பங்குச்சந்தை, சரிவு காத்திருக்கிறதா ?


இந்திய பங்குசந்தைகள் resistance zone என்று சொல்லக்கூடிய 5950 புள்ளிகளை  தாண்ட  முடியாமல் திணறி  வருகின்றது. இதனை மேலே உள்ள படத்தில் காணலாம், இவை  சென்ற  வருடம் (2011) march  மற்றும்  april  மாதங்களில் வந்த உச்ச புள்ளிகளாகும் (pivot high )

sensex  மற்றும்  nifty ஆகிய இரண்டுமே  weekly  மற்றும் daily  சார்ட்டில் insideday pattern form ஆகி உள்ளது .nifty weekly  level  ஆன 5940-5820 , உடைக்கும் பக்கம் பங்குசந்தைகள் செல்லும் வாய்ப்பு அதிகம்  

ஓய்வு பெறுகிறார் ரத்தன் டாடா;வருகிறார் சைரஸ் மிஸ்ட்ரி

பாரம்பரிய வர்த்தக நிறுவனமாகத் திகழ்ந்த டாடா குழும நிறுவனத்தை நூறு பில்லியன் டாலர் அளவுக்கான உலகளாவிய வர்த்தக சாம்ராஜ்யமாக மாற்றிய பெருமை கொண்டவர் ரத்தன் டாடா. நாட்டிலும் உலக அளவிலும் புகழ் மிக்க நிறுவனமாகத் திகழும் டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நாளை வெள்ளிக் கிழமையுடன் ஓய்வு பெறுகிறார் ரத்தன் டாடா. இந்தியாவின் மிகப் பழைமையான வர்த்தக சாம்ராஜ்யத்தில் அவருடைய 50 வருட தலைமை ஓட்டம் நாளையுடன் நிறைவை எட்டுகிறது.

தற்போது 75 வயதை எட்டும் ரத்தன் டாடா, தன்னுடைய பொறுப்புகளை 44 வயதான சைரஸ் மிஸ்ட்ரியிடம் ஒப்படைக்கிறார். சைரஸ் மிஸ்ட்ரி சென்ற வருடம் தலைமைப் பொறுப்புக்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ரத்தன் டாடா 21 வருடங்கள் குழும தலைவராக இருந்துள்ளார். 1991ம் ஆண்டு    ஜேஆர்டி டாடாவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். தற்போது பொறுப்பேற்கும் மிஸ்ட்ரி, ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் குடும்ப உறுப்பினர். இவர்கள் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18% பங்குகளைக் கொண்டிருப்பவர்கள். இவர் ஐந்து நபர் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டிருப்பவர்.


ரத்தன் டாடாவின் காலத்தில் டாடா குழுமம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. நூறு பில்லியன் டாலர் அளவுக்கு (475,721 கோடி ரூபாய்) அளவுக்கு 2011-2012 கால கட்டத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. 1991ல் இந்த நிறுவனத்தின் வருவாய் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியாக இருந்தது.

இங்கிலாந்திலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் பட்டப் படிப்பை முடித்தார் ரத்தன் டாடா. பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை மேலாண்மையில் பட்டம் பெற்றார்.

டாடா குழுமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் உள்ளடக்கிய டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளை திறம்பட நிர்வகித்துள்ளார் ரத்தன் டாடா. இவர் கடந்த 1991ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார். பல்வேறு சமூக சேவைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ரத்தன் டாடாவுக்கு பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

2013ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2013ம் ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு அமைப்பான கோல்ட்மேன் சேக்ஸ் கணித்துள்ளது.

இந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.4 சதவீதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட 9 சதவீத வளர்ச்சியைத் தொட்ட இந்தியா கடந்த 3 ஆண்டுகளாக தடுமாறிக் கொண்டுள்ளது. இதற்கு உள்நாட்டுக் காரணங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் தொடர்ந்து வரும் பொருளாதாரத் தேக்கமுமே காரணமாகக் கூறப்படுகின்றன.

சமீபத்தில் மத்திய அரசு எடுத்த சில அதிரடி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, இந்திய வளர்ச்சி அடுத்த ஆண்டு 6.5 சதவீதத்தை எட்டும் என்றும், 2014ம் ஆண்டில் இது 7.2 சதவீதமாக உயரும் என்று கோல்ட்மேன் சேக்ஸ் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சதவீத வளர்ச்சியும் கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் .

நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.5% ஆக அதிகரிப்பு:

                               இதற்கிடையே இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகும். நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.5 சதவீதம் வரை இருந்தால் தாங்க முடியும். ஆனால், பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருப்பது கவலை தரும் விஷயமாகும்.



தங்கம் மற்றும் வெள்ளி


கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி சர்வதேச சந்தைகளில் நல்ல இறக்கம் கண்டு வருகிறது



அமெரிக்கா அரசின்  நிதி கொள்கைகளால் இவ்விரண்டு உலோகங்களும் சில மாதங்களில்  நல்ல ஏற்றம் காணும் வாய்ப்பு உள்ளது



இறக்கத்தை பயன் படுத்தி முதலீட்டாளர்கள் வாங்கி  வைக்கலாம் 

அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு



நடப்பு டிசம்பர் மாதம், 3 முதல், 7ம் தேதி வரையிலுமாக அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 6,147 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,'செபி' தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில், மத்திய அரசு, பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

கணக்கீட்டு காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 20,314 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. விற்பனை:அதேசமயம், 14,167 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. இதையடுத்து, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 6,147 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.

அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது போலவே, கடன் பத்திரங்களிலும் அதிகளவில் முதலீடு மேற்கொண்டு வருகின்றன. நடப்பாண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்களில், 31,155 கோடி ரூபாயை முதலீடு செய்துஉள்ளன.


துணை கணக்கு:நடப்பாண்டில், இதுவரையிலுமாக, இந்நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.சென்ற 7ம் தேதி வரையிலுமாக, 1,749 அன்னிய நிதி நிறுவனங்கள்,'செபி' அமைப்பிடம் பதிவு செய்து கொண்டுள்ளன. இந்நிறுவனங்களின் துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,306 ஆக உள்ளன.

ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா

ஊழல்கள் நிறைந்த நாடுகளில் 36-வது இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இது உலக அளவில் 94 ரேங்க் பெற்றுள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.உலக அளவில் அரசுத்துறை, பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் ஊழல்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஊழல்கள் நிறைந்த நாடுகள் எவை என்பது குறித்து ,டி.ஐ.ஐ. எனப்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் இந்தியா என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை வெளியிட்டது. அதன்படி 2012-ம் ஆண்டு வரை மொத்தம் உள்ள 182 நாடுகளில் இந்தியா 36 இடத்தில் உள்ளது. இது உலக அளவில் 94வது ரேங்க் ஆகும்.

உலக அளவில் ஊழல்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் 10 நாடுகள் பட்டியலில் ஆப்ரிக்க நாடான சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.ஊழல்கள் குறைந்த உள்ள நாடுகளில் பின்லாந்தும், நியூசிலாந்தும் உள்ளன.


 இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2011-ம் ஆண்டு 182 நாடுகளில் ஆய்வு செய்ததில் இந்தியா 95-வது ரேங்க் பெற்றிருந்தது. இந்தாண்டு 176 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்தியா 94 ரேங்க் பெற்று 36 இடத்திலும், தொடர்ந்து சீனா 39 இடத்திலும், பாகிஸ்தான் 27 இடத்திலும் உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக 2-ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஊழல், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஊழல், காமல்வெல்த் போட்டிகளில் ஊழல் போன்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தற்போது இந்தியாவில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றன.


சரிவிலிருந்து மீளுமா மைக்ரோசாப்ட் ?



விண்டோஸ் கணினி இயக்க மென்பொருள் வரிசையின் புதிய தலைமுறை வரவான WINDOWS-8  மைக்ரொஸாஃப்ட்  வெளியிட்டு  உள்ளது .

முதல் தடவையாக தாமாகவே உற்பத்தி செய்துள்ள டேப்லட் ரக கணினி ஒன்றையும் மைக்ரோஸாஃப்ட் வெளியிட்டு  உள்ளது. இதற்கு  SURFACE  என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கணினி மென்பொருள் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோஸாஃப்டுக்கு இது வாழ்வா சாவா என்பது மாதிரியான ஒரு தருணம் ஆகும்.
நவீன கைத்தொலைபேசிகளே கணினிகளாக மாறிவிட்ட நிலையில் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தால் முன்னைப்போல மென்பொருள் உலகில் கோலோச்ச முடியவில்லை.
ஆப்பிள், கூகுள் ஆண்ட்ராய்டு போன்றவற்றுடன் போட்டிபோட விண்டோஸ் திணறிவருகிறது.
மைக்ரோஸாஃப்டின் சறுக்கலை தடுக்க அவர்களுக்கு கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம் இது என்று கூறப்படுகிறது.

தொடுதிரைக் கணினிகள்


நவீன கைத்தொலைபேசிகளும் டேப்லட் கணினிகளிலும் தொடுதிரை என்பது எப்படி பிரபலமாகிவிட்டதோ அதேபோல மேஜையில் வைத்து வெலைபார்க்கும் கணினிகள் மடிக் கணினிகள் ஆகியவற்றிலும் தொடுதிரை பிரபலம் அடையும் என்று நம்பி மைக்ரோஸாஃப்ட் இந்த பரீட்சையில் இறங்கியுள்ளது.
தொடுதிரை அம்சத்தோடு வரக்கூடிய புதிய தலைமுறைக் கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது விண்டோஸ் 8 ஆகும்.
ஆனால் எப்போதும்போல கீபோர்ட் மவுஸ் பயன்படுத்தியும் இவற்றைப் பயன்படுத்த முடியும்.
தவிர டேப்லட், ஸ்மார்ட்ஃபோன் போன்ற சிறிய கணினிகளிலும் இவற்றைப் பயன்படுத்திவிட முடியும்.

வடிவமைப்பில் மாற்றங்கள்

விண்டோஸ் மென்பொருளின் தோற்றத்தில் இம்முறை பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
விண்டோஸின் முந்தைய வடிவங்கள் அனைத்திலும் காணப்பட்ட ஸ்டார்ட் பொத்தான் விண்டோஸ் 8ல் கிடையாது.
மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த மென்பொருள் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.
தனி நபர் கணினி என்று வரும்போது சந்தையில் மிகப் பெரிய பங்கை மைக்ரோஸாப்ட் வைத்திருக்கிறது.

சரிவில் மைக்ரொஸாஃப்ட்

ஆனால் அவ்வகைக் கணினிகளை மக்கள் பயன்படுத்துவதென்பது மிக வேகமாக குறைந்துகொண்டு வருகிறது. ஏனென்றால் இன்றைக்கு கணினியில் செய்யும் அத்தனை வேலையையும் கைத்தொலைபேசியில் செய்துவிடலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் ஐபேட், கூகுளின் அண்ட்ராய்ட் மென்பொருளில் இயங்கும் ஏராளமான கைத்தொலைபேசிகள், டேப்லட்கள் போன்றவைதான் இன்று சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
கணினி இயக்க மென்பொருளில் 70 சதவீதமாக இருந்த மைக்ரோஸாப்டின் சந்தைப் பங்கு நான்கே வருடங்களில் 30 சதவீதமாகக் குறைந்துவிட்டுள்ளது.
ஆனால் இந்த புதிய விண்டோஸ் வந்து அந்தச் சரிவை சரிகட்டிவிடும் என்று மைக்ரோஸாஃப்டின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் பால்மர் கூறுகிறார்.

விஷப் பரீட்சை?

மைக்ரோஸாஃப் இறங்கியுள்ள இந்தப் பரீட்சையில் ஆபத்துகளும் இல்லாமல் இல்லை. கணினிகள், லேப்டாப்புகள் போன்றவற்றில் தொடுதிரை இருப்பதை நுகர்வோர் விரும்பாமல் போகவும் வாய்ப்பு உண்டு.
மேலும் முந்தைய விண்டோஸ் வடிவங்களுக்கு பெருமளவில் மாறுபட்டதாக வந்திருக்கின்ற இந்த வடிவத்தைக் கண்டு, பலகாலமாக விண்டோஸ் பயன்படுத்திவருபவர்கள் குழம்பிப்போய் விண்டோஸிலிருந்து விலகிச் செல்லக்கூடிய ஆபத்தும் இருக்கத்தான் செய்கிறது.



மின்சாரம்






sensex புதிய உச்சத்தை தொடும்

sensex புதிய உச்சத்தை தொடும் என்று உறுதியாக நாங்கள் கூறி வரும் வேளையில்,உலகின்  இரு முன்னணி நிறுவனங்கள் ,இந்திய பற்றிய தங்களது ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளன


1.jp overweight on india in BRIC countries

2.morgan stanley sets sensex target 23000 by december 2013 and there-on 280000 





சூடு பிடிக்குமா பங்குச்சந்தை?

இந்திய பங்குசந்தைகள் கடந்த சில நாட்களாக நிச்சயமற்ற நிலையில் உள்ளது ,இந்நிலை விரைவில் மாறி  காளையின் பிடிக்கு வரும் ஏன  (bull market) எதிர்பார்க்கபடுகிறது 

இந்திய அரசு எடுத்து வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வலுவடையும்,  இதன் பிரதிபலிப்பாக பங்குசந்தைகள் உயரும் வாய்ப்பு அதிகம் உள்ளது 


நீண்ட கால  நோக்கில் dlf,hdil,ibreal,ifci,crompton greaves, bhel,rcom,idbi,bharti airtel,brigade enterprises,pfs,sbin,reliance,போன்ற பங்குகளை  வாங்கி ஆதாயம் அடையலாம் 

ஒரு லட்சம் ஏ.டி.எம்.,கள் நிறுவ வங்கிகள் திட்டம்


அடுத்த நான்கு ஆண்டுகளில், ஒரு லட்சம், ஏ.டி.எம்.,களை அமைக்க, வங்கிகள் திட்டமிட்டு உள்ளன. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை, வங்கிகள் அறிமுகப்படுத்தின. இந்த வகையில், முதன் முதலாக, எச்.எஸ்.பி.சி., வங்கி மும்பையில், தானியங்கி பணம் வழங்கும் (ஏ.டி.எம்.,) இயந்திரத்தை, 1988ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அடுத்தடுத்து, ஏ.டி.எம்.,களை பெருமளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் வரையில், 99 ஆயிரத்து 218 ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டு உள்ளன.கடந்த, 2016ம் ஆண்டுக்குள் ஏ.டி.எம்.,கள் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தொடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புதிதாக அமைக்கப்படும் ஏ.டி.எம்.,களுக்கு, 50 சதவீதம் முதல், 60 சதவீதம் வரை, இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

"இந்திய ஏ.டி.எம்., தொழிலும்; அடுத்த கட்டத்திற்கான வளர்ச்சியும்' என்ற தலைப்பில், ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்திய மக்கள் தொகையில், பெரும்பகுதியான மக்கள், வங்கி வசதி இல்லாத இடங்கள், மற்றும் குறைவான வங்கிகள் உள்ள இடங்களில்தான் வசிக்கின்றனர். வங்கிகள் பெரும்பாலும், நகர்ப்புறங்களில் தான், கிளைகளை அமைப்பதில், முக்கியத்துவம் காட்டுகின்றன. எனவே, வங்கிகள் இல்லாத இடங்களில், ஏ.டி.எம்., வசதிக்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்தது.வங்கிகள், அடுத்த நான்கு ஆண்டுகளில், கிராமப் புறங்களிலும், நடுத்தர நகரங்களிலும், ஏ.டி.எம்.,களை விரிவுபடுத்த வேண்டும் என, இந்த ஆய்வில், வலியுறுத்தப்பட்டு உள்ளது.

"பிரிமியம்' வகை பெட்ரோல், டீசல் உற்பத்தி நிறுத்தப்பட்டது


பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், "பிரிமியம்' வகை பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, தெரிய வந்துள்ளது.சாதாரண வகை பெட்ரோல், டீசலை விட,"பிரிமியம்' வகைகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், நுகர்வோர் எவரும் இவ்வகை பெட்ரோல், டீசலை வாங்குவதில்லை.இதன் காரணமாகவே, எண்ணெய் நிறுவனங்கள், இவற்றின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, கூறப்படுகிறது.

 சென்ற மாதம், மத்திய அரசு, சாதாரண வகை பெட்ரோல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு, 5.50 ரூபாய் குறைத்து, 9.28 ரூபாயாக நிர்ணயித்தது. அதேசமயம், உயர் வகை பெட்ரோல் மீதான கலால் வரியில் எவ்வித மாற்றமும் செய்யாமல், 15.96 ரூபாய் என்ற அளவிலேயே வைத்துள்ளது. இதேபோன்று, உயர் வகை டீசல் மீதான கலால் வரியும் குறைக்கப்படவில்லை.விலை உயர்வுக்கு பிறகு, டில்லியில், உயர் வகை டீசலின் விலை, லிட்டருக்கு, 43 சதவீதம் அதிகரித்து, 65.81 ஆகவும், பெட்ரோல் விலை, லிட்டருக்கு 9 சதவீதம் உயர்ந்து, 77.58 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேசமயம், ஒரு லிட்டர் சாதாரண வகை, பெட்ரோலின் விலை, 67.90 ஆகவும், மானிய விலையில் விற்கப்படும், டீசல் விலை, 46.95 ரூபாயாகவும் உள்ளன.அதிக விலை வித்தியாசத்தால், உயர் வகை டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை முழுவதுமாக நின்று விட்டது. எனவே, எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், இவற்றின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனர் (சந்தைப்படுத்துதல்) மார்க்கண்ட் நீனி,  தெரிவித்தார்.

வங்கிகளின் நிகர வசூலாகாத கடன்ரூ.2 லட்சம் கோடியை தாண்டும்


 மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நடப்பு முழு நிதியாண்டில், இந்திய வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என, அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.கடன் ஒதுக்கீடு அதிகரிப்பு, சொத்து மதிப்பில் ஏற்படும் மாறுதல், மூலதனம் திரட்டுவதில் உள்ள சவால்கள் போன்றவற்றால், வங்கித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு, நடப்பு பற்றாக்குறை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையின் தாக்கத்தையும் சமாளிக்க வேண்டிய நிர்பந்தம், வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இது போன்ற காரணங்களால், வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து, அவற்றின் நிகர லாபமும் குறைந்துள்ளது.

மின்சாரம், விமானச் சேவை, நெடுஞ்சாலை, நுண் கடன் நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறை, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளில் இருந்து, வங்கிகளுக்கு கடன் தொகை முழுமையாக திரும்ப வராத நிலை உள்ளது.இதன் விளைவாக, சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலத்தில், வங்கிகளின் வசூலாகாத கடன், 2.94 சதவீதம் அதாவது, 1.57 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள முழு நிதியாண்டில், 3.75 சதவீதம் அதாவது, 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

பொன்மொழிகள்


ஒன்று நிகழப் போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது. -யாலப் தாம்சன்.


தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்கு கண்ணியம் தொடங்குகிறது. -பங்.


முயற்சி என்பது இதயத்துள் உண்டாகும் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோள் அது. -தாகூர்.


கோழைகளைத் தவிர வேறு யாரும் பொய் சொல்வதில்லை. -மர்பி.


அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள். -டிரைடன்.


வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும் -பீசீசர்.


நீயும் உடன்படாவிடில், நீ தாழ்ந்தவன் என்ற உணர்வை உன் மேல், எவராலும் எங்கும் சுமத்த முடியாது. -எலினார் ரூஸ்வெல்ட்.


நீங்கள் விரும்பும் உரிமைகளை எல்லாம் பிறருக்கும் அளித்து விடுங்கள். - இங்கர்சால்.


மரியாதையாகப் பேசுவதும், நடப்பதுவும் செலவில்லாத செல்வங்கள். - செர்வாண்டில்.


ஓடுவதில் பயனில்லை, நேரத்தில் புறப்படுவதே தேவை. - ஜீந்தொஃபோன்தேன்.


ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பிரயாணம் மிகக் கடினம். ஆனால் திரும்பி வருவது எளிது. -ஜப்பான்.


பூமியில் குடிசை கட்டுவதற்கு சக்தியற்ற சிலர், ஆகாயத்தில் அநேக அரண்மனைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். -வேல்ஸ்.


தொடர்ந்து மூன்று நாள் பசித்துக் கிடந்தால், ஒரு மனிதன் திருடவும் துணிவான். -கொரியா.


உங்கள் சந்ததியினருக்குச் சரியான இரண்டு வழிகளைச் சொல்லிக் கொடுங்கள். அவை இலக்கியமும் விவசாயமும். -சீனா.


தண்டிக்கப்படுகிறவன் திருடனல்ல. திருடிவிட்டு அகப்பட்டுக் கொள்கிறானே அவன்தான் திருடன். -செக்கோஸ்லோவேகியா.


பொய்யினால் வரும் இன்பத்தை விட உண்மையால் வரும் துன்பம் எத்தனையோ வகைகளில் சிறந்தது. -டென்மார்க்.


வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு பரீட்சை. அதன் முடிவை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது. -துருக்கி.


உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது. - நைஜீரியா.


நூறு ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய். நாளையே இறந்து விடுபவனைப் போல் சிந்தனை செய். - பல்கேரியா.


பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்விதம் அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்க வேண்டும். - பிரான்ஸ்.


இனிப்புப் பண்டங்கள் உடலைக் கெடுக்கின்றன. புகழ் சிறந்தவர்களையும் கெடுத்து விடுகிறது. - பின்லாந்து.


மரம் ஏறத் தெரியாதவன் குரங்கை நம்பி பணத்தைக் கொடுக்கக் கூடாது. - பெல்ஜியம்.


இளமை முதுமையை நோக்கி விரைகிறது. இன்பம் துன்பத்தை நோக்கி நகருகிறது. -ருமேனியா.

சீர்திருத்த நடவடிக்கைகளால் அன்னிய நிறுவனங்கள் ரூ.88,000 கோடி பங்கு முதலீடு


மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்திய பங்குச் சந்தையில், நடப்பாண்டில், இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் 1,600 கோடி டாலர் (88 ஆயிரம் கோடி ரூபாய்) முதலீடு மேற்கொண்டுள்ளன.இது குறித்த புள்ளி விவரத்தை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ளது. ஆசிய நாடுகள்:அதில், நடப்பு ஆண்டு, செப்., 28ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில்,1,611 கோடி டாலர் (ரூ.88,605 கோடி) அளவிற்கு நிகர முதலீடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நடப்பு செப்டம்பர் மாதம் மட்டும், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில், 382 கோடி டாலர் (21,010 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளன.


இந்தவகையில், நடப்பாண்டில், ஆசிய நாடுகளிலேயே, இந்திய பங்குச் சந்தைகளில் தான், அதிக அளவில் அன்னிய முதலீடு குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திடீர் எழுச்சிக்கு, உள்நாட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்த திட்டங்களும், வெளிநாட்டு மத்திய வங்கிகளின் நடவடிக்கைகளால், சர்வதேச பணப்புழக்கம் உயர்ந்துள்ளதுமே காரணம் என, பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்."சென்செக்ஸ்' :நடப்பு ஆண்டில், ஆசிய அளவில், இந்திய பங்குச் சந்தையின், "சென்செக்ஸ்' மற்றும் தேசிய பங்குச் சந்தையின், "நிப்டி' குறியீட்டு எண்களின் வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.நடப்பாண்டு, பிப்ரவரி மாதம், மிக அதிக அளவாக, 500 கோடி டாலருக்கும் அதிகமாக, இந்திய பங்குச் சந்தையில், அன்னிய முதலீடு குவிந்தது.

இது, மார்ச் மாதம் 150 கோடி டாலராக குறைந்தது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து, முறையே 10.30 கோடி டாலர் மற்றும் 27.30 கோடி டாலர் அளவிற்கு, முதலீடுகளை திரும்பப் பெற்றன.இந்த நிலையில், ஜூலை மாதம், மீண்டும் அன்னிய முதலீடு அதிகரித்தது. அன்னிய முதலீட்டாளர்கள் 200 கோடி டாலருக்கும் அதிகமாக இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தனர்.நடப்பாண்டில், பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீடுகளை பொறுத்தவரையில், சீனா நீங்கலான ஆசிய நாடுகளில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து, தென்கொரியா, 1,309 கோடி டாலர் அன்னிய முதலீடுகளை ஈர்த்து, இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜப்பான்:இதர ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள், தலா 200 - 400 கோடி டாலர் அளவிற்கு அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளன.வழக்கமாக, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுகளை, அதிக அளவில் ஈர்க்கும் ஜப்பான் நாட்டின் பங்குச் சந்தையில், நடப்பாண்டில், இதுவரை 369 கோடி டாலர் அளவிற்கு மட்டுமே அன்னிய முதலீடு குவிந்துள்ளது.

இந்திய பங்குச் சந்தையின் அண்மைக்கால எழுச்சி காரணமாக, பல ஆய்வு நிறுவனங்கள், "சென்செக்ஸ்' குறியீடு குறித்த இலக்கை உயர்த்தியுள்ளன.மார்கன் ஸ்டேன்லி நிறுவனம், 2013ம் ஆண்டு டிசம்பருக்குள், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', 23,069 புள்ளிகளை எட்டும் என, மதிப்பீடு செய்துள்ளது. இது, இதுவரை எட்டாத நிலையாகும்.கடைசியாக, கடந்த 2008ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி,"சென்செக்ஸ்' 21,206.77 புள்ளிகளை எட்டியிருந்தது. இதுவே, அதிகபட்ச அளவாகும். வரும் ஆண்டு, இதை விட அதிகமாக உயரும் என,மார்கன் ஸ்டேன்லி மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூடு பிடிக்கும் வர்த்தகம்:அன்னிய முதலீடு அதிகரித்து வருவதால், இந்திய பங்குச் சந்தைகளின் தினசரி வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், செப்டம்பர் மாதத்தில், அன்றாடம் சராசரியாக 14,150 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, சென்ற பிப்ரவரியில், மிகவும் அதிகபட்சமாக 19,887 கோடி ரூபாயாக இருந்தது.மே - ஆகஸ்ட் வரையிலான நான்கு மாதங்களில், தினசரி வர்த்தகம், சராசரியாக 12,000 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே நடைபெற்றது.

பணக்காரன்


ஒரு பணகாரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்க கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்து சென்று இரு தினங்கள் தங்கிவிட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான் :

அப்பா நம் வீட்டில் ஒரே ஒரு நாய் இருக்கிறது கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன.......,
நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம் அந்த கிராமத்தில் எண்ணில் அடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது......, நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது......, நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம் அவர்கள் உடனடியாக சூடு மாறாத பாலை கறந்து சாபிடுகிரர்கள்...., நாம் வாடிய காய்கறிகளை சாப்பிடுகிறோம் அவர்கள் செடியில் இருந்து பறித்து பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிர்றார்கள் ......., நாம் வீட்டை சுற்றி compound கட்டி பாது காக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிகொண்டே சென்றான்....மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது....

தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று.....!!!

அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் ரூ.3,000 கோடி முதலீடு




கடந்த இரு வாரங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,) இந்திய பங்குச் சந்தைகளில், 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இதையடுத்து, நடப்பு ஆண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில் செய்துள்ள முதலீடு, 65,954 கோடி ரூபாயை எட்டியுள்ளது.


பன்முக சில்லரை வர்த்தகத்தில், 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி மற்றும் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களில், 49 சதவீத அளவிற்கு, வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள், பங்குகளை வாங்க ஒப்புதல் ஆகியவற்றிற்கு மத்திய அரசு, அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக, வரும் மாதங்களில், அன்னிய முதலீடு மேலும் சிறப்பான அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது 

நிறுவனங்களின் முன் கூட்டிய வரியில் முன்னேற்றம்



நடப்பு 2012-13ம் நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்துள்ளது. இந்திய நிறுவனங்கள், ஒரு நிதியாண்டிற்கு, நான்கு தவணைகளில், முன்கூட்டிய வரியை செலுத்துகின்றன.இவ்வகையில், நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் 15ம் தேதிக்குள் (இரண்டாவது தவணை), நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட அதிகரித்துள்ளது.

பெரும்பான்மையான நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் செலுத்திய வரி நல்ல அளவில் உயர்ந்துள்ளது."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்' என்பது போல, இதுவரை முன்கூட்டிய வரி செலுத்தியுள்ள நிறுவனங்களுள், எல்.ஐ.சி., நிறுவனம், இரண்டாவது காலாண்டில், செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி, 1,300 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 1,165 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலாண்டுகளில், எச்.டீ.எப்.சி. பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, 2.38 சதவீதம் அதிகரித்து, 800 கோடி ரூபாயிலிருந்து, 1,100 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, 4.97 சதவீதம் வளர்ச்சிகண்டு, 650 கோடி
ரூபாயிலிருந்து, 815 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

பொதுத் துறையை சேர்ந்த பேங்க் ஆப் பரோடா செலுத்திய வரி, 600 கோடி ரூபாயிலிருந்து, 620 கோடி ரூபாயாகவும், தேனா பேங்க் செலுத்திய வரி, 77 கோடி ரூபாயிலிருந்து, 180 கோடி ரூபாயாகவும் அதிகரித்துஉள்ளன. வெளிநாட்டு வங்கியான சிட்டி பேங்க் செலுத்திய வரி, 100 கோடி ரூபாயிலிருந்து, 400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நுகர்பொருள் துறையில், முன்னணியில் உள்ள இந்துஸ்தான் யூனிலீவர் செலுத்திய வரி, 190 கோடி ரூபாயிலிருந்து, 300 கோடி ரூபாயாகவும், அம்புஜா சிமென்ட்ஸ் செலுத்திய வரி, 95 கோடியிலிருந்து, 160 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.


மோட்டார் வாகனத் துறையை சேர்ந்த மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், செலுத்திய முன்கூட்டிய வரி, 176 கோடி ரூபாயிலிருந்து, 200 கோடி ரூபாயாக வளர்ச்சிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நிறுவனம், செலுத்தும் முன்கூட்டிய வரியை வைத்து, அக்காலாண்டில், அந்நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அதாவது, குறிப்பிட்ட காலாண்டில், ஒரு நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்திருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் நல்ல அளவில் உயர்ந்திருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

பார்த்தேன் ரசித்தேன்


விவசாயி......


தங்கம் உற்பத்தி 2 டன் இறக்குமதி 900 டன்

உள்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக, இரண்டு டன் தங்கம் உற்பத்தி ஆகிறது. அதேசமயம், இதன் இறக்குமதி ஆண்டுக்கு, 900 டன் என்ற அளவில் உள்ளது


வெளிநாடுகளில், குறைந்தபட்சம் ஆறு மாதம் தங்கி, தாய் நாடு திரும்பும் ஒருவர், உரிய சுங்க வரி செலுத்தி, ஒரு கிலோ தங்கம் கொண்டு வர அனுமதி உள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தங்க இறக்குமதி, 1,067 டன்னாக இருந்தது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 969 டன்னாகவும், 2009-10ம் நிதியாண்டில், 850 டன்னாகவும் இருந்தது.


வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், மத்திய அரசு, தங்கம் இறக்குமதி மீதான வரி விகிதங்களை உயர்த்தியது. இதனால், நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, தங்க இறக்குமதி, 204 டன் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது

கம்ப்யூட்டர் விற்பனை 15 சதவீதம் வளர்ச்சி


:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 1.24 கோடியாக அதிகரிக்கும். இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (1.18 கோடி கம்ப்யூட்டர்கள்) 15 சதவீதம் அதிகமாகும் என, தகவல் தொழில்நுட்ப சாதன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச பொருளாதார மந்த நிலையால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், கம்ப்யூட்டர் விற்பனை மந்தமடைந்துள்ளது.

சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவில், 1.18 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது, முந்தைய நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (93 லட்சம் கம்ப்யூட்டர்கள்) 16 சதவீதம் அதிகமாகும்.
தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், "ஹார்ட் டிஸ்க்' சாதனத்திற்கு அதிக தட்டுப்பாடு காணப்பட்டது. மேலும், பணவீக்கம் அதிகரிப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் சரிவு போன்ற காரணங்களால், சென்ற நிதியாண்டில், கம்ப்யூட்டர் விற்பனை குறைந்த அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது.

தொலைபேசி பயன்படுத்தும் 96.55 கோடி சந்தாதாரர்கள்


சென்ற ஜூன் மாத முடிவில், மொபைல் சேவை நிறுவனங்கள் 47 லட்சத்து 30 ஆயிரம் புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 96 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.இதில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 93 கோடியே 40 லட்சத்து 9 ஆயிரம் ஆகும். தரைவழி இணைப்பு பெற்ற தொலைபேசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். இந்தியாவில் 100க்கு 77 பேர் தொலைபேசி பயன்படுத்துபவர்களாக உயர்ந்துள்ளனர். இந்த தகவல்களை ட்ராய் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது.

ஜூனில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைப் புதிய சந்தாதாரர்களாக இணைத்துக் கொண்டுள்ளது. ஜூன் முடிவில், இந்நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 73 லட்சமாகும். இரண்டாவது இடத்தில் வோடபோன் நிறுவனம் 12 லட்சத்து 20 ஆயிரம் பேரை புதிதாய் இணைத்துள்ளது. இந்நிறுவனத்தில் ஜூன் மாத இறுதியில் உள்ள சந்தாதாரர் எண்ணிக்கை 15 கோடியே 37 லட்சம்.

இந்த நிறுவனங்களை அடுத்து டாட்டா டெலி சர்வீசஸ் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்கள் உள்ளன. உரிமத்தை இழந்த பின்னரும், யூனிநார் நிறுவனம் 5 லட்சம் பேரை புதிய சந்தாதாரர்களாகப் பெற்றுள்ளது. ஜூன் மாதத்தில் 41 லட்சத்து 60 ஆயிரம் பேர், எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்ற விண்ணப்பித்தனர்.

பங்கு சந்தைகளில் அன்னிய முதலீடு


நடப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் 10ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு, 4,794 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது என,"செபி' அமைப்பு தெரிவித்துள்ளது.
விற்பனை:மதிப்பீட்டு காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 17,544 கோடி ரூபாயை பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அதேசமயம், 12,750 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 4,794 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த ஜூலை மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கு சந்தைகளில், 10,273 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. அதேசமயம், சென்ற ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 1,957 கோடி ரூபாயை விலக்கி கொண்டன.


நடப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் 10ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்களில் மேற்கொண்டிருந்த முதலீட்டிலிருந்து, 143 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளன. இதே காலத்தில், மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், 321 புள்ளிகள் அல்லது 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடன் பத்திரங்கள்:நடப்பாண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், ஒட்டு மொத்த அளவில், பங்கு சந்தைகளில், 57,060 கோடி ரூபாயும், கடன் பத்திரங்களில், 24,109 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன.

மதிப்பீட்டு காலத்தில், "செபி' அமைப்பிடம், பதிவு செய்து கொண்ட, அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,767லிருந்து, 1,756 ஆக குறைந்துள்ளது. அதேசமயம், பதிவு செய்து கொள்ளப்பட்ட துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,278லிருந்து, 6,362 ஆக உயர்ந்துள்ளது.

சந்தை எங்கே செல்கிறது?





நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பு வாரத்தில், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும், ஒட்டு மொத்த அளவில், பங்குச் சந்தையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.சென்ற வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 3 புள்ளிகள் குறைந்து, 17,557.74 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 2.55 புள்ளிகள் சரிவடைந்து, 5,320.40 புள்ளிகளிலும் நிலைகொண்டன. ஒட்டு மொத்த அளவில், "சென்செக்ஸ்' 144.78 புள்ளிகள் அதிகரித்திருந்தது.

கொள்கை திட்டங்கள்:மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள சிதம்பரம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கொள்கை திட்டங்களில் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். மேலும், கையிருப்பில் உள்ள உணவு தானியங்களை பயன்படுத்தி, விலை உயர்வை கட்டுக்குள் வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்பதுடன், இறக்குமதி மூலம், பற்றாக்குறையும் சமாளிக்கப்படும் என்று தெரிவித்தார். நிதியமைச்சரின் அறிவிப்புகள், நம்பிக்கை அளிப்பதாக இருந்ததையடுத்து, பங்கு வர்த்தகத்தில், முன்னேற்றம் காணப்பட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து, வெவ்வேறு அமைப்புகள், மாறுபட்ட புள்ளி விவரத்தை அளித்து வருகின்றன. இந்நிலையில், சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, மைனஸ் 1.8 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், சென்ற மே மாதத்தில், தொழில்துறை உற்பத்தி, 2.5 சதவீதம் என்றளவிலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 9.5 சதவீதம் என்றளவிலும் வளர்ச்சிகண்டிருந்தது.
பல்வேறு அமைப்புகள், சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 3.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டிருந்தன. ஆனால், இந்த மதிப்பீடுகளை எல்லாம், பொய்யாக்கும் வகையில், தொழில் துறை குறியீட்டு எண், பின்னடவை கண்டுள்ளது. இதனால், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில், இந்திய பங்கு சந்தைகளில், வர்த்தகம் சுணக்கம் கண்டது.

உலக சந்தைகள்:இந்திய பங்கு சந்தைகளில், வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது என்றாலும், ஒட்டுமொத்த அளவில், 1.9 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இதர நாடுகளிலும், பங்கு வியாபாரம் பொதுவாக நன்கு இருந்தது என்றே சொல்லலாம். இதற்கு எடுத்து காட்டாக, ஜெர்மன் நாட்டின் பங்கு வர்த்தகம், 4.6 சதவீதம் உயர்ந்திருந்தது.
இதையடுத்து, சீனா (2 சதவீதம்), ஜப்பான் (2.8 சதவீதம்), இங்கிலாந்து (3 சதவீதம்), ஹாங்காங் (2.3 சதவீதம்), அமெரிக்கா (3 சதவீதம்), சிங்கப்பூர் (0.6 சதவீதம்) என்றளவில் உயர்ந்திருந்தது.


மூலப்பொருட்களின் விலை உயர்வு, வட்டி செலவினம் அதிகமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும், சென்ற ஜூலை மாதத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வாகன விற்பனை, 7.53 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து, சென்ற வியாழனன்று, செய்தி வெளியானதை அடுத்து, அன்றைய தினம், வாகன துறையை சேர்ந்த நிறுவன பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.

நடப்பு கணக்கு பற்றாக்குறை:நாட்டின் இறக்குமதி குறைந்துள்ளதால், நடுத்தர கால அடிப்படையில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2.8 சதவீதமாக நீடிக்க வாய்ப்புள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் நிலையில், அது, அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வதற்கும், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வலுவடைவதற்கும் வழிவகுக்கும். எனவே, இது, சாதகமான அம்சமாகும்.

மருத்துவ துறை:மருத்துவச் சேவையில், தற்போது சென்னை, இந்தியாவில் முன்னணி நகரமாக உருவெடுத்துள்ளது. இங்கு, மருத்துவத்திற்கு சிறப்பான வசதிகள் உள்ளதால், உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், சிகிச்சை மேற்கொள்ள வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இத்துறையில் உள்ள, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம், அடுத்த 30 மாதங்களில், இந்தியா முழுவதிலும் உள்ள அதன் மருத்துவமனைகளில், கூடுதலாக, 3,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. எனவே, நீண்ட கால அடிப்படையில், இந்நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

காலாண்டு முடிவுகள்:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிதிநிலை முடிவுகள் இன்னும் வந்து கொண்டுள்ளன. நடப்பு வாரத்தில் வெளி வந்துள்ள காலாண்டு முடிவுகளில், பவர் பைனான்ஸ், சன் பார்மா, வி.ஐ.பி.இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்கு உள்ளன.பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க ஆப் இந்தியாவின், நிகர லாபம் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், 137 சதவீதம் வளர்ச்சிகண்டு, 3,752 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 16.89 சதவீதம் அதிகரித்து, 27,732 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆனால், வங்கியின் நிகர வசூலாகாத கடன், 1.61 சதவீதத்திலிருந்து, 2.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், இவ்வங்கி, பங்கின் விலை, சென்ற வெள்ளியன்று, 4 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்தது. இருப்பினும், இவ்வங்கியின் வசூலாகாத கடன் அதிகரிப்பு என்பது அதிக இடர்பாடு அளிக்கும் அம்சமாக இருக்காது என்றே சொல்லலாம். எனவே, நீண்ட கால அடிப்படையில், இதன் பங்குகளை வாங்கலாம்.

வாங்கக் கூடிய பங்குகள்:பெட்ரோனெட் எல்.என்.ஜி, சன் பார்மா, தல்வால்கர்ஸ் பெட்டர் வேல்யூ பிட்னெஸ், அப்பல்லோ டயர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டிற்கு ஏற்றவை.

வரும் வாரம் எப்படி?உலகளவில், புதிய பிரச்னைகள் எதுவும் தென்படவில்லை. உள்நாட்டிலும், ஒட்டுமொத்த அளவில், சாதகமான அம்சங்களே தென்படுகின்றன. எனவே, வரும் வாரத்தில், பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படவே வாய்ப்புகள் உள்ளன.

பங்குச்சந்தை: முதலீடு செய்ய சரியான நேரமா?


 இந்திய பங்குசந்தைகள் நீண்ட சரிவிற்கு பின் ஏற்றம் காண தொடிங்கி உள்ளது 

முதலீட்டாளர்கள்   bse 2௦௦ உள்ள சிறந்த பங்குகளை வாங்கி பயன்  அடையலாம்


ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனம் தனது ப்ளூபேர்டு லோகோவை புதிதாக வடிவமைத்திருக்கிறது. இந்த புதிய லோகோவிலும் அதே ப்ளூபேர்டு தான் இருக்கிறது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் இந்த பறவையின் வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்திருக்கிறது. இந்த பறவையின் அலகு வானத்தை பார்த்தது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பறவை ஐந்து இறகுகளை கொண்டிருந்தது. அதில் ஒரு இறகுக்கு கத்தரி போட்டுவிட்டதால், இப்போது இந்த புதிய லோகோவில் நான்கு இறகுகள் தான் உள்ளது. பறவைக்கு ஹேர்கட்டும் செய்யப்பட்டுள்ளது. தலையில் இருந்த குருவி முடியையும் இப்போது காணவில்லை.இருப்பினும் இந்த ட்விட்டர் பறவையின் இந்த புதிய லோகோவை பார்க்கும் போது, மிக சுதந்திரத்துடனும், நட்பு பாராட்டும் வகையிலும் பறப்பது போன்ற உணர்வை கொடு்ப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலீட்டிற்கான பங்குகள்


Company Reco Price Target Price
 (Rs) (Rs) % YTD
Automobiles
Bajaj Auto    Buy 1,500 1761 17 -5.9
Hero Motocorp Buy 1,822 2336 28 -4.4
Mahindra & Mahindra   * Buy 645 836 30 -5.6
Maruti Suzuki Buy 1,074 1415 32 16.7
Tata Motors   * Buy 225 293 31 25.8
Banking-Private Sector
Axis Bank Buy 964 1268 32 19.5
Federal Bank Buy 412 520 26 21.9
HDFC Bank    Neutral 491 601 22 15.1
ICICI Bank    Buy 782 1112 42 14.2
Indusind Bank Buy 297 419 41 31.9
ING Vysya Bank Buy 323 449 39 12.4
J&K Bank    Buy 911 979 8 34.7
Kotak Mahindra Bank* Neutral 543 499 -8 25.6
South Indian Bank Buy 24 30 27 16.6
Yes Bank Buy 323 445 38 35.2
Banking-Public Sector
Andhra Bank Buy 106 152 44 32.4
Bank of Baroda    Neutral 660 776 17 -0.1
Bank of India Neutral 332 387 17 24.6
Canara Bank    Buy 395 545 38 8.7
Corporation Bank    Neutral 411 - - 17.9
Dena Bank Buy 88 143 63 80.5
IDBI Bank Neutral 84 121 44 7.7
Indian Bank Buy 162 224 38 -12
Indian Overseas Bank Neutral 80 - - 9.2
Oriental Bank of Commerce    Buy 228 417 83 16
Punjab National Bank    Buy 727 964 33 -7.2
State Bank   * Buy 2,026 2725 34 25.1
Union Bank Buy 193 277 43 13.9
Banking-NBFC
Dewan Housing Buy 176 365 108 -2.5
HDFC    Buy 644 708 10 -0.9
IDFC Buy 120 147 23 30.6
LIC Housing Fin Buy 234 314 34 5.4
M & M Financial Neutral 635 776 22 4.8
Power Finance Corp Buy 148 200 35 7.6
Rural Electric. Corp. Buy 163 203 25 5.9
Shriram Transport Fin. Buy 513 718 40 22.2
Capital Goods
ABB    Neutral 713 640 -10 22.1
BGR Energy Neutral 276 219 -21 54.6
BHEL    Neutral 207 198 -4 -13.5
Crompton Greaves   * Neutral 108 127 17 -14
Cummins India   * Neutral 420 462 10 20.3
Havells India Buy 529 614 16 37.8
Larsen & Toubro   * Buy 1,135 1405 24 14
Siemens* Neutral 644 698 8 0.3
Thermax   * Neutral 438 361 -18 10.8
Cement
Ambuja Cements Buy 148 199 34 -4.6
ACC    Neutral 1,127 1263 12 -0.8
Birla Corporation Buy 238 307 29 -11.9
Grasim Industries   * Buy 2,244 3156 41 -10.5
India Cements Buy 75 135 81 13.2
Shree Cement Buy 2,365 3043 29 9.1
Ultratech Cement Buy 1,457 1741 19 25.6
Consumer
Asian Paints     Buy 3,777 4057 7 45.6
Britannia Sell 526 469 -11 17.5
Colgate Sell 1,183 931 -21 19.2
Dabur* Neutral 103 104 1 3.4
Godrej Consumer Neutral 559 507 -9 45
GSK Consumer Neutral 2,749 2502 -9 8.2
Hind. Unilever Neutral 419 404 -3 2.7
ITC Buy 234 251 7 16.1
Marico* Buy 169 186 10 16.7
Nestle Neutral 4,569 4150 -9 9.5
Pidilite Inds. Buy 166 186 12 15.8
United Spirits Neutral 583 650 12 18.6
Health care
Aventis Pharma     Neutral 2070 1932 -7 -10.8
Biocon* Neutral 213 251 18 -22.1
Cadila Health Buy 726 889 22 3.1
Cipla     Neutral 309 358 16 -3.4
Dishman Pharma* Neutral 50 88 77 34.1
Divis Labs Buy 909 1170 29 17.2
Dr Reddy’ s Labs    * Buy 1650 1942 18 4.6
Glenmark Pharma* Buy 348 421 21 19.7
GSK Pharma     Buy 1978 2355 19 2.2
IPCA Labs. Buy 342 500 46 24.5
Jubiliant Organosys* Neutral 173 211 22 -3.9
Lupin* Buy 538 585 9 20.3
Opto Circuits Neutral 159 231 45 3.3
Piramal Healthcare* Under Review 434 357 -18 14.2
Ranbaxy Labs    * Neutral 492 500 2 21.4
Strides Arcolab* Buy 683 823 21 70.3
Sun Pharma* Neutral 569 579 2 14.5
Torrent Pharma Buy 605 870 44 13
Infrastructure
Gammon India Neutral 37 117 217 -15.3
GVK Power & Infra Under Review 12 - - 1.6
Hindustan Construction Under Review 17 25 48 2.1
IVRCL Under Review 38 37 -3 35.1
Jaiprakash Associates Buy 62 103 67 17.5
NCC Under Review 30 66 124 -11.5
Simplex Infra. Buy 213 290 36 20.4
Media
Dish TV Neutral 56 58 3 -4.1
HT Media Sell 114 90 -20 -10.6
Jagran Prakashan Neutral 89 99 11 -7.3
Sun TV Buy 227 320 41 -17.4
Zee Entertainment* Neutral 126 115 -9 7
Metals
Adhunik Metaliks Buy 34 97 185 -9.3
Bhushan Steel Neutral 435 370 -15 39.9
Godawari Power & Ispat Buy 117 210 79 61.1
Hindalco   * Buy 116 204 76 0.6
Hindustan Zinc Buy 117 152 30 -2
Jai Balaji Industries* Buy 35 65 87 1.6
JSPL Buy 429 562 31 -5.3
JSW Steel Sell 601 538 -11 18.4
Monnet Ispat Energy* Neutral 398 518 30 10
Nalco Neutral 57 47 -17 13.4
NMDC - 165 221 34 2.6
Prakash Inds Buy 47 99 110 56.4
Rain Commodities Buy 37 89 140 26.3
SAIL Sell 91 101 11 12.5
Sarda Energy & Minerals* Neutral 124 124 0 61.9
Sesa Goa* Neutral 182 256 41 11.6
Sterlite Inds.* Buy 91 139 53 1.8
Tata Sponge Iron* Buy 270 431 60 12.5
Tata Steel* Sell 398 340 -15 18.7
Oil & Gas
BPCL    Buy 694 782 13 44.9
Cairn India Neutral 316 330 4 0.9
Chennai Petroleum Buy 129 213 65 -17.6
GAIL     Neutral 331 420 27 -13.8
Gujarat State Petronet Neutral 71 85 21 -9.4
HPCL     Buy 296 330 12 17.7
IOC     Buy 256 287 12 0.8
Indraprastha Gas Under Review 249 U/R - -33.7
MRPL Neutral 54 65 21 4.2
Oil India Buy 442 565 28 -7.4
ONGC     Buy 246 318 29 -4.1
Petronet LNG Buy 139 185 33 -10.5
Reliance Inds.* Neutral 684 785 15 -1.3
Real Estate
Anant Raj Inds Buy 46 90 95 16
DLF* Buy 182 270 48 -0.4
HDIL Neutral 64 112 76 19.4
Godrej Properties Neutral 568 635 12 -6.8
Indiabulls Real Estate* Buy 51 82 60 9.1
Mahindra Lifespace* Buy 310 410 32 31.3
Oberoi Realty* Buy 256 313 22 22.8
Phoenix Mills* Buy 183 255 39 10.9
Prestige Estates Buy 115 140 22 62.5
Unitech* Buy 21 30 41 10.1
Retail
Jubilant Foodworks Neutral 1,233 1054 -15 63.6
Pantaloon Retail Neutral 139 - - 7.8
Shopper's Stop Neutral 310 356 15 18.9
Titan Industries Neutral 222 247 12 29.7
Technology
HCL Technologies* Buy 490 600 22 26.2
Infosys   * Buy 2,388 2883 21 -13.3
Mphasis* Sell 368 358 -3 22.6
TCS* Neutral 1,225 1237 1 5.5
Tech Mahindra* Neutral 655 710 8 14.3
Wipro   * Buy 401 490 22 0.6
Telecom
Bharti Airtel* Buy 301 390 30 -12.2
Idea Cellular* Buy 76 100 31 -7.1
Reliance Comm* Neutral 63 65 4 -10.3
Tulip Telecom* Neutral 79 70 -12 -22.6
Utiltites
Adani Power Neutral 46 - - -26.6
CESC Buy 267 439 65 31.1
Coal India Buy 321 370 15 6.8
JSW Energy Neutral 42 62 47 11.7
Lanco Infratech Buy 12 33 177 26.6
NHPC Neutral 18 - - 0.6
NTPC Buy 145 - - -9.7
Power Grid Corp. Buy 104 126 22 3.9
PTC India Buy 55 63 15 41.8
Reliance Infrastructure* Buy 430 1150 167 26.4
Tata Power    * Neutral 92 93 0 6
Others
Sintex Inds. Buy 52 93 79 -17.6
Shree Renuka Sugars Buy 26 50 95 2.6
United Phosphorous* Buy 108 154 42 -14.9
Pipavav Defence Buy 81 100 23
22.8
Note : Asterisk against company name are consolidated EPS.



மேலும் தகவல் அறிய இங்கே செல்லவும்