'ஜன கண மன' பாடலுக்கு நூறு வயது


இந்தியாவின் தேசிய கீதமாக விளங்கும் 'ஜன கண மன'வுக்கு நூறு வயதாகிறது.

இந்த கீதம் முதன்முதலில் பாடப்பட்டது கொல்கத்தாவில் மிகச் சரியாக நூறு வருடங்கள் முன்பு தான். பிற்பாடு இது பல்வேறு சர்ச்சைகளை எல்லாம் சமாளித்து இந்தியாவின் தேசிய கீதமாக உருவெடுத்தது.


இந்தப் பாடலை இயற்றிய வங்காள மஹாகவி ரபீந்திரநாத் தாகூர்தான், இலக்கியத்துக்காக நோபெல் பரிசு வென்ற முதல் ஆசியர் ஆவார்.

1911ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்து ஏழாம் தேதி கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தொடரில்தான் இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது.

அது முதல் இந்திய மக்களின் கற்பனையையும் அரசியல் அமைப்பின் கற்பனையையும் வசீகரித்த ஒரு பாடலாக இது இருந்து வருகிறது.

சகல விதமான அரசு நிகழ்ச்சிகளிலும் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் ஒரு பாடலாக 'ஜன கண மன' திகழ்கிறது.

நவீன வடிவங்கள்

அவ்வப்போது புதிய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப நவீன இசை வடிவம் பெற்று இப்பாடல் வலம் வருவதும் உண்டு.

முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பேழை, முன்னணி நடிகர் ஷாருக் கானின் திரைப்படம் போன்றவற்றில் வெவ்வேறு நவீன இசை வடிவங்களில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் மறுபுறம் இந்தியா சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்தப் பாடல் பற்றிய அரசியல் சர்ச்சைகள் தொடருகின்றன.

சர்ச்சைகள்

'ஜன கண மன'வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலாச்சார அமைப்பொன்று ஏற்பாடு செய்த வேளையில், இந்தியாவின் வட கிழக்குப் பகுதி இந்தப் பாடலில் இருந்து விடுபட்டுள்ளது அதனையும் இப்பாடல் வரிகளில் சேர்க்க வேண்டுமென அஸாம் மாநிலத்தில் இருந்து குரல்கள் ஒலித்திருந்தன.

"பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த இந்தியப் பகுதிகள்தான் இந்தப் பாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வட கிழக்கு பிரதேசத்தில் பெரும் பகுதி பிரிட்டிஷ் ஆட்சிக்கு வெளியில் இருந்ததால் அப்பிரதேசம் இப்பாடலின் வரிகளில் இடம்பெறவில்லை" என அஸ்ஸாமைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தீபக் தாஸ் சுட்டிக்காட்டுகிறார்.

வட கிழக்கு பிரதேசத்தையும் பாடலில் சேர்த்தால், அப்பகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு தணிய உதவும் என்று அவர் வாதிடுகிறார்.

இந்தப் பாடல் வரியில் இருந்து சிந்துவை நீக்கிவிட்டு காஷ்மீரை சேர்க்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது கூட நடந்திருக்கிறது.

தேசிய கீத அந்தஸ்துக்கு போட்டி

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவேகூட இந்தப் பாடல் தொடர்பில் சர்ச்சை இருந்தது.

இந்த கீதத்தை தேசிய கீதமாக ஆக்க வேண்டும் என்று வாதிட்டதற்கு பலர் இருந்த அதே நேரத்தில் இதனை தேசிய கீதமாக ஆக்கக்கூடாது என்று வாதிட்டவர்களும் அதிகம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு தாழ் பணியும் ஒரு பாடல் இது என்று இவர்கள் வாதிட்டார்கள்.

பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்ற பாடலைத்தான் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு சாராரின் பிரச்சாரம் அமைந்திருந்தது.

ஆனாலும் மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் ஆதரவு காரணமாக 'ஜன கண மன' தேசிய கீதமாகவும் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டன என்பதாக வரலாறு அமைந்துள்ளது.

பங்குச்சந்தை செய்திகள்


பங்குச் சந்தை மூலம் பயங்கரவாதிகளுக்கு பெரும் பணம்!



இந்திய பங்குச் சந்தை மூலமாக பயங்கரவாதிகளுக்கு பெருமளவில் பணம் சென்றிருக்கும் விவரத்தை நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் 10 முறை பங்குச் சந்தை மூலம் இப்படி பணம் சென்றுள்ளதற்கான ஆதாரம் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்துள்ளது.

இத்தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "பங்குச் சந்தையில் சந்தேகத்துக்கு இடமான பரிமாற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த பரிமாற்றங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கறுப்புப் பணம் பரிமாற்றமும் இதில் நடந்துள்ளது.

இதில் இடைத் தரகர்கள், பங்குச் சந்தை சார்ந்த சில நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றன," என்றார்.

இந்திய தொழில்துறை வளர்ச்சி பெரும் சரிவு!: 8.7%லிருந்து 3.5% ஆக குறைந்தது!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி 5.1 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு 8.7 சதவீதமாக இருந்த இந்த வளர்ச்சி வெறும் 3.5 சதவீதமாக சுருங்கிவிட்டது.

தொழில்துறையில் 76 சதவீதத்தை உற்பத்தித் துறை தான் பூர்த்தி செய்கிறது. இந்தத் துறையில் தான் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சுரங்கத்துறை, மின் உற்பத்தித் துறை, ரப்பர், பிளாஸ்டிக் உற்பத்தி ஆகியவை கடுமையான சரிவை சந்தித்துள்ளன.

மருத்துவ உபகரணங்கள், வாட்சுகள், பாய்லர்கள், பழச்சாறு, தோல் பொருட்கள், மார்பிள்கள்-டைல்கள், அரிசி உற்பத்தி உள்ளிட்ட சில பிரிவுகள் தான் வளர்ச்சியை சந்தித்துள்ளன.

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. திங்கட்கிழமையன்று வணிகத்தில் 52 ரூபாய் 84 காசு என்ற அளவைத் தொட்ட இது செவ்வாய்கிழமை 53 ரூபாய் 74 காசு அளவுக்கு குறைந்தது. இது மிகப்பெரிய சரிவு என்று சந்தையியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இறக்குமதியாளர்கள் கவலையும் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். திங்கட்கிழமையன்று இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்திக் குறியீடு குறைந்துள்ளதாக வெளியான செய்தியால், அமெரிக்க டாலரை வாங்குவதில் வங்கி மற்றும் இறக்குமதியாளர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.

11 பைசா உயர்வு

இன்னொருபுறம் பிற நாட்டு நாணயங்களுக்கும், அமெரிக்க டாலருக்கும் இடையேயான விகிதாச்சார மாற்றத்தின் தாக்கமும், யூரோவின் நிச்சயமற்றத் தன்மையும் இந்திய ரூபாயின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. வரும் 16ம் தேதியன்று ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டு குறித்த அரையாண்டு கொள்கையை வெளியிட உள்ள நிலையில் ரூபாயின் சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று காலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா அதிகரித்தது. இது சாதாரண உயர்வுதான் என்கின்றனர் சந்தையியல் வல்லுநர்கள்

இறக்குமதிக்கு திண்டாட்டம்

ரூபாய் மதிப்பு சரிவினால் கச்சா எண்ணெய் சார்ந்த எரிபொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதியாளர்கள் கொண்டாட்டம்

டாலரின் மதிப்பு உயர்வு திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் காட்டில் அடைமழையாகக் கொட்டிவருகிறது. இதுவரை சரிவில் இருந்த பின்னலாடை சந்தை இதனால் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பும் என்று பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்

இந்தியா: வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு


இந்தியாவில் மக்களின் வருமானத்தில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் கடந்த இருபது வருடங்களில் இரு மடங்காகியுள்ளதாக ஒரு அறிக்கை கூறியுள்ளது.

இந்த விசயத்தில் வளரும் நாடுகளில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

நாட்டின் மிகவும் அதிகமான வருமானத்தைப் பெறும் முதல் 10 வீதத்தினர், மிகவும் குறைவான வருமானத்தைப் பெறும் 10 வீதத்தினரை விட 12 மடங்கு அதிகமான வருமானத்தைப் பெறுகிறார்கள் என்றும் 20 வருடங்களுக்கு முன்னதாக இந்த வித்தியாசம் 6 மடங்காக மாத்திரமே இருந்தது என்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு கூறியுள்ளது.

உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான வறிய மக்கள் இருக்கிறார்கள் என்றும் அது கூறியுள்ளது. அதாவது 121 கோடி இந்திய மக்களில் 42 வீதமானவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 60 ரூபாவிற்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்கிறார்கள்.

பிரஸில், இந்தோனேசியா மற்றும் சில குறியீடுகளின் அடிப்படையில், ஆர்ஜண்டீனா ஆகிய நாடுகள் கடந்த 20 வருடங்களில், இந்த வருமான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாக, இந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கு மாறாக சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த வருமான வேறுபாடு அதிகரித்துள்ளது.

வறுமைக் குறைப்பு நடவடிக்கைகளிலும் இந்தியா சரியாக செயற்படவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

37 வீதமான இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வதாக இந்திய அதிகாரபூர்வ அறிக்கை கூறுகின்ற போதிலும், 42 வீதமான இந்தியர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பாரிஸை தளமாகக் கொண்ட இந்த அமைப்பில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வருகின்ற 34 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

கிராமங்களில் உணவு, கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான தனிச்செலவுகளை சமாளிப்பதற்கு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 26 ரூபாய் வருமானமே போதுமானதாகும் என்று அண்மையில் கூறியதற்காக இந்திய அரசாங்கம் விமர்சனங்களுக்கு உள்ளானது.

நகரங்களைப் பொறுத்தவரை இந்தச் செலவுகளுக்கு 32 ரூபாய் போதுமானது என்றும் இந்தியா கூறியிருந்தது.

வறியவர்களை வரையறுப்பதற்கான வருமான மட்டம் மிகவும் குறைவாக அங்கு இருப்பதாகவும், வறிய மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் காண்பிப்பதற்காக வேண்டுமென்றே இந்த மட்டம் குறைத்துக் காண்பிக்கப்படுவதாக பல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வறுமையை ஒழிப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்று உலக வங்கியின் அறிக்கை ஒன்று மே மாதத்தில் கூறியிருந்தது.

ஊழல், மோசமான நிர்வாகம் மற்றும் குறைவான ஊதியம் போன்ற காரணங்களால் உதவித் திட்டங்கள்கூட சரியான பலனைத் தரவில்லை.

கிங்ஃபிஷர் வழியில் ஜெட் ஏர்வேஸ்...


நிதி நெருக்கடி என்ற கிங்ஃபிஷரின் ஒப்பாரியை விரைவில் ஜெட் ஏர்வேஸும் பாடக்கூடும் எனத் தெரிகிறது.

அதற்கு முன்னோட்டமாக, ஜெட் ஏர்வேஸ் விரைவில் கூடுதல் நிதியை உருவாக்க வேண்டும், பண ஓட்டத்தை சீராக்க வேண்டும் என்று அந்நிறுவன ஆடிட்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கிங்ஃபிஷர் நிறுவனம் கிட்டத்தட்ட திவால் என்று கூறிக் கொண்டு வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களிடம் கடன் கேட்டு நிற்பதற்கு முன், இதே ஆடிட்டர்கள் இப்படித்தான் 'எச்சரித்தனர்' என்பதால், இது திட்டமிட்ட நாடகமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ்தான் இந்தியாவில் மிகப்பெரிய தனியார் விமான சேவை நிறுவனம். லாபத்தில் இயங்குவதாக கூறிக் கொண்டாலும், அடிக்கடி நஷ்டக் கணக்கும் காட்டி வருகிறது.

சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அரசு உதவி வேண்டும் என்று கோரவும் தவறுவதில்லை ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயல்.

சமீபத்தில் கிங்பிஷர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி கிட்டத்தட்ட திவால் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நரேஷ் கோயல் உடனே 'கிங்ஃபிஷருக்கு அரசு பெயில் அவுட் தர வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் இப்போது, கிங்ஃபிரைப் போலவே நிதிப் பற்றாக்குறை ஜெட் ஏர்வேஸுக்கு வந்துள்ளதாக அதன் ஆடிட்டர்கள் எச்சரித்துள்ளனர். ஜெட்லைட் பிரிவால் இந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டம் கண்டு வருவதால் இந்த நிலை என்றும் ஆடிட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 'இது நாடகமாக இருக்காது என நம்புவோம். காரணம் விஜய் மல்லையாவின் பிஸினஸ் ஸ்டைல் வேறு, ஜெட் ஏர்வேஸின் வர்த்தக பாணி வேறு. சர்வதேச விமான சேவைகளைக் கொண்டுள்ளது ஜெட் ஏர்வேஸ். எனவே நெருக்கடியை அந்த நிறுவனம் சமாளித்துவிடும்,' என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.

சந்தையின் போக்கு

இந்திய பங்குசந்தைகள் சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது

4720-4620 மிக பெரிய ஒரு சப்போர்ட் லெவல் ஆகும்

இதனை நிஃப்டி உடைக்குமானால் 3900 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது

செல்வம் சேர்





















  • ஆசைப்படுங்கள்.
  • தன்னம்பிக்கை (Self confidence).
  • சூழ்நிலைகள் (Environment).
  • குறிக்கோள்கள்-வழிமுறைகள் (Goal- Strategy).
  • எண்ணங்களில் பழக்கங்களில் மாற்றம்.
  • வாழ்க்கையின் சிறு கஷ்டங்களில் கவனம் செலுத்தாதீர்கள்-தீர்வுகளில் மனதை செலுத்துங்கள்.
  • தாழ்வு மனப்பான்மையையும் எதிர்விளைவு எண்ணங்களையும் மாற்றுங்கள்.
  • பயத்தைப் போக்குங்கள்.
  • நேரத்தை கணக்கிட கற்றுக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் செய்கிற தொழிலை,மற்றவர்களைவிட 'மாற்றுமுறையில்' செய்யுங்கள் (You need not do different things;but,do'differently than others).
  • நிர்வாகத் திறமையுள்ளவர்களை உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • உங்களின் மூலதனம் என்ன என்று புரிந்துகொள்ளுங்கள்.
  • உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் (Own your responsibility).
  • தவறு செய்தால் தவறு என்று ஒப்புக் கொள்ளுங்கள் (I made mistake).
  • கவனியுங்கள் (Always Listen).
  • விடாமுயற்சி.
  • கிரீஸ் :குழப்பத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி



    சர்வதேச நிதியமைப்பு உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து, கிரீஸ் பொது ஓட்டெடுப்புக்கு அழைப்பு விடுத்தது குறித்து, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் எரிச்சல் அடைந்துள்ளார். "கடந்த முறை முடிவு செய்தது குறித்து, இன்னொரு முறையும் விவாதித்து முடிவெடுக்க முடியாது' என, காட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.

    "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி மிக இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. பிரான்சின் கேன்ஸ் நகரில் இன்று துவங்கும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில், "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி தான் முக்கிய விவாதப் பொருளாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ போட்டுள்ள புது குண்டு, "யூரோ' மண்டலத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    என்ன நடந்தது? : தனது கடன் நெருக்கடி தீர, சர்வதேச நிதியமைப்பு (ஐ.எம்.எப்.,), ஐரோப்பிய யூனியன் (இ.யு.,) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (இ.சி.பி.,) ஆகியவற்றில், கிரீஸ் இரு தவணைகளாக நிதியுதவி பெற்றுள்ளது.

    ஆயினும், அதன் கடன் குறையவில்லை என்பதால், கடந்த அக்டோபரில் நடந்த ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில், மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கிரீசுக்கு கடன் பத்திரங்கள் அளித்த தனியார் நிதி நிறுவனங்கள், தங்கள் கடனில் 50 சதவீதத்தை ரத்து செய்து விட வேண்டும். மூன்றாவது தவணையாக, 100 பில்லியன் யூரோ அளிக்கப்படும். இதற்குப் பதிலாக, அரசு ஊழியர் எண்ணிக்கை குறைப்பு, சம்பளம், ஓய்வூதியம் வெட்டு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும் என, மூன்று அமைப்புகளும் நிபந்தனை விதித்தன.

    பொது ஓட்டெடுப்பு: நிபந்தனையை ஏற்ற கிரீஸ் பிரதமர், அதற்கு பார்லிமென்ட்டின் ஒப்புதலையும் பெற்றார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ம் தேதி பேட்டியளித்த அவர், "மூன்று அமைப்புகள் கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து, கிரீஸ் மக்களிடம் பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும்' என்றார். அவரது இந்த அறிவிப்பு, ஐரோப்பாவில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.

    அமைச்சரவை ஆதரவு: இந்நிலையில், நேற்று, ஏழு மணி நேரம் நடந்த கிரீஸ் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. பொது ஓட்டெடுப்பு இந்தாண்டு டிசம்பரில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    எம்.பி.,க்கள் எதிர்ப்பு: எம்.பி.,க்கள் சிலர் பிரதமரை விமர்சித்த போதிலும் ஆதரவு அளிப்பதாகவே கூறினர். ஆளும் கட்சியின் ஒரு எம்.பி., தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஆறு எம்.பி.,க்கள் பிரதமர் ராஜினாமாவை கோரியுள்ளனர். இந்தச் சூழலில், நாளை, ஆளும் கட்சி மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க இருக்கிறது.

    ஜெர்மனி எச்சரிக்கை: கிரீஸ் பிரதமரின் அதிரடி அறிவிப்பு குறித்து நேற்று பேட்டியளித்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்,"ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விவகாரத்தை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தி முடிவு எடுக்க முடியாது' என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கிரீஸ் பிடிவாதம்: ஆனால், அதற்கு பதிலளித்த பப்பண்ட்ரீ,"இந்த பொது ஓட்டெடுப்பு, "யூரோ' மண்டலத்தில் கிரீசின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்தும். ஆனால், "யூரோ' கரன்சியில் கிரீஸ் தொடரும்' என்றார்.

    குழப்பத்தில் பிரான்ஸ், ஜெர்மனி: ஜி 20 கூட்டத்தில், கிரீஸ் மற்றும் "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி விவகாரத்தை முக்கியமாக வைக்கக் கருதிய பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஜெர்மனி பிரதமர் மெர்க்கெல் இருவரும், இதுகுறித்து குழப்பம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இரு நாடுகளும், "யூரோ' ஒப்பந்தம் முழுவேகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளன. அதன் மூலம் தான், "யூரோ' கடன் நெருக்கடி ஓரளவு தீரும் என்பது, அவர்களின் நம்பிக்கை. அதற்கு சீனாவும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர்.


    பணக்காரர்கள்



    டெல்லி: போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்கள் பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ள சாவித்ரி ஜிந்தால் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆவார். முகேஷ் அம்பானி முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

    பணக்கார இந்தியர்கள் பட்டியலை அமெரிக்காவின் முன்னணி பப்ளிஷிங் மற்றும் மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து 4வது முறையாக முதல் இடத்தில் உள்ளார் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி. அவரது சொத்து மதிப்பு 22.6 பில்லியன் டாலர். ஆனால் அவரது தம்பி அனில் அம்பானி 10வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    19.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள ஸ்டீல் நிறுவன அதிபர் லக்ஷ்மி மிட்டல் இரண்டாவது இடத்தில் உள்ளார். விப்ரோ நிறுவனர் ஆசிம் பிரேம்ஜி 3வது இடத்திலும், 9.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சாவித்ரி ஜிந்தால் 5வது இடத்திலும் உள்ளனர். இன்றைய தேதிக்கு இந்தியாவின் பணக்காரப் பெண் சாவித்ரி ஜிந்தால் தான்.

    இந்த பணக்கார பட்டியிலில் 14 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளன. இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ராகுல் பாட்டியா மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் பெயர்கள் முதன்முறையாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

    இந்த பட்டியிலில் இருந்த வினோத் கோயன்கா மற்றும் ஷாஹித் பால்வா ஆகியோரின் பெயர்கள் தற்போது இல்லை. அவர்கள் இருவரும் 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகின் பணக்கார அம்மா சாவித்ரி ஜின்டால்


    உலகின் பணக்கார அம்மாக்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார் சாவித்ரி ஜின்டால். ஆசிய அளவில் முதலிடத்தில் இருக்கும் பணக்கார அம்மா இவரே!

    பணக்கார அம்மாக்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் 70 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச தாய்மார்கள் தினத்தையொட்டி பணக்கார அம்மாக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ்.

    ஓ.பி. ஜின்டால் குழுமத்தை உருவாக்கிய ஓம் பிரகாஷ் ஜின்டாலின் மனைவியான சாவித்ரி ஜின்டாலின் நிகர சொத்து மதிப்பு 1,220 கோடி டாலர் (ரூ. 55,000 கோடி). 60 வயதாகும் சாவித்ரிக்கு 9 குழந்தைகள் உள்ளனர்.

    ஓ.பி. ஜின்டால் குழுமம் ஸ்டீல் மற்றும் மின்னுற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தை ஓ.பி. ஜின்டால் 1952ல் உருவாக்கினார். 2005ம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஓம் பிரகாஷ் ஜின்டால் உயிரிழந்ததைத் தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர் குழுமத்தில் பொறுப்புகள் அற்ற இயக்குநராக பதவியேற்றார்.

    ஏனெனில் ஜின்டால் உயிருடன் இருந்தபோதே தனது நிறுவனப் பொறுப்புகளை நான்கு மகன்கள் பிருத்விராஜ், சஜன், ரத்தன், நவீன் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். தற்போது இவர்கள் நால்வரும் தனித்தனி பிரிவுகளுக்கு தலைமை ஏற்று நடத்துகின்றனர்.

    பணக்கார அம்மாக்கள் பட்டியலில் 70 பேர் இடம் பெற்றிருந்தபோதிலும் 2 பேர் மட்டுமே தங்களது சொந்த வருவாய் மூலம் கோடீஸ்வர அம்மாக்களாக திகழ்கின்றனர்.

    இதில் ஹாரி பாட்டர் கதையை எழுதி கோடீஸ்வரியான ஜே.கே. ரவ்லிங்கும் ஒருவர். மற்றொருவர் எம்இஜி விட்மன்.

    பணக்கார அம்மாக்கள் பட்டியலில், கணவர் மூலம் கோடீஸ்வரிகளான தாய்மார்களே அதிகம். சில கோடீஸ்வர குடும்பங்களின் வாரிசுகளும் இதில் உள்ளனர்.

    வால்மார்ட் தொடர் நிறுவனத்தை உருவாக்கிய சாம் வால்டனின் மருமகள் கிறிஸ்டி வால்டன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 2,250 கோடி டாலராகும்.

    உலகம் முழுவதும் பிரபலமான அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான லோரியல் குழுமத்தின் லிலியேன் பெடன்கோர்ட் (87) இரண்டாவது இடத்திலும், பேக்கேஜிங் துறையின் பிரபலமான டெட்ரா லேவல் குழுமத்தைச் சேர்ந்த பிர்கிட் ராஸிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

    இவர்களுக்கு அடுத்தபடியாக சாவித்ரி ஜின்டால் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் ஹரியாணா மாநிலம் ஹிஸாரில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் சாவித்ரி.

    இவரது மகன்களில் ஒருவரான நவீன் ஜின்டால், ஹரியாணாவின் குருஷேத்ரா தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார்.

    எண்ணெய் நிறுவனங்களின் 3 மாத நஷ்டம் ரூ.21,374!!

    டெல்லி: 2011-12ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.21,374 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுவிட்டதால் அதனால் இந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏதும் இல்லை. ஆனால், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.64,900 கோடியாகும்.

    ஒரு லிட்டர் டீசல் விற்கையில் ரூ.7.06ம், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயை விற்கும்போது ரூ.25.90ம், ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவை விற்கையில் ரூ.270.50ம் இந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

    அதாவது ஒரு நாளைக்கு இந்த 3 நிறுவனங்களுக்கும் ரூ.272 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.



    பொருளாதாரத்தை சீர்செய்யக்கோரி அமெரிக்காவில் போராட்டம்.-வேகமாகப் பரவுகிறது!

    US Protest
    நியூயார்க்: அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன. பொருளாதார சரிவின்போது வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அமெரிக்க அரசு வேலை இழந்தோரை தவிக்க விட்டு விட்டது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    அமெரிக்காவில் “வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்” போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.

    இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நேற்றும் இவை தொடர்ந்தன. இந்நிலையில் இந்த வாரத்தில் டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப் போவதாக “தொடர் ஆக்கிரமிப்பு” என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

    ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவ வழி செய்யும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்படி தொடர் ஆக்கிரமிப்பு இணையதளம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிரொலிக்கும் வகையில் வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம் என்ற இணையதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் :

    1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.

    2. தனியார் நிறுவனங்களுக்குத் தடை: நாடு முழுவதுமான ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் தெருவில் உள்ள பங்குச் சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.

    3. நிரந்தர ஊக்கத் தொகை: வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச ஊக்கத் தொகைக்கு உறுதியளிக்க வேண்டும்.

    4. இலவசக் கல்வி: கல்லூரிக் கல்வி கட்டணங்களை அறவே நீக்க வேண்டும்.

    5. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டு, மாற்று வழியில் எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.

    6. உடனடிச் செலவு: குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக உடனடியாக ஒரு டிரில்லியன் டொலர் செலவழிக்க வேண்டும்.

    7. வனப் பாதுகாப்பு: அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், ஆறுகளின் இயற்கையான போக்கை தடுக்காதிருத்தல் போன்றவற்றிற்காக மேலும் ஒரு டிரில்லியன் டொலர் செலவு செய்ய வேண்டும்.

    8. சம உரிமை: இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

    9. எல்லைச் சிக்கல்: நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளையும் திறந்து விட வேண்டும். இதன் மூலம் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்து வாழ வழி செய்தல்.

    10. வாக்குச் சீட்டு: அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்குச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். சுயேச்சை மற்றும் கட்சி கண்காணிப்பாளர்கள் மத்தியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.

    11. கடன் தள்ளுபடி: வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்து கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலகளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    12. விலக்கம்: அனைத்து கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை விலக்க வேண்டும்.

    13. தொழிலாளர் அமைப்பு: தொழிலாளர் அமைப்புகளின் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

    பரவி வரும் போராட்டம்

    நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் நிறுவன தலைவர்களின் பணப் பேராசையை அடையாளப்படுத்தும் விதத்தில் பேய் போல வாயில் பணத்தைக் கவ்வியபடி வேடங்கள் அணிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொருபுறம் பெரிய நிறுவனங்களில் வேலை இழந்தவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர். இவர்களுடன் கல்லூரி மாணவர்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளனர்.

    அதிபர் ஒபாமா கருத்து

    போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, மக்களின் கோபத்தின் மூலம் நமது நிதி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. என்று கூறியுள்ளார்.

    பரவி வரும் போராட்டம்

    அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. இதனை எதிர்த்து மக்கள் போராடிவருகின்றனர். நியூயார்க் நகர ஆக்கிரமிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர்கள் இதுகுறித்துக் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், சட்டவிரோதமான முறையில் எங்கள் வீடுகளைக் கைப்பற்றுகின்றனர். மக்கள் பணத்தில் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுடன் அவர்கள் தங்கள் நிறுவனங்களை கடனில் இருந்து மீட்டுக் கொள்கின்றனர்.

    தங்கள் தலைமை அதிகாரிகளுக்கு கணக்கிட முடியாத அளவிற்கு சம்பளத்தை வாரி வழங்குகின்றனர். அதோடு தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களை வெளியே தள்ளிவிட்டு வெளியிடப் பணி(அவுட்சோர்சிங்) மூலம் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். இதனால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், காப்பீட்டுத் திட்டச் செலவு எல்லாம் அவர்களுக்கு மிச்சமாகிறது.

    அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வாரித் தெளிக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு பெற்று வருகின்றன.

    நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கிருந்தபடியேதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எகிப்து புரட்சிக்கும் இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எகிப்து புரட்சி, நாட்டின் தலைமையை எதிர்த்து நடந்தது. இப்போதைய அமெரிக்க போராட்டம் நிதி சீர்கேட்டை எதிர்த்து நடக்கிறது.

    இந்தியாவிடம் இருந்து ரயில் இன்ஜின்களை வாடகைக்கு வாங்க பாகிஸ்தான் விருப்பம்

    Indian Train
    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க, இந்தியாவிடம் ரயில் இன்ஜின்களை வாடகைக்கு வாங்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.

    பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால், நாட்டின் முக்கிய திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் அந்நாட்டு நிர்வாகம் திணறி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இயங்கி வந்த ரயில் இன்ஜின்கள் தகுந்த பராமரிப்பு மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    இவற்றை சரிசெய்ய தேவையான மாற்று உதிரிபாகங்களை வாங்க கூட நிதி ஆதாரம் இல்லை. இதனால் 100க்கும் மேற்பட்ட ரயில் இன்ஜின்கள் பயன்பாடு இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல ரயில் இன்ஜின்கள் மிகவும் மோசமான நிலையில் ஓடி வருகிறது.

    இது குறித்து பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது பிலோயர் தலைமையிலான கூட்டம் பெஷவரில் நடந்தது. இதில் நாட்டு மக்களின் போக்குவரத்தை கருத்தில் கொண்டு இந்திய அரசிடம் இருந்து 200 முதல் 300 ரயில் இன்ஜின்கள் வாடகைக்கு வாங்கி இயக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டது.

    இதற்காக 2 நாட்டு ரயில்வே அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பாகிஸ்தானின் திட்டத்திற்கு இந்திய தரப்பில் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், முதல்கட்டமாக 50 ரயில் இன்ஜின்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.

    தமிழகத்தை விட்டுச் செல்லும் கார் நிறுவனங்கள்


    கார் உற்பத்தியில் உலக அளவில் கோலோச்சும் பெரும் நிறுவனங்கள் தமது புதிய ஆலையை அமைக்க குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளமை தமிழக தொழில் துறை வட்டாரங்களில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை நகரைச் சுற்றி ஏராளமான கார் தொழிற்சாலைகளும் கார்களின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழற்சாலைகளும் இருப்பதால் அமெரிக்காவின் கார் தொழிற்சாலைக்குப் பேர் போன டேட்ராய்ட் என்ற பகுதியுடன் சென்னை ஒப்பிடப்படுகிறது.

    சென்னைக்கு அருகே பல ஆண்டுகளாக ஆலை வைத்து கார் தயாரிக்கும் ஃபோர்ட் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் புதிய ஆலையை நிறுவும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது.

    போஜோ நிறுவனமும் போனது

    தற்போது ஐரோப்பாவின் இராண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான போஜோ குஜராத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய ஆலையை நிர்மாணிப்பதாக அறிவித்துள்ளது.இந்த ஆலையை தமிழகத்தில் அமைக்க அந்த நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தன.

    டாடாவின் நானோ கார் தொழிற்சாலை குஜராத்துக்கு சென்ற பின்னர் அம்மாநிலத்தை நோக்கி பிற கார் தயாரிப்பாளர்களும் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

    இந்தியாவில் விலை மிகக்குறைந்த கார் டாடா நானோ

    இந்தியாவில் மலிவான டாடா நானோ கார்

    கார் உற்பத்தி நிறுவனங்களின் முதல் தேர்வாக தமிழகம் ஏன் இல்லை என்ற கேள்விக்கு, இதற்கு மின் தட்டுப்பாடே முக்கிய காரணம் என்று பிக்கி என்ற இந்திய தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தமிழகத்திற்கான தலைவர் ரஃபீக் அகமது கூறினார்.

    தமிழகத்தில் ஏற்கனவே செயல்படும் ஹூண்டாய் தொழிற்சாலையில் கடந்த பல மாதங்களாக நிலவும் தொழிலாளர் பிரச்சனையும் நிலமையை சற்று பாதகமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    அதே நேரம் தமிழகத்தில் கார் உற்பத்திக்குத் தேவையான பல அம்சங்கள் சாதகமாக இருப்பதாகவும், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தினாலேயே முதலீடுகள் தொடர்ந்து வரும் என்ற கருத்தும் நிலவுகிறது.

    இணையம் தோன்றி இருபது ஆண்டுகள்

    இன்று நாம் எல்லோம் மிக அதிகமாகப் பயன்படுத்துகின்ற வோர்ல்ட் வைட் வெப்(www)எனப்படும் கணினி வலயத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஒருவர் தொடங்கி இருபது வருடங்கள் ஆகின்றன.

    ஒரு கணிணியில் இருக்கின்ற தகவல்களை மற்ற கணினிகள் வழியாக பார்ப்பதற்கும் உலக அளவில் கணினி வலயமைப்பில் பகிர்ந்துகொள்வதற்குமான ஒரு எளிய முறையை பேராசிரியர் டிம் பர்னர்ஸ் லீ உருவாக்கியிருந்தார்.

    ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்று ஒன்றுக்கு முன்பாக இண்டர்நெட் என்பது விஞ்ஞானிகள் தங்களுக்கு இடையில் தகவல் பரிமாறுவதற்கான ஒரு வழியாகவே இருந்துவந்தது.

    வெவ்வேறு கணினிகள் வெவ்வேறு இயந்திர மொழியைப் பயன்படுத்தியதாலும் ஆவணங்கள் பல்வேறு கணிணி வடிவங்களில் இருந்ததாலும் இந்த தகவல் பரிமாற்றம் என்பது சிக்கலும் சிரமமும் நிறைந்த ஒன்றாக இருந்துவந்தது.

    அச்சமயம் ஜெனீவாவில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தில் வேலைபார்த்து வந்த சர் டிம் பர்னர்ஸ் லீ, கணினிகள் தமக்கிடையில் எளிமையாக தகவல் பரிமாறுவதற்கான இணைய மொழியான HTMLஐ உருவாக்கினார்.

    இணையத்தில் உள்ள ஒரு பக்கத்தை இன்னொரு பக்கத்துடன் எளிதில் இணைப்பதற்கு, அதாவது ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த ஆவணத்துக்கு சென்றுவிடலாம் என்ற முறையில் இணைப்பதற்கு, இந்த HTML வழிவகுத்தது.

    மிகவும் சாதாரணமான ஒரு கண்டுபிடிப்பாகத் தெரியும் இந்த கண்டுபிடிப்புதான் இன்று உலகத்தையே ஆட்கொண்டுள்ள இணையமாக வொர்ல்ட் வைட் வெப்பாக உருவெடுத்துள்ளது.

    மூன்று மாத உழைப்பில் டிம் பர்னர்ஸ் லீ கண்டுபிடித்த அந்த இணையத்தை இன்று உலகின் முப்பது சதவீதமான மக்கள் தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர்.

    வீழ்ச்சியை நோக்கி உலகப் பொருளாதாரம்

    அமெரிக்காவும், யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகளும் மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சிக்குள் செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது என சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப். எச்சரித்துள்ளது.

    அப்படியொரு பொருளாதார வீழ்ச்சி வருமானால் மற்ற நாடுகளும் அதனால் கணிசமான பாதிப்புகள் ஏற்படும் என்று அது கூறியுள்ளது.

    பங்குச் சந்தை.

    உலக பொருளாதாரம் ஆபத்தானதொரு புதிய கட்டத்துக்குள் நுழைந்துள்ளது என்று ஐ.எம்.எஃப்.வெளியிட்டுள்ள புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்த நடவடிக்கைகளை அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.

    வட்டி விகிதங்களைக் குறைக்க ஐரோப்பிய மத்திய வங்கி தயாராக வேண்டும் என அது தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அரசாங்கம் அவசர அவசரமாக நிதிக் குறைப்புகளை செய்யப்போய் அதனால் பொருளாதார நிலை மேலும் பலவீனமடைவதற்கான ஆபத்து இருக்கவே செய்வதாக ஐ.எம்.எஃப். அறிக்கை கூறுகிறது.

    அமெரிக்கா: பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடியாக உயர்வு!


    US Poverty
    அமெரிக்காவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடி பேர் என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

    இது கடந்த 50 ஆண்டுகளில் காணாத அதிகபட்ச எண்ணிக்கை என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அங்கு கடந்த 1983-ம் ஆண்டு முதலே வறுமைக்கோடு என்ற அளவீடு இருந்துவருகிறது.

    அமெரிக்காவில் ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்களாக கருதப்படுகின்றனர். அதாவது அவர்களின் பொருளாதார நிலை, தேவையின் அடிப்படையில் இந்த ரூ 10 லட்சம் மிகக் குறைந்த தொகையாகும்.

    இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பசி பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 4 கோடியே 62 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இது அமெரிக்க மக்கள் தொகையில் 6-ல் ஒருபங்கு ஆகும்.

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாகாணங்களில் மிஸிஸிப்பி முதலிடம் வகிக்கிறது. அங்கு 22.07 சதவீதம் பேர் வறுமையில் வாடுகின்றனர். அதைத் தொடர்ந்து லூசியானா, கொலம்பியா, ஜார்ஜியா, நியூமெக்சிகோ, அரிஸோனா போன்ற மாநிலங்களும் வறுமையில் வாடுவதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    ஆட்டம் காணும் அமெரிக்க பொருளாதாரம்


    பொருளாதார வலிமையில் உலகின் மிகப் பெரிய நாடு என்ற பெருமைக்குச் சொந்தமான அமெரிக்கா, கடந்த 94 ஆண்டுகளாக கடன்பத்திர தர மதிப்பீட்டில் 'ஏஏஏ' என்ற உயர் அந்தஸ்தை பெற்றிருந்தது. இதனால், அந்நாட்டின் கடன்பத்திரங்களில் எவ்வித அச்சமுமின்றி தைரியமாக முதலீடு செய்யலாம். இதனால், சீனா, ஜப்பான் உள்ளிட்ட

    பல நாடுகள் அமெரிக்க கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதை சிறந்த வாய்ப்பாக கருதி வந்துள்ளன.

    இந்நிலையில், கடன்பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ஆலோசனை வழங்கி வரும் ஸ்டாண்டர்டு - பூர்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் கடன்பத்திர மதிப்பீட்டு அந்தஸ்தை 'ஏஏ+'-ஆக குறைத்துள்ளது.

    இதனால், அமெரிக்க கடன்பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டும். அமெரிக்காவின் கடன் சுமை அதிகரிக்கும்.

    கடந்த 2010-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் வட்டிச் செலவினம் 41,400 கோடி டாலராக இருந்தது. இது, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாகும். கடன்பத்திர தர மதிப்பீட்டை குறைத்துள்ளதால், அமெரிக்காவின் வட்டிச் செலவினம் ஆண்டுக்கு 10,000 கோடி டாலர் அதிகரிக்கும் என ஜே.பி.மார்கன் சேஸ் - கோ தெரிவித்துள்ளது.

    ஆக, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது

    சாதனையாளர்

    வெறும் 50 பைசாவில் வாழ்க்கையைத் தொடங்கியவரின் இன்றைய ஒரு நாள் வருமானம் ரூ.2 லட்சமாம். இவர் பெரிய தொழிலதிபரின் மகளும் அல்ல, மனைவியும் அல்ல.

    சென்னை மெரினா கடற்கரையில் 50 பைசாவுக்கு காபி, விற்றவர் இன்று பல ஹோட்டல்களுக்கு முதலாளி. இந்திய தொழில் வர்த்தக சபை (ஃபிக்கி)யின் கடந்த ஆண்டுக்கான சிறந்த பெண் தொழில் முனைவோர் விருதைச் தட்டிச் சென்றவர் பெட்ரிஷியா.

    காலத்தின் கட்டாயம் இவரை தொழிலதிபராக மாற்றியது என்று கூடச் சொல்லலாம். தன் திருமண வாழ்க்கைதான் இதற்குக் காரணம் என்கிறார் அவர்.

    வேளச்சேரியில் வசித்து வரும் அவருடனான சந்திப்பிலிருந்து...

    உங்களது ஆரம்பம் எது?

    கட்டுப்பாடான கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த நான் வேற்று மதத்தவரை திருமணம் செய்து கொண்டேன். கணவர் போதைக்கு அடிமையானதால், எனது வாழ்க்கையில் புயல்வீசத் தொடங்கியது. அவரைத் திருத்துவதற்கு முயன்றும் முடியாமல் போனது.

    என் இரண்டு சிறிய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனியாக தொழில் தொடங்க முன்வந்தேன். ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு கணவர் வெளியேற, எனது வீட்டில் என் பெற்றோருடன் நானும் எனது குழந்தைகளும் வாழ்ந்து வந்தோம்.

    தொழில் தொடங்க முடிவெடுத்தது எப்போது?

    நான் சமையல் கலையில் ஏற்கெனவே டிப்ளமோ பெற்றிருந்தேன். சமையலில் புதிது புதிதாக எதையாவது புகுத்திக் கொண்டே இருப்பேன். முதன் முதலாக சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலையின் அருகே ஒரு ஸ்டால் வைத்தேன்.

    முதல் நாளில் வெறும் 50 பைசாவுக்கு ஒரு காபி மட்டுமே விற்றது. விற்பனை ஆகவில்லையே என்பதைவிட நான் சமைத்த வகைகளை யாரும் சாப்பிடவில்லையே என்பதுதான் மிகவும் வருத்தமாக இருந்தது.

    50 பைசா கிடைத்ததே கடவுளின் கருணைதான் என்று என் அம்மாதான் ஆறுதல் கூறினார். அடுத்த நாள் நான் எதிர்பார்த்ததை விட அதிக விற்பனையானது. அதிலிருந்து எனக்கு ஏறுமுகம்தான். திரும்பிப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தேன்.

    வெற்றி கண்ட உங்களின் அடுத்த படி எதுவாக இருந்தது?

    என்னிடம் இருந்த உணவு வகைகளின் தரம் அனைவரையும் கவர்ந்தது. கடற்கரையின் அருகில் இருந்த குடிசைப் பகுதி மாற்று வாரியத்தில் கேன்டீன் தொடங்கினேன். அதனைத் தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் கேன்டீன் தொடங்கினேன்.

    அதனைத் தொடர்ந்து, ஹோட்டல் தொடங்க முன்வந்து, தனியாக இல்லாமல் மற்றொரு நிறுவனத்துடன் சேர்ந்து தொடங்கினேன். அதன் பின்பு தனியாக தொடங்கினேன். இன்று சுமார் 12 உணவகங்கள் சென்னையில் உள்ளன.

    உங்களின் சாதனைப் பயணத்தில் என்னென்ன சவால்களைச் சந்தித்தீர்கள்?

    பொருளாதார ரீதியான பிரச்னைகள் இருந்து வந்தது. அந்த சமயத்தில் எனது அம்மாவிடம் சிறு சிறு கடன் பெற்று சமாளித்துவிடுவேன். அதனை சிறிது சிறிதாக அடைத்தும்விடுவேன். பெற்றோரை கஷ்டப்படுத்தி திருமணம் செய்து கொண்டதால், அவர்களை மறுபடியும் கஷ்டப்படுத்தக் கூடாது என்பது என் கருத்து.

    இளவயதில் இந்தத் தொழிலுக்கு வந்ததால், சமூக விரோதிகளின் கேலி, கிண்டல், தவறான பார்வை போன்றவற்றுக்கு ஆளாகியுள்ளேன். கண் அசைத்தால் கூட அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பார்கள். மன தைரியத்தால் மட்டுமே அவர்களை வெற்றி கொண்டேன். மனதில் உறுதி இருந்தால் எந்தப் பிரச்னையையும் சமாளித்து விடலாம்.

    எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் என் வாழ்க்கைப் பயணத்தில் பலர் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

    24 மணி நேரமும் உழைத்ததால், குழந்தைகளை எவ்வாறு பராமரித்தீர்கள்?

    எனது பெற்றோர், தங்கை, தம்பி ஆகியோரின் உதவியால்தான் என் தொழிலில் எனக்கு வெற்றி கிடைத்தது. என் திருமணத்தினால் அவர்களுக்கு நான் கஷ்டத்தைக் கொடுத்த போதிலும், எனக்காக இன்றளவும் உதவி வருகிறார்கள். என் மகன் இங்கிலாந்தில் கடல்சார் பொறியியல் படித்துவிட்டு, இந்தத் தொழிலில் ஆர்வம் உள்ளதால், இதில் இறங்கிவிட்டான். என் மகளின் மரணம்தான் என்னை நிலைகுலையச் செய்துவிட்டது.

    என்ன நேர்ந்தது?

    திருமணமான ஒரே மாதத்தில் விபத்தில் மகளும், மருமகனும் இறந்து விட்டனர். விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் இறந்தவர்களை இதில் ஏற்றமாட்டோம் என்று கூறிச் சென்றுவிட்டது. இறந்து விட்டார்கள் எனத் தீர்மானிக்க ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் முடியுமா? ஒரு வேளை அவர்கள் பிழைத்திருந்தால்..

    இந்த சம்பவத்தால் என்னுடைய தொழிலில் இருந்து சுமார் 3 ஆண்டுகள் முழுவதுமாக விலகி விட்டேன். கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மகன்தான் வேலையை விட்டுவிட்டு என் தொழிலை கையில் எடுத்துக் கொண்டான். கடந்த ஆண்டில் இருந்துதான் முழுவதுமாக மறுபடியும் இதில் ஈடுபட்டுள்ளேன்.

    என் மகளுக்கு விபத்து நடந்த இடத்தில், ஒரு இலவச ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தியுள்ளேன். அந்த இடத்தில் நடக்கும் விபத்துகளுக்கு எந்தவித கட்டுபாடுகளும் இன்றி உதவ வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். வேறு சில இடங்களிலும் இதே போன்ற வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்காலத் திட்டமும் உள்ளது என்றார் அவர்.

    சிறிய பிரச்னைகளுக்கே துவண்டு போய் எதிர்காலம் குறித்த பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் மத்தியில், தனி ஒரு ஆளாக நின்று இன்று வானளாவ உயர்ந்துள்ளவரின் உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    நன்றி : தினமணி

    'சிலிக்கான் கிங்'-பதவி விலகல்




    ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து புதன்கிழமை விலகினார் 'சிலிக்கான் கிங்' என வர்ணிக்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்.

    உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனமாக ஆப்பிளை மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ் பதவி விலகியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் கணையப் புற்றுநோய் காரணமாக அவர் இந்த கடினமான முடிவை மேற்கொண்டுள்ளதாக உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஒரு அமெரிக்க தம்பதியின் வளர்ப்பு மகன் ஸ்டீவ் ஜாப்ஸ். புத்த மதத்தைச் சேர்ந்தவர். கல்லூரிப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத அவர், எழுபதுகளின் பிற்பகுதியில் தனது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

    இவரது நிறுவனம் தயாரித்த ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. ஆனால் ஆப்பிள் 2, கம்ப்யூட்டர் உலகில் இவரது நிறுவனத்துக்கான இடத்தை உறுதி செய்தது. 1980-ல் ஆப்பிளை பொது நிறுவனமாக மாற்றி பங்கு வெளியிட்டார். அது அவரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியது.

    1985-ல் தான் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்தே விலகிக் கொண்டார் ஸ்டீவ். எல்லா பங்குகளையும் விற்ற அவர், ஆப்பிள் பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டார். வெளியில் போய் நெக்ஸ்ட் என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் பின்னர் ஆப்பிளுடன் இணைந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளுக்கு வந்தார், இடைக்கால தலைமை செயல் அலுவலராக.

    பின்னர் 2000-ல் அவரே முழுமையான CEO என அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு ஸ்டீவ் ஜாப்ஸ் தொட்டதெல்லாம் தங்கம்தான். ஐபோன், ஐபேட், புதுப்புது மேக் கம்ப்யூட்டர்கள் என தொழில்நுட்பத் துறையில், எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது ஆப்பிள் நிறுவனம்.

    பாரக் ஒபாமாவுடன் அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவுக்கு பெரும் விஐபியாகிவிட்டார் ஸ்டீவ்.

    14 ஆண்டுகள் அவரது தலைமையில் ஆப்பிள் சாதித்தவை பிரமிக்கத்தக்க வெற்றிகள் என தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அடுத்து ஆப்பிள் புதிய ஐபோன், அடுத்த தலைமுறைக்கான அட்வான்ஸ்டு ஐ பேட் போன்றவற்றை அறிமுகப்படுத்தவிருக்கும் நிலையில் ஸ்டீவ் விலகியுள்ளார்.

    "நான் ஒரு நாள் இந்த நிறுவனத்தில் இல்லாமலே போகலாம். அதற்கான நாள் வரும்போது, நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்பது ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி கூறும் வாசகம். அது இப்போது நிகழ்ந்தே விட்டது.

    இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத் தலைவராகவும், டிம் குக் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்கள் என்றும், ஸ்டீவ் தொடர்ந்து நிறுவனத்துக்கு வழிகாட்டுவார்; முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஆனால், ஆப்பிளின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் அச்சத்தைப் போக்கியதாகத் தெரியவில்லை. நேற்று ஸ்டீவ் ஜாப்ஸ் தனது விலகலை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.

    ATM – ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!


    ATM (Automatic Teller Machine)
    ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றிய தகவல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானது.
    கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போதெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக்கொண்டே யாரும் பயணிப்பதில்லை. காரணம் ஏடி. எம் அட்டைகள்.
    வங்கியில் கணக்கை ஆரம்பித்த அனைவருக்குமே ஒரு அட்டை கிடைக்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொள்ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவிட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியை குறைத்திருக்கின்றன.
    நாம் பணம் தேவைப்படும் போது ஏ.டி. எம் முன்னால் சென்று நிற்கிறோம், நமது அட்டையை உள்ளே நுழைக்கிறோம். சங்கேத எண்ணை அமுக்குகிறோம். நம்முடைய கட்டளைக்கு ஏற்ப பணம் கிடைக்கிறது. திருப்திப்பட்டு விடுகிறோம்.
    Automatic Teller Machine என்பதன் சுருக்கம் தான் ATM. நம்முடைய அட்டையில் 16 எண்கள் கொண்ட ஒரு எண் இருக்கும். இது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண எண். ஆனால் இதன் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு.
    முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். அதற்கடுத்த ஒன்பது எண்களும் சேவை வழங்கு நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்த எல்லைக்குள் இருக்கும். கடைசி எண் ஒரு ரகசிய எண். அதுதான் உங்கள் அட்டை பயன்படுத்தக் கூடியதா இல்லையா என்பதைச் சொல்லும்.
    மாஸ்டர்கார்ட் எண்கள் ஐந்து எனும் எண்ணில் ஆரம்பிக்கும், விசா எண்கள் நான்கு எனும் எண்ணில் ஆரம்பிக்கும் என்பது ஒரு சிறு சுவாரஸ்யத் தகவல்.
    அட்டைகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிரடிட் கார்ட் எனப்படும் கடனட்டைகள். இன்னொன்று டெபிட் கார்ட் அல்லது செக் கார்ட். கடனட்டையில் நாம் செலவழிக்கும் பணத்தை மாதம் ஒருமுறை செலுத்தினால் போதும். செக் கார்ட் மூலம் செலவழிக்கும் பணம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உடனே கழிக்கப்பட்டு விடும்.
    ஏடிஎம் முன்னால் சென்று அட்டையை உள்ளே செலுத்தி நம்முடைய சங்கேத எண்ணைக் குறிப்பிட்டபின் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டு பொத்தானை அமுக்குகிறோம். நம்முடைய அட்டையின் பின்னால் இருக்கும் மேக்னட்டிக் ஸ்ட்ரைப் நம்முடைய அட்டையின் எண்ணை மென் குறியீடாக்கி உள்ளே அனுப்பும். அதற்குப் பயன்படும் இடம் தான் கார்ட் ரீடர் எனப்படும் நாம் அட்டையை உள்ளே நுழைக்கும் இடம். அப்போது கட்டளை ஏடிஎம் முனையிலிருந்து சுவிட்ச் என அழைக்கப்படும் கணினி மென்பொருளுக்குள் நுழைகிறது. இங்கே இரண்டு விதமான சோதனை வளையங்கள் இருக்கின்றன. முதலில் நாம் பயன்படுத்தும் அட்டை சரியானது தானா ? அதற்கு நாம் கொடுத்த சங்கேத எண் சரியானது தானா என்பதைச் சரிபார்க்கும் சோதனை.
    இந்தச் சோதனை தோல்வியடைந்தால் நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று பொருள். ஒருவேளை சங்கேத எண்ணைத் தவறாகச் சொல்லியிருக்கலாம்.
    இரண்டாவது சோதனை நம்முடைய வங்கிக்கணக்கில் நாம் கேட்கும் பணம் இருக்கிறதா ? நான் பணம் எடுப்பதில் இன்றைய தினத்தின் உச்ச வரம்பை எட்டியிருக்கிறோமா ? என்பது குறித்த சோதனைகள். முதல் சோதனை முடிந்தபின், இரண்டாவது சோதனைக்குள் நுழைந்து இரண்டும் சரியாய் இருந்தால் பணம் கொடுக்கலாம் எனும் பதில் தானியங்கி முனைக்கு வரும். இந்த இரண்டு சோதனைகளையும் கடக்க பல இலட்சம் தகவல்கள் அடங்கியிருக்கும் மென் கோப்புகளில் தேடுதல் நடக்கும்.
    இந்த தேடுதல் முடிந்து தானியங்கி முனைக்கு வரும் தாமதம் சில வினாடிகளே. இந்த வினாடிகள் அதிகரிக்கும் போது தான் நாம் சலித்துக் கொள்கிறோம்.
    பணத்தை எண்ணித் தரும் பணம் பட்டுவாடா இயந்திரமும் நுட்பமான சென்சார்களால் ஆனது. இது தவறு இழைப்பதில்லை. இரண்டு நோட்டுகள் ஒட்டி வரும் எனும் ஆசை நப்பாசையாய் போய்விடும் என்பது திண்ணம்.
    இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் அடங்கியிருக்கிறது. நாம் நம்மிடம் ஒரு வங்கியின் அட்டை இருந்தாலும் வேறு வங்கியின் தானியங்கி நிலையமும் நமக்குக் பணம் கொடுக்கும். எப்படி ?
    இதை செட்டில்மண்ட் என்பார்கள். அதாவது வங்கிகள் எந்தெந்த வங்கி அட்டைகளுக்குப் பணம் கொடுக்கிறதோ அந்தந்த வங்கிகளின் கணக்கில் அந்தப் பணத்தைச் சேர்த்துக் கொள்ளும். அன்றைய தினத்தின் இறுதியில் வங்கிகள் மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு உடன்பாடு செய்து கொள்கின்றன.
    மின் பண பரிமாற்றம் எனப்படும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதும், பணம் ஈட்டக் கூடியதுமாகும். பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் இதை நடத்துகின்றன.
    சரி, மென்பொருள் நிறுவனங்களுக்கு இதனால் எப்படி காசு கிடைக்கிறது ? இந்த தானியங்கி நிலையத்திலிருந்து செல்லும் கட்டளைகள் மென்பொருளோடு இணையாவிடில் ஒன்றுக்கும் உதவாது. இதன் பின்னால் இருக்கும் மென்பொருள் தான் வரும் தகவல்களைச் சரிபார்த்தல், பணம் பட்டுவாடா செய்ய உத்தரவிடுதல், மீதம் கணக்கிடுதல் என ஒட்டுமொத்தப் பணியையும் செய்கிறது. அனைத்து விவரங்களையும் மென் கோப்புகளில் சேமித்தும் வைக்கிறது. இந்த சுவிட்ச் எனப்படும் இந்த மென்பொருளுக்குள் வரும் தகவல்கள், அல்லது விண்ணப்பங்களுக்கு ஏற்ப மென்பொருள் நிறுவனம் வங்கிகளிடம் பணம் பெற்றுக் கொள்கின்றன.
    அதாவது நீங்கள் பத்து முறை பணம் எடுக்கிறீர்கள் என்றால் மென்பொருளுக்குக் கிடைப்பது பத்து தகவல்கள். ஒவ்வொரு தகவலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மென்பொருள் நிறுவனத்துக்குச் செல்லும். தினமும் பல ஆயிரக்கணக்கான தானியங்கிகளில் நிகழும் இந்த பரிவர்த்தனை மூலம் பல கோடிக்கணக்கான பணம் மென்பொருள் நிறுவனங்களுக்குப் போய் சேர்கிறது. இதற்காகத் தான் ஆயிரக்கணக்கான மென்பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். அதிலும் ஒவ்வொரு வங்கிக்கும் உரிய பிரத்தேக சட்டங்களின் அடிப்படையில் மென்பொருள் இயங்குவது தான் முக்கியம். குறிப்பாக சில வங்கிகள் ஒரு நாள் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே
    ஏடிஎம் வழியாக எடுக்க அனுமதிக்கும். சில வங்கிகள் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அனுமதிக்கும். இதற்குத் தக்க படி மென்பொருள் தயாராக்கப் பட வேண்டும்.
    அமெரிக்காவில் இருபத்து ஐந்திற்கும் முப்பத்து நான்கிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் அறுபது சதவீதம் பேர் மாதம் எட்டு முறை ஏடிம் இயந்திரத்தைப் பணம் எடுக்க நாடுகிறார்களாம். பெரும்பாலான ஏடிஎம் நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் தான் அதிக பரிவர்த்தனை நடக்கிறதாம்.
    ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் மற்றவர்களை விட இருபது முதல் இருபத்து ஐந்து சதவீதம் வரை அதிகமாகச் செலவழிக்கிறார்களாம்.
    ஏடிஎம் அட்டைக்கு மிக முக்கியமானது பின் எனப்படும் சங்கேத எண். இது தானியங்கியில் அளிக்கப்பட்டவுடன் குறியீடுகளாக மாறிவிடும். அதன் பின் யாரும் அதை திருட முடியாது.
    ஆனால் அது நம்மிடம் இருக்கும் வரை அதை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்கு தான். அட்டையும் எண்ணும் கிடைத்துவிட்டால் யார் வேண்டுமானால் நம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். இணையத்திலும் பொருட்கள் வாங்க முடியும்.
    சங்கேத எண்ணை பத்திரமாய் வைத்திருக்க சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.
    சங்கேத எண்ணை எழுதி வைக்கக் கூடாது.
    மறந்து விடுவோம் எழுதியே ஆகவேண்டும் என விரும்பினால் அதை வீட்டில் எங்காவது பத்திரமாய் எழுதி வைக்க வேண்டும்.
    பர்சிலோ, ஏடிஎம் அட்டை இருக்கும் இடங்களிலோ வைக்கவே கூடாது.
    சங்கேத எண் உங்களோடு தொடர்பற்றவையாக ஆனால் உங்களால் மறக்க முடியாததாக இருக்க வேண்டும்.
    குறிப்பாக உங்கள் பிறந்த நாள், தொலைபேசி எண் போன்றவை இல்லாமல் இருத்தல் நலம்.
    சங்கேத எண்ணை எழுதி வைக்கும்போது கூட அதை உங்களுக்கு மட்டுமே புரியும் சங்கேத மொழியிலேயே எழுதி வைக்கலாம்.
    சங்கேத எண்ணை பயன்படுத்தும் போது தானியங்கிக்கு மிகவும் அருகாக குனிந்து மற்றவர்கள் பார்க்காத படி எண்களை பயன்படுத்த வேண்டும். குனிந்தபடி எண்ணை பயன்படுத்துவது ரகசியக் காமராக்களிடமிருந்து பெரும்பாலும் தப்ப வைக்கும்.
    பணம் எடுத்ததும் உடனே பாக்கெட்டில் பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்று விடுங்கள். வீட்டில் சென்று எண்ணிப்பாருங்கள். எப்படியானாலும் தவறு நிகழ்ந்தால் அதை சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தான் தெரியப்படுத்த வேண்டும் எனவே தானியங்கி முன்னால் நின்று எண்ணிக்கொண்டிருப்பது தேவையற்றது.
    யாராவது உங்களைத் தாக்கக் கூடும் எனும் பயம் தோன்றினால் ”கேன்சல்” பட்டனை அமுக்கி விட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்புங்கள்.
    இரவு நேரங்களில் ஏடிஎம் பயன்படுத்த வேண்டியிருந்தால் ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலுள்ள ஏடிஎம் களைப் பயன்படுத்துங்கள்.
    முக்கியமாக அட்டையின் பின்னால் இருக்கும் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அட்டை தொலைந்ததை அறிந்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள். உடனே உங்கள் அட்டையின் எண் ”ஏமாற்று” வரிசையில் சேர்க்கப்படும். அதன்பின் அந்த அட்டையை யாராவது பயன்படுத்தினாலும் அது ”ஏமாற்று வேலை” என்னும் முத்திரை இருப்பதால் நிராகரிக்கப்படும்.

    அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா


    அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மொத்தக் கடன், தற்போது 14.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, கடன் பத்திரங்களாக, அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளது. 2010 அக்டோபரில், இது 906 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளன. பெரும் கடன் சுமையில் அமெரிக்கா மூழ்குவதை இரண்டாண்டுகளுக்கு முன்பே சீனா உணர்ந்திருந்தது
    . 2009, மார்ச் 12ம் தேதி உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபோ,"அமெரிக்காவுக்கு பெரிய அளவில் கடன் அளித்துள்ளோம். அதுபற்றி எங்களுக்குக் கவலை ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாகச் சொல்வதானால் நான் கவலையில் ஆழ்ந்துள்ளேன். அமெரிக்காவின் வார்த்தைகளில் சொல்வதானால், நம்பகத் தன்மையை நிலைநிறுத்துங்கள். சீனச் சொத்துக்களின் பாதுகாப்புக்கு உறுதியளியுங்கள்' என்று, வெளிப்படையாக தெரிவித்திருந்தார். கடந்த வாரம் இதுகுறித்துப் பேசிய சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ,"முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பொறுப்பான கொள்கை முடிவுகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என நம்புகிறோம்' என்றார். சீனாவிடம் தற்போது அன்னிய செலாவணி இருப்பு, 3 டிரில்லியன் டாலர். பிற நாடுகள் எதுவும் இந்தளவுக்கு அன்னிய செலாவணி இருப்பை மேற்கொள்ளவில்லை. இந்த இருப்பில் பெரும்பான்மை டாலர் வடிவில் தான் உள்ளன. இவை மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில், கடன் பத்திரங்கள் மற்றும் டாலர் தொடர்பான பல்வேறு வடிவங்களில் பங்குச் சந்தை உட்பட அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப்படுகின்றன. உள்நாட்டுச் சேமிப்பை ஊக்குவித்தல், சீனக் கரன்சியான ரென்மின்பியின் மதிப்பை டாலரை விடக் குறைத்து வைத்துக் கொள்ளல் போன்றவை அக்கொள்கைகளில் குறிப்பிடத் தக்கவை. ஆனாலும், அமெரிக்க பொருளாதார இறங்குமுகம், சீனாவின் வளர்ச்சிக்கு சிக்கலைத் தரும்.சீனத் தயாரிப்புகளை அமெரிக்கா வாங்குவதைக் குறைத்தால் கூட, வேலைவாய்ப்பு அளவு சீனாவில் குறையும். அதே சமயம், டாலர் பரிமாற்ற வர்த்தகம் என்பது உலகில் முன்னணியில் இருப்பதால், சீனா தன் நிலையை சாதகமாக்கிக் கொள்ள அமெரிக்காவிடம் சில புதிய ஏற்றுமதிக் கொள்கை அணுகுமுறையைக் கூட பின்பற்றலாம். தற்போது அமெரிக்காவின் சிக்கலான நிலை, சீனாவையும் பெரும் சிக்கலுக்குள் தள்ளியுள்ளது. இதனால், சீனா தன்னை காத்து கொள்வதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து சீன பொருளாதார நிபுணர் யாவோ வெய் கூறியதாவது: இது அமெரிக்கா, சீனாவுக்கு ஒரு எச்சரிக்கை. சீனாவுக்கு குழப்பமான சூழல். அமெரிக்க டாலரில் கடன் பத்திரங்களை வாங்குவது குறித்து சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் டாலர் பாதுகாப்பானதா என்பது பற்றி யோசிக்க வேண்டும். தனது அன்னிய செலாவணி இருப்பைக் குறைப்பது, ரென்மின்பியை உலகளவிலான கரன்சியாக்குவது, அன்னிய செலாவணி இருப்பை வேறு கரன்சிகளில் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார தடுமாற்றத்தை சீனா தடுத்து நிறுத்த முடியும். ஆனால், அதிக தாமதம் சீனாவுக்கு அபாயமானது. இவ்வாறு யாவோ வெய் தெரிவித்தார். அமெரிக்காவின் கடன் சுமை மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளின் கடன்சுமை, தங்கம் விலை உயர்வு ஆகிய பிரச்னைகளும் சீனாவுக்கு சவால் விடும் அளவில் உள்ளன. ஏனெனில், உலக நாடுகள் முழுவதும் தங்கள் முதலீடுகளின் மதிப்பைக் குறையவிடாமல் தடுக்க ஆரம்பித்துள்ளன. இதற்கான அறிகுறிதான் தங்கம், வெள்ளி விலை ஏற்றம். கச்சா எண்ணெய் விலை அதிகரிக்காத நிலை ஆகும். மிகவும் வளர்ந்த பொருளாதார நாடாக கருதப்படும் சீனாவுக்கு இந்தச் சிக்கல் எதிர்பாராதது. அதே சமயம், அதிக அபாயங்களைக் கொண்டது.