திருவாளர்.சந்தை அவர்கள்



பெஞ்சமின் பிராங்ளின், பங்கு முதலீட்டின் தந்தை எனக் கருதப்படுபவர், ஒரு முறை, தினசரி பங்கு விலையின் எற்ற இறக்கங்களை நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பின் வரும் மனோனிலையை கடைபிடிக்க அறிவுறுத்தினார்.

"பங்கு விலையின் மூலத்தை நமக்குப் பரிட்சயமான நண்பர் திருவாளர்.சந்தை அவர்களிடம் இருந்து வருவதாகக் கற்பனை செய்வது கொள்வோம். ஒவ்வொரு நாளும் தவறாமல் நம்மிடம் இருக்கும் பங்குகளை அவர் வாங்க விரும்பும் விலையை முன் வைப்பார். அதே பொல அவரிடம் உள்ள பங்குகளை அவர் விற்க விரும்பும் விலையையும் எடுத்து வைப்பார்.

பங்குகளின் நிருவனங்களும், அவற்றின் செயல்பாடுகளும் நிலையானவையாக இருந்தாலும், சந்தை அவர்கள் அவற்றுக்குக் கூறும் விலை நாளுக்கு நாள் (ஏன் நிமிடத்திற்கு நிமிடம் கூட) மாறிக் கொண்டே இருக்கும். நண்பர் அடிக்கடி சஞ்சலப்படும் மனநிலை கொண்டவர்.

சில சமயங்களில் நல்ல மனநிலையில் இருக்கும் பொது, நிறுவனங்களின் நல்ல எதிர் காலம் மட்டுமே அவர் கண்களில் தென் படும். இது போன்ற தருணங்களில் நம்மிடம் இருக்கும் பங்குகளை வாங்க என்ன விலை வேண்டுமானலும் தரத் தயங்க மாட்டார். அவரது பயமெல்லாம் நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து வரும் இலாபத்தை நாம் அபகரித்து விடுவோம் என்பது மட்டுமே. எப்பாடு பட்டாவது நமது பங்கை கைப்பற்றுவதே அவரது குறிக்கோள்.

வேறு சில தருணங்களில் மிகவும் சோர்வடைந்தவராகக் காட்சியளிப்பார் சந்தை அவர்கள். நிறுவனத்திற்கும், உலகத்திற்கும் மிக மோசமான எதிர் காலம் மட்டுமே இருப்பதாகக் கருதுவார். நமது உடைமைகளை அவரிடம் தள்ளி விட்டு விடுவோம் என்ற அச்சத்தில், மிக மிகக் குறைவான விலைகளையே பங்குகளுக்கு முன் வைப்பார். தனது பங்குகளை எவ்வளவு குறைவான விலையாயினும் பரவயில்லை என்று நம்மிடம் விற்று விட முயல்வார்.

திருவாளர்.சந்தை ஒரு உன்னதமான கொள்கை உடையவர். நாம் அவரை உதாசீனப் படுத்துவதை அலட்சியப் படுத்தாத பண்பு அவருடையது. ஒரு குறிப்பிட்ட நாளில் அவர் குறிப்பிடும் விலை நமக்குச் சரி வரவில்லையெனிலும், அவர் உதாசீனப் படுத்தப்பட்டாலும், அடுத்த நாள் வெறொரு விலையுடன் வந்து நம் முன் காட்சியளிப்பார்.

இவ்வாறான ஒரு நபருடன் தொழில் செய்வது மிக எளிமையானது. நண்பரது மன நிலை குன்றியது போன்ற சமயங்கள் நமக்கு மிக உகந்தவை, பின் வரும் ஒரு செய்தியை மட்டும் மனதில் கொண்டோமேயானால்!!

திருவாளர்.சந்தை நமக்குச் சேவை செய்ய இருக்கும் நபர். ஒரு பொழுதும் அவர் நம்மை வழி நடத்த அனுமதிக்கக் கூடாது. அவரது முட்டாள் தனமான அனுகுமுறையைக் கண்டு அவரை அலட்சியப் படுத்தவும் செய்யலாம். அல்லது நமது நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்யலாம். அவருடைய வழி நடத்துதலின் படி நடத்தல் சமங்களில் அபாயகரமாக அமையும்.

உண்மையை சொல்லப் போனால், ஒரு நிறுவனத்தையும் அதன் தொழில் முறையும் சந்தையை விட நாம் நன்கு புரிந்து கொள்வோம் என்று கூறி விட முடியாது. அது போன்ற நேரங்களில், நாம் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் தூர நின்று வேடிக்கை பார்ப்பது புத்திசாலித்தனம்"


from: http://panguvanigam.blogspot.com/2006/05/blog-post_114657887648929090.html