிங்கன்னா அங்க ஒரு சூனியக்கார கிழவி துஸ்ட தேவதைகளுக்கு பூஜை பண்ணிக்கிட்டு இருப்பா.

அவ கிட்ட ஒரு பறக்கும் பாய் இருக்கு.

அவ ஒரு பசுமாடு வளக்கிரா , அந்த பசுமாடு சாப்ப்டிடுற புல்லுல மயக்க மருந்த கலந்து குடித்துட்டிங்கனா , அவ அதோட பாலகுடிச்சு மயக்கம் ஆகிடுவா,

அப்போ அவளுக்கு தெரியாம நைஸா அத எடுத்துக்கிட்டு மேற்கு திசைல ஏழு கடல் ஏழு மலை தாண்டி போங்க .....

போற வழில மூணாவது கடல்ல நம்ம சிந்துபாத் கப்பல்ல போயிக்கிட்டு இருப்பாரு , அவர் கிட்ட ரிகுஸ்ட் பண்ணி அவரோட கத்திய வாங்கிக்கங்க....... அப்புறம்

எட்டாவது கடல் தாண்டி எட்டாவது மலைல ஒரு குகை இருக்கும் அந்த குகைய ஒரு ஒற்றைக்கண் ராட்சசன் காவல் காத்துக்கிட்டு இருப்பான் ,அவன் கூட சண்டை போட்டு நம்ம சிந்துபாத் குடுத்த கத்திய வச்சு அவன் ஒத்தை கண்ணுல குத்தினா அவன் செத்துடுவான்,

அப்புறம் குகைக்குள்ள போனா அங்க ஒரு மந்திர கூடு இருக்கும் , அத ஒரு 7 தலை நாகம் காவல் காத்துக்கிட்டு இருக்கும் அத எப்படியாவது கொன்னுட்டு

அந்த கூண்ட திறந்திங்கன்னா அதுக்குள்ளே ஒரு கிளி இருக்கும், அந்த கிளியோட மொபைல் போனுல ஒரு சிம் கார்டு இருக்கும் , அந்த கார்ட எடுத்து ஒரே வெட்டுல 4 துண்டா வெட்டி போட்டிங்கன்னா உங்க போன் காலர் டியூன் டி-ஆக்டிவேட் ஆகிடும்.

@ அடங்கொன்னியா விளங்கிடும் .....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஆணியே புடுங்க வேண்டாம் ,

ஆட்டோமேட்டிக்கா ஒரு பாட்டு காலர் டியுனா வந்திருச்சு அத எப்படி டி-ஆக்டிவேட் பண்றதுன்னு கஸ்டமர் கேருக்கு போன் பண்ணினா அதுக்கு இவ்ளோ கத சொல்றானுக ..............

பேரிச்சம் பழத்தால் உண்டாகும் நன்மைகள்

நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது.
அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போம்

மலச்சிக்கல்:

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.
ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.

பார்வை கோளாறு:

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கர்ப்பிணிகளுக்கு உகந்தது:

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன.
இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது.
ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

மூட்டு வலி:

இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும்.
ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

குடல் கோளாறு :

பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

பற்சொத்தை:

நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.

அறிவுரை


ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன.்

MBA




MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்..
அங்கே ஒரு செக்குமாடு மட்டும்தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது.. ­..
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது
பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக்
கொண்டிருந்தார். ­...... அவரிடம் கேட்டான்…
MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்.., ­
MBA : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங் ­க..?
விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந் ­த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடு ­வேன்..
MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு.,ஒ ­ரே இடத்துலநின்னு.. ­, தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படிகண்டுபிடி ­ப்பீங்க..?
__
__
__
விவசாயி: இதுக்குதான்  தம்பி ,நான் என் மாட்டை  காலேஜ் படிக்க அனுப்பலை.

இந்திய பங்குசந்தைகள் எங்கே செல்கிறது ?


சென்ற வாரத்திய நாணயம் விகடனில்  இருந்து  A,K,Prabhakar அவர்கள் எழுதிய சிறு பகுதியை மேலே படமாக கொடுத்துள்ளேன்



இந்திய பங்குசந்தைகள் mega bull run க்கு  தயாராகி கொண்டு இருக்கிறது



பங்குசந்தைகளில் இன்னும் சில மாதங்களில் பணமழை பொழியபோகிறது 


நீண்டகால முதலீடு


1.sail



2.reliance industries


 3.reliance capital


 4.l&t finance


5.NMDC

மேற்கூறிய 5 பங்குகளும்  நீண்டகால நோக்கில் சிறப்பான லாபத்தினை ஈட்டும் .

குஜராத்தில் தடையில்லா மின்சாரம்

மின்சாரத் தட்டுப்பாடு வீட்டின் வளர்ச்சியையும் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. சாதாரணக் குடிமக்களுக்கு தெரிந்த இந்த விஷயம், ஏன் நம் ஆட்சியாளர்களுக்குப் புரியவில்லை? இதற்கு முதற்காரணம் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் உள்ள பெரிய இடைவெளி. மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளும் திறமை இல்லாதவர்கள் ஆட்சியாளர்கள் ஆனது மற்றொரு காரணம். 
குஜராத்தில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. அதுவும் மும்முனை மின் இணைப்பு. 2011-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் மொத்தம் 18,066 கிராமங்கள் உள்ளன. இதில் 18,031 கிராமங்களுக்கு 2006-ம் ஆண்டே மின்சாரம் போய்ச் சேர்ந்துவிட்டது. அதோடு, அவற்றைச் சார்ந்த சுமார் 9,700 குக்கிராமங்களும் மின்சார ஒளியைப் பெற்றுவிட்டன. மீதமுள்ள 35 கிராமங்களுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அந்த மாநிலத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தபின், மீதம் இருக்கும் உபரி மின்சாரத்தை 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு வழங்கிவருகிறார்கள். நமது வீட்டுக்கு வரும் மின்சாரம்கூட ஒரு வேளை குஜராத்திலிருந்து வந்ததாக இருக்கலாம். 

ஜோதிகிராம் யோஜனா:


குஜராத்திலும் மின்தடை இருந்தது. கிடைத்த மின்சாரமும் தரமற்றதாகவும் குறைந்த மின்னழுத்தம் உடையதாகவும் இருந்தது. இதனால் 2003-ம் ஆண்டு ஜோதிகிராம் யோஜனா என்ற புதிய திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கினார். இந்தத் திட்டத்தின் நோக்கம், அனைவருக்கும் ‘தடையற்ற, தரமான மின்சாரம் வழங்குவதே’.

ஜோதிகிராம் யோஜனா திட்டத்தின்மூலம் குஜராத்தில் உள்ள 18,065 கிராமங்களுக்கு 24 மணிநேர மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1,290 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. விவாசயத்துக்கு மின்சாரம் வழங்குவதிலும் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக பிரத்தியேக மின் இணைப்புகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காகப் பிரத்யேக மின் இணைப்பு வலை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்காக 2,559 மின்மாற்றிகள் (டிரான்ஸ்ஃபார்மர்கள்) நிறுவப்பட்டன. மற்ற உபயோகங்களுக்கு (வீடுகள், தொழிற்சாலைகள்) தனி இணைப்பு ஒன்று அமைக்கப்பட்டது. ஓர் இணைப்பில் தடங்கல் ஏற்பட்டால், மற்ற இணைப்பு மூலம் நிலைமையைச் சமாளிக்க முடியும். இதற்காக 76,518 கிலோமீட்டர் தூரத்துக்குப் புதிய மின்கம்பிகள் போடப்பட்டன.வெறும் 30 மாதங்களில் திட்டமிடப்பட்டுச் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது இந்தத் திட்டம். 

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி ஏற்றபோது, 2000-01-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, குஜராத் மின்சார வாரியம் 2,542 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியது. ஆனால், 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி அன்று குஜராத் மாநில மின்சார வாரியம், 200 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது என்ற செய்தி வெளியானது.

மின்சாரத் திருட்டு:

நரேந்திர மோடி முதல்வராகப் பதவி ஏற்றபோது, மற்ற மாநிலங்களைப் போலவே குஜராத்திலும் மின்சாரத் திருட்டு, மின் கட்டண பாக்கி போன்றவை நடைமுறையில் இருந்தன. ஏதோ சாமானியர்கள் மட்டும்தான் இப்படிச் செய்துவந்தார்கள் என்று எண்ணிவிடாதீர்கள். பெரிய தொழிற்சாலைகளும் அரசியல் பெரும் புள்ளிகளும் இத்தகைய வேலைகளைச் சர்வசாதாரணமாகச் செய்துவந்தனர். மின்சார வாரியத்தின் நஷ்டத்துக்கு இதுதான் முதல் காரணம் என்பதை மோடி அரசு உணர்ந்தது.

எனவே முதலில் ‘களை’ எடுக்கும் வேலையை மோடி தொடங்கினார். மின்சாரத் திருட்டைத் தடுக்கத் தனியாகக் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. கண்காணிக்க ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான திருட்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மின் திருடர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டதோடு, மின்சாரக் கட்டணம் வட்டியும் முதலுமாக வசூலிக்கப்பட்டது.

2003-ம் ஆண்டு மின்சாரத் துறையை முதல்வர் நரேந்திர மோடி தன்வசம் வைத்துக்கொண்டார். மிகப்பெரிய சீர்திருத்தத்தை மேற்கொள்ளப் புறப்படும்போது, கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்கவேண்டி வரும் என்பதற்காகவும் மின்சாரத் துறைக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை உணர்த்தவும் முதல்வரே இத்துறையைத் தன் வசம் வைத்துக்கொண்டார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக மின்சாரத் துறை முழுவதையும் கணினிமயமாக்கினார் நரேந்திர மோடி. மாநிலத்தில் உள்ள அனைத்து மின்சார அலுவலகங்களும் அவற்றின் கிளை அமைப்புகளும் இணையம் வழியாக இணைக்கப்பட்டன. இதனால் உண்மையான தகவல்கள் எந்த நேரத்திலும் எளிதாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது.

ஆற்றல் காப்பாளர்கள்:

மாநிலம் முழுதும் உள்ள பள்ளிக்கூடங்களில் ‘ஆற்றல் காப்பாளர்கள் குழு’ அமைக்கப்பட்டது. இன்று, பள்ளி மாணவர்கள் தங்கள் வீடு, அக்கம்பக்கத்தினர் வீடுகள், கிராமம், தங்கள் பள்ளி ஆகிய இடங்களில் ஆற்றல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, ஆற்றல் தணிக்கை செய்கின்றனர். எத்தகைய சூழ்நிலை அந்த வீட்டில் இருக்கிறது, அவர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் முறை எப்படி உள்ளது, எப்படிப்பட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர் போன்றவற்றை அவர்கள் அப்போது கண்டறிந்து, யோசனைகள் சொல்கின்றனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் மூலம் ஆற்றல் சார்ந்த விழிப்புணர்வு ஊட்டப்படுகிறது.

இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தில் சுமார் 1,800 பள்ளிகளை சார்ந்த சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 2008-09-ம் ஆண்டுக் கணக்குப்படி சுமார் 9,000 வீடுகளில் ஆற்றல் தணிக்கை நடைபெற்றுள்ளது.

மின் உற்பத்தி:

மின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம், நீர் மின் உற்பத்தி, நிலக்கரியிலிருந்து அனல் மின்சக்தி, எரிவாயுவிலிருந்து மின்சாரம், கடல் அலையிலிருந்து மின்சாரம் என்று எங்கெல்லாம் மின்சார உற்பத்தி செய்ய முடியுமோ அங்கெல்லாம் கவனம் செலுத்தப்பட்டது.

2006-ம் ஆண்டுக் கணக்குப்படி, குஜராத்தில் 132 கிராமங்கள் முழுதும் சூரிய சக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. மின் கம்பிகள் செல்லமுடியாத மலைக் கிராமங்களில் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களிலும் தனியார் கட்டடங்களிலும் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதை அங்கு பார்க்க முடிகிறது.

கட்டாந்தரை கட்ச் பாலைவனத்தையும் குஜராத்தின் நீண்ட கடற்கரையையும்கூடப் பணம் விளையும் பூமி ஆக்கிவிட்டார் மோடி என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வறண்ட பாலைவனமாக இருந்தாலும் காற்றுக்குப் பஞ்சம் இருக்காது. இயற்கையின் இந்த அற்புதக் கொடையை ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று எண்ணியதன் விளைவுதான் காற்றாலை மின் உற்பத்தி. குஜராத்தில் 2006-ம் ஆண்டில் 338 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகளிலிருந்து கிடைத்தது. அதுவே, 2011-ம் ஆண்டு 2,175 மெகாவாட் மின்சாரமாக அதிகரித்தது. இது சுமார் 545 சதவீத வளர்ச்சி.

இலவச மின்சாரம் இல்லை:

குஜராத் மின்துறை முதன்மைச் செயலராக இருக்கும் டி.ஜெகதீச பாண்டியன், குஜராத்தில் விவசாயிகளுக்கு ஏன் இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை என்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ‘இலவசமாக மின்சாரத்தை வழங்கும்போது, ஒரு மணி நேரம் ஓடவேண்டிய ஒரு மின்சார மோட்டாரை ஒரு விவசாயி இரண்டு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ இயக்குவார். காரணம் மின்சாரம் இலவசம்தானே, தண்ணீர் தாராளமாக வரட்டுமே என்று. இதன்மூலம் மின்சாரம் வீணாவது ஒரு புறம் என்றால் மறுபுறம் நிலத்தடி நீரும் வீணாகி, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடும்’ என்றார்.

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறவேண்டும் என்றால் மாத கணக்கில் நடையாக நடக்க வேண்டியுள்ளது. அதுவும் சில இடங்களில் அலுவலர்களை, அதிகாரிகளை 'கவனிக்க' வேண்டும். அப்போதுதான் ‘காரியம்’ நடக்கும். ஆனால் குஜராத்தில் அப்படியல்ல. இன்று விண்ணப்பித்தால், நாளையே மின் இணைப்பு கிடைத்துவிடும். 

2012 ஜூலை 30-ம் தேதி முதல் இரண்டு நாட்கள் தலைநகர் தில்லி உள்பட 19 மாநிலங்கள் இருளில் மூழ்கின. 60 கோடி மக்கள் அல்லல்பட்டனர். உலகமே சிரித்தது. இந்தியா எங்கே 'சூப்பர் பவர்' ஆகப்போகிறது என்று ஏளனம் செய்தது. ஆனால் குஜராத் மட்டும் எந்தவிதத் தடையும் இன்றி மின்னொளியில் மிதந்தது.

குஜராத்தில் விவசாயப் புரட்சி

பாலைவனத்துக்கும் கட்டாந்தரைக்கும் பெயர்போன மாநிலம் குஜராத். 75 சதவீதம் வறண்ட நிலப்பரப்பு. மிகக்குறைவான மழை. ஆனால் இங்கே விவசாயத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து 9.6 சதவீதத்தில் முன்னேறி வருகிறது (இந்திய அளவில் விவசாயத்தின் வளர்ச்சி 3.5 சதவீதம்).



ஆண்டுக்கு ஆண்டு விவசாய நிலங்களின் அளவு அதிகரித்துகொண்டேபோகிறது. பாலைவனம், சோலைவனமாக மாறி வருகிறது. தரிசு நிலங்களெல்லாம் இப்போது விவசாய நிலங்களாக மாறி வருகின்றன. அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கிய காலம் போய், விவசாயிகளே தரமான விதைப் பண்ணைகளை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் போன்ற மற்ற மாநில விவசாயிகள் எல்லாம் குஜராத்தைத் தேடிவரும் நிலைக்கு அந்த மாநிலம் வளர்ச்சி கண்டுள்ளது. குஜராத்தில் விவசாயம் இந்த அளவுக்கு வளர்ச்சி காண, மோடி அப்படி என்னதான் மந்திரம் போட்டார்?


குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தடுப்பணைகளை நரேந்திர மோடி அரசு கட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏரி, குளம், குட்டைகள் தூர் வாரப்பட்டு அந்தந்தப் பகுதி மக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.


2000-ம் ஆண்டுக்கு முன்பு சௌராஷ்டிரா போன்ற வறண்ட பகுதிகளில் எப்போதாவது பெய்யும் குறைந்த அளவு மழைநீர்கூட உடனே கடலில் சென்று வீணாகிவிடும். இப்போது நிலைமை அப்படி இல்லை. தடுப்பணைகள் அதிக அளவில் கட்டப்பட்டு தண்ணீரைத் தேக்கி வைக்கின்றனர். இதுபோகக் குளம், குட்டைகள் வேறு. இப்போது அப்பகுதி விவசாய பூமியாக மாறிவிட்டது.


கட்ச் பகுதியும் அப்படித்தான். இங்கு 18 முதல் 19 செண்டிமீட்டர்வரை நீர் ஆவி ஆகிவிடும். ஆனால் பெய்யும் மழையின் அளவோ 7.61 செண்டிமீட்டருக்கும் குறைவாகவே இருக்கும். ஆயிரம் அடி தோண்டினால்கூடத் தண்ணீர் கிடைப்பது அரிது. இந்தப் பகுதிகளையும் விவசாயம் செய்யும் நிலமாக மாற்றியது மோடியின் மாபெரும் சாதனை.


ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்கக்கூடாது என்ற உந்துதலோடு மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார் மோடி. சௌராஷ்டிரா, வடக்கு குஜராத் போன்ற வறண்ட பகுதிகளிலும் விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தினார். மழை நீரைச் சேமிக்க என்னென்ன வழிகள் எல்லாம் உண்டோ, அனைத்து முறைகளையும் கையாண்டார். தடுப்பணைகள் கட்டியதோடு நின்றுவிடாமல், புதிதாகக் குளம், குட்டைகளையும் வெட்டினார். ஏற்கெனவே இருந்த ஏரி, குளம், குட்டை போன்றவற்றையும் தூர் வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தினார்.


வறண்ட பகுதிகளிலிருந்து பிழைப்புக்காக சூரத் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள், தங்கள் கிராமங்களுக்கே மீண்டும் திரும்பி விவசாயப் பணிகளைத் தொடங்கினர்.


கடந்த 2000-ம் ஆண்டுவரை வெறும் 10,700 தடுப்பணைகள் மட்டுமே குஜராத் மாநிலம் முழுதும் இருந்தன. ஆனால் 2008-ம் ஆண்டு முடிவில் 1,13,738 தடுப்பணைகளாக அது உயர்ந்தது. இதுதவிர 2,40,199 குளங்களும் விவசாயத்துக்காக வெட்டப்பட்டுள்ளன.





நதி இணைப்பு


நமது நாட்டில் நதி இணைப்புத் திட்டங்கள் பற்றி, நதிகளைவிட நீளமாகப் பேசிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் குஜராத்தில் நரேந்திர மோடி பேசவில்லை, செயல்படுத்திக் காட்டியுள்ளார். நர்மதை நதியை 17 வறண்ட ஆறுகளுடன் இணைத்து அவை அனைத்தையும் ஜீவ நதி ஆக்கியுள்ளார். இதுபோல், காடானா நீர் தேக்கங்களிலிருந்து உபரியாகும் தண்ணீர் வறண்ட மாவட்டங்களை நோக்கித் திருப்பிவிடப்பட்டுள்ளது. இவற்றின்மூலம் பொட்டல் காடான 7 மாவட்டங்கள் செழிப்படைந்துள்ளன. 332 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயம் விசாலமாகியுள்ளது.


விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைப் பயன்படுத்துவதிலும் மோடி அரசு முத்திரை பதித்துள்ளது. 1990-களில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள்,சொட்டு நீர்ப் பாசனத்தில் முன்னணியில் இருந்தன. ஆனால் 2011-ம் ஆண்டு நிலவரப்படி குஜராத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சொட்டு நீர்ப் பாசன விவசாயம் நடக்கிறது. இதனால் குஜராத் இப்போது சொட்டு நீர்ப் பாசனத்தில் இந்தியாவில் முதல் மாநிலம் ஆகிவிட்டது.


விவசாயப் பல்கலைக்கழகங்கள்


குஜராத் மாநிலத்தில் இருந்த ஒரே ஒரு விவசாயப் பல்கலைக்கழகம், நான்கு பல்கலைக்கழகங்களாக அதிகரிக்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு விவசாயப் பல்கலைகழகமும் ஒரு குறிப்பிட்ட துறையில் ஆழமாக ஆராய்ச்சி செய்ய அறிவுறுத்தப்பட்டது.இந்தப் பல்கலைக்கழகங்கள் அரசின் பல்வேறு விவசாயத் திட்டங்களுக்கு உதவி புரிவதோடு, தரமான விவசாய அறிஞர்களை உருவாக்கி வருகின்றன.


உழவர் திருநாள்


உழவர்களுக்கான உண்மையான திருவிழா. 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத்தில் உள்ள பதினெட்டாயிரத்துக்கும் அதிகமான விவசாயக் கிராமங்களில் உள்ள விவசாயிகளை அவர்களின் கிராமத்துக்கே சென்று அரசு அதிகாரிகள் சந்திக்கின்றனர். விவசாயம் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு அதிகாரிகள், கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரில் சந்திக்கின்றனர். விவசாயப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அறுநூறுக்கும் மேற்பட்ட அறிஞர்களும் அவர்களுடன் செல்கின்றனர். அதாவது விவசாயம் சார்ந்த அதிகாரிகள், அறிஞர்கள், ஊழியர்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு மாத வேலை அலுவலகங்களில் அல்ல, கிராமங்களில்தான். இதுதான் இந்த விவசாயத் திருவிழாவின் சிறப்பம்சம்.


இந்தத் திருவிழாவின்போது, விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள், விவசாயத்தின் புதிய வரவுகள் போன்றவை விவசாயிகளுக்கு விளக்கப்படுகின்றன. விவசாயிகளின் பிரச்னைகள், மழை நிலவரம், மகசூல் நிலவரம் போன்ற அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. முக்கியமாக ஒவ்வொரு விவசாயிக்கும் மண் பரிசோதனை அட்டை வழங்கப்படுகிறது. விவசாயிகளின் நிலத்தை ஆய்வு செய்து, அந்த நிலத்தில் எத்தகைய பயிர்களைப் பயிரிடலாம், எத்தகைய உரங்களை எந்தெந்த நேரங்களில் இடலாம் போன்ற விவரங்கள் அந்த அட்டையில் பதிவு செய்யப்படுகின்றன. அதோடு காலப்போக்கில் மண்ணில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்படுகின்றன.


இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கால்நடைகளுக்குத் தடுப்பூசிகள் போடப்படுவதோடு, செயற்கைக் கருத்தரிப்பு போன்றவற்றால் ஏற்படும் பயன்களும் எடுத்துச் சொல்லப்படுகின்றன.


இதுதவிர, ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து பரம ஏழைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விவசாயத்துக்த்கு தேவையான அடிப்படைக் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.


விவசாயிகளுக்கு, அவர்களின் விளைபொருட்களை எங்கு கொண்டு சென்றால் நல்ல விலைக்கு விற்கலாம், அவ்வப்போது உள்ள விளைபொருட்களின் விலை நிலவரம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.


2009-ல் 30 நாட்கள் நடந்த இந்த விவசாயத் திருவிழாவில் சுமார் 7 லட்சம் பேருக்குமேல் கலந்துகொண்டார்கள். முதல்வர் தனது அனைத்து அமைச்சரவை சகாக்களோடும் கலந்துகொண்டார். 28 ஐ.ஏ.எஸ் ஆலுவலர்கள் உட்பட மாவட்ட, தாலுகா அதிகாரிகளும், 1,700 விவசாய அறிஞர்களும் மற்றும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கலந்துகொண்டனர்.




கால்நடை விடுதி


கால்நடைகளுக்கு என்று விடுதி அமைக்கும் முறை, உலகிலேயே குஜராத்தில் மட்டும்தான் உள்ளது. ஒரு கிராமத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தக் கால்நடை விடுதியை ஏற்படுத்துகின்றனர். அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் அங்கு வைத்துப் பராமரிக்கின்றனர். இதனால் கால்நடைகளைப் பராமரிக்க வீட்டுக்கு ஒருவர் தேவை இல்லை. மொத்த கிராமத்துக்கும் ஒரு சிலர் இருந்தாலே போதும்.


இந்தக் கால்நடை விடுதியை அந்தக் கிராம விவசாயிகளே நிர்வகிக்கின்றனர். மொத்தமாகக் கால்நடைகளைப் பராமரிப்பதால், அவர்களால் பேரம்பேசி, கால்நடைத் தீவனங்களைக் குறைந்த விலைக்கு வாங்க முடிகிறது. இத்தகைய கால்நடை விடுதிகள்மூலம் கால்நடை பராமரிக்கும் செலவும் கணிசமாகக் குறைந்துள்ளது.


அரசு சார்பில் ஆண்டுதோறும் கால்நடை மருத்துவர்கள் கிராமங்களுக்கே சென்று கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்கின்றனர். தேவையான மருந்துகளையும் அப்போது வழங்குகின்றனர்.


விவசாய வருமானம்


விவசாயத்துக்கு மோடி அரசு கொடுத்துவரும் முக்கியத்துவம் காரணமாக விவசாயத்திலிருந்து கிடைக்கும் நிகர வருமானம் 9,000 கோடி ரூபாயிலிருந்து, 50,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பால் ஏற்றுமதியில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் குஜராத்.


இப்படியாக, நாட்டில் எங்கு பார்த்தாலும் விவசாயிகள் நிலை கவலைக்கிடமாக இருந்துகொண்டிருக்கும்போது, இயற்கையிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காத குஜராத்தில் முயற்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விவசாயம் இன்று பீடு நடை போடுகிறது.

முதலீட்டு ஆலோசனைகள்


 Adani power, rcom.ibrealest இம்முன்று  பங்குகளும் techincally daily சார்ட்டில் வலிமையாக  உள்ள பங்குகள்


 இவை முன்றும் மேலும் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கலாம்




ரூ.1.90 கோடியை திருப்பி கொடுத்த ஆட்டோ டிரைவர்

 குஜராத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு அளிக்கப்பட்ட ரூ. 1.90 கோடியை திருப்பி அனுப்பி அனைவரையும் அசர வைத்துள்ளார். குஜராத் மாநிலம், சனந்த் பகுதியை சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவராக உள்ளார்.  சனந்த் பகுதியில் ராஜூவின் குடும்பத்தினருக்கு 10 பிகா(4 பிகா) 1 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. ராஜூவின் தாத்தா 10 பிகாவில் 3 பிகா நிலத்தை பலருக்கு விற்பனை செய்து விட்டார். அந்த இடத்தில் தற்போது 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

 இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சனந்த் பகுதியில் நானோ தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில், ராஜுவின் தாத்தா விற்பனை செய்த நிலமும் அடங்கும். விற்பனை செய்யப்பட்ட நிலத்தை வாங்கியவர்கள் தங்களது பெயரில் மாற்றததால் இப்போதும் ராஜூவின் குடும்பத்தினர் பெயரிலேயே இருந்துள்ளது. எனவே, கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குண்டான இழப்பீடு தொகையாக ரூ. 1.9 கோடி தொகை ராஜூவின் பெயரில் காசோலையாக வந்துள்ளது. ஆனால், தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்காக வந்த பணத்தை வாங்கி தனது வங்கி கணக்கில் போட்டுக் கொள்ளாமல், அது என்னுடைய பணம் இல்லை என்று கூறி டாடா நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ராஜூ. ராஜூவின் செயல் டாடா அதிகாரிகளையும், குஜராஜ் தொழில் வளர்ச்சி கழக அதிகாரிகளையும் பெரும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது

பங்குச்சந்தை மாபெரும் வீழ்ச்சி, பங்குசந்தைகள் திவாலாக போகின்றன


இன்று காலை சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை, நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டது. இன்று மதியத்திற்கு மேல் எந்த ஒரு நிறுவனத்தினுடைய பங்குகளும் துளியும் ஏற்றம் பெறவில்லை.

பங்குச்சந்தையில் மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 430.65 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 19692 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 126.80 புள்ளிகள் சரிந்து 5980 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் எந்த ஒரு நிறுவனத்தினுடைய பங்குகளும் ஏற்றம் பெற்று லாபமடையால் ஒட்டு மொத்த வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்று ஐடிசி லிட், டாடா ஸ்டீல், பார்த்தி ஏர்டெல், டாடா மோட்டார் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து நஷ்டமடைந்துள்ளன.



1.இன்றைய சரிவு technical  analyst பலரும் எதிர்பார்த்த  ஒன்றுதான்

2.பத்திரிக்கை செய்திகளை வைத்து வணிகம் செய்ய இயலாது

3.அம்புக்குறி   இடப்பட்ட  5970 ஒரு சப்போர்ட் லெவல்  ஆகும்

இந்திய பங்குசந்தைகள் பற்றிய மிக மிக முக்கியமான தொழில்நுட்ப குறிப்பு கீழே 


 Nifty Monthly Line Chart of Last 8 Years.

A CUP & HANDLE Chart Pattern on Monthly Chart.

Duration December 2007 to 2013 April.(65 Months)

if we assume in next 5-6 months Nifty get BREAKOUT of all time high on monthly closing basis then pattern duration will be aprox 70 months.

Target will be as per Depth of Breakout.

1st Target will be 7700-7800

Xpected Duration will be 12-22 Months after Monthly Breakout(Closing basis) 

2nd Target will be 9600-9700

Xpected Duration will be 23-44 Months after Monthly Breakout(Closing Basis).

THIS IS THE MINIMUM TARGET OF NIFTY AFTER BREAKOUT.

MAXIMUM Target will be Much more than This.

5600-5700 is Strong Support Zone on closing basis..