இந்தியாவின் ,நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.9 சதவீதமாக குறையும்


அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை (சிஏடி) படிப்படியாக குறையும். நடப்பு நிதியாண்டில் இது 3.9 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பர்கிலேஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு நாடு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்புக்கும், இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறை (CURRENT ACCOUNT DEFICIT-CAD) எனப்படுகிறது. 2010,11ம் நிதியாண்டு முதலே இந்தியாவின் சிஏடி அதிகரித்து வருகிறது.

2012,13ம் நிதியாண்டில் இது அதிகபட்ச அளவாக 4.9 சதவீதமாக இருந்தது. டிசம்பருடன் முடிந்த காலாண்டில், 6.7.(நமது பங்குசந்தைகளின் சரிவிற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்) சதவீதமாக உச்சகட்டத்தில் இருந் தது. இது படிப்படியாக நடப்பு நிதியாண்டில் 3.9 சதவீதமாக குறையும்.  கச்சா எண்ணெய் விலை, தங்கம் இறக்குமதி ஆகியவை கடந்த 2 ஆண்டுகளாக சிஏடி அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தன. (இந்திய தன்னுடைய தேவைக்காக  தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் பெருமளவில்  இருக்குமதி செய்கிறது )

விரைவில் வர்த்தக பொருட்களின் மேலும்  விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்நாட்டில் வளர்ச்சி அதிகரிக்கும், பணவீக்கம் குறையும். கடந்த சில வாரங்களாக தங்கம், கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது. இது சிஏடி குறைய உதவும்.