நீரில் இறங்காமல்... நீந்த முடியாது !!



பங்குச்சந்தையில் ஈடுபட முனையும் ஒருவர் அவருக்கான நோக்கத்தையும், இலக்கையும் தெளிவாகக்கொண்டிருப்பது அவசியம், அது ஆயிரங்களை ஈட்டுவதாக இருக்கலாம் அல்லது ஆயிரம் போட்டு கோடிகளை அடைவதாக இருக்கலாம், ஆனால் அது அவரவருடைய ஆசையாகவும், நோக்கமாகவும் இருக்கவேண்டும். பங்குச்சந்தையில் எதுவும் சாத்தியம். . சந்தை நம் சிந்தனை சக்தியை விடப் பெரியது.. இதில் ஈடுப்பட்டு நோக்கத்தை அடைவது என்பது உங்கள் கையில்தான் உள்ளது.


உங்களின் நோக்கம் அல்லது லட்சியமே, பங்குச்சந்தை கற்பதிலும், ஈடுபடுத்திக்கொள்வதிலும் உங்களுக்கு தூண்டுகோலாகவும் துணையாகவும் நிற்கும். உங்களைப் பற்றி உங்களை விட வேறு யாரும் சரியாக அறிந்திருக்க மாட்டார்கள். உங்கள் பணநிலவரம், குடும்பசூழல், தனிப்பட்ட இயல்பு, ரிஸ்க் எடுக்கும் அளவு என உங்களைவிட மற்றவர் புரிந்திருக்கமாட்டார்.

உங்கள் கனவு உங்களுக்கு சுகம், மற்றவருக்கு அது சுமை.. எனவே உங்கள் நோக்கத்தை நீங்களே அடைய முயலுங்கள்.. உங்களுக்கான பாதையை நீங்களே தீர்மானியுங்கள்!!!!

உதாரணமாக, வாரன் பப்பெட் அவர்களால் கோகோ கோலா பங்கை வாங்கி 30 வருடங்கள் வைத்திருக்க முடியும், தற்போதும் அவர் 1980 களில் வாங்கிய பங்குகளை வைத்துள்ளார். இது அனைவருக்கும் சாத்தியமா??
இது அவரின் தியரி அவருக்கு சரி ஆனால் எனக்கு தவறு.. என் பார்வை அவருக்கு தவறாக இருக்கலாம் ஆனால் அது அவருக்கு 1500% வருவாயை ஈட்டுக்கொடுத்துள்ளது.

பங்குச்சந்தை வாரன் பப்புட், ஜார்ஜ் சோரஸ் மற்றும் பல சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது, இன்றும் பங்கு சந்தை மக்களே உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் கடந்த 100 ஆண்டுகாலமாக சிறந்த இடத்தை பிடித்துள்ளனர். ஆனால் அவர்கள் மற்றவர்களின் பாதையில் பயணிக்கவில்லை, தங்களுக்கான தேவைகளை அவர்களே பூர்த்தி செய்தனர். ஒரு விளையாட்டு கோச் விளையாட்டின் நுணுக்கங்களை பற்றியும், சிறந்த விளையாட்டு யுக்திகளையும் சொல்லிக்கொடுப்பாறேயன்றி நமக்காக விளையாடமாட்டார்..

களம் உங்களுக்காக தயாராக உள்ளது, சிறிது சிறிதாக கற்போம்.. உங்கள் பாதை அமைய நங்கள் துணை நிற்கிறோம். ஆனால் பாதையை நீங்கள் தீர்மானியுங்கள்!!

வெற்றி கைக்குள்தான்.. சுவாசித்துப் பார்


சாகா வரம் வேண்டுமா?


சிற்றூர் ஒன்றில் ஒரு சிறு குடும்பம். குடும்பத்தலைவன் துணையில்லாத நிலையில் பத்துவயதான தன் ஒரே மகனுடன் வசித்து வந்தாள் அந்த தாய். தன் எதிர்காலத்தை அந்த மகனின் வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்ட சராசரி இந்திய நடுத்தரவர்க்க தாய். மகனின் எதிர்கால வாழ்க்கை ஒன்றைப் பற்றியே கடவுளிடம் நித்தம் வேண்டிக் கொண்டிருந்த அவர் வாழ்க்கையில் ஒரு பேரிடி. சாலையில் விளையாடிக்கொண்டிருந்த அந்த பத்து வயது சிறுவன், எதிர்பாரதவிதமாக சாலை விபத்தில் சிக்கி உயிர்நீத்தான். ஏற்கனவே துணைவன் இல்லாத அந்த அபலைப்பெண் இப்போது தன் ஒரே மகனும் இறந்துவிட, மீளாத் துயர் கொண்டார். வாழ்வின் பிடிப்பற்றவராய், கடவுளிடம் கோபம் கொண்டார்.
"நித்தம் உன்னையே வேண்டிக்கிடந்தேனே!! என் பக்தி பொய்யா? என் கடமை உண்மையில்லையா? எந்த வரமுமே கேட்காத எனக்கு ஏன், இருளை சாபமாக அளித்தாய்?" என கடவுளிடம் மன்றாடினார். அந்த ஏழைத் தாயின் துயர்குரல் கேட்டு அவள் முன் தோன்றினார் கடவுள்!! " என் மகளே !! இந்த உலகில் தோன்றிய அனைவருமே ஒருநாள் இறக்கக் கூடியவர்களே, உன் மகனும் உலக நியதியான சாவை அடைந்தானே அன்றி, இது உனக்கு வழங்கப்பட்ட சாபம் அல்ல" எனச் சொல்லி சாந்தப்படுத்த முயன்றார். அவர் சொன்ன எதனையும் கேட்கும் மனநினையில் இல்லை, மகனையிழந்த அந்த தாய். மகனின் உயிர் மீட்குமாறு மன்றாடினார். கடவுளின் எந்த சமாதானமும் உண்மை நிலையை அவருக்கு உணர்த்தமுடியவில்லை.

முடிவாய் கடவுள் இப்படி சொன்னார், " சரி மகளே !! உன் மகனை மீண்டும் உயிர்ப்பிக்க நான் சம்மதிக்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை !!", அவரே தொடர்ந்தார், " இந்த ஊரில் எவரொருவர் வீட்டில் இதுவரை மரணம் நிகழ்ந்ததில்லையோ, அவரிடம் சென்று ஒருப்படி தானியம் வாங்கி வா!! நான் உன் மகனை மீண்டும் உயிர்ப்பிக்க செய்கிறேன்" என்றார்.

தன் மகன் மீண்டும் உயிர்த்தெழ நம்பிக்கைக் கொண்ட அந்தப் பெண் அவ்வூரின் ஒவ்வொரு வீடாக சென்றாயினும், மரணம் இல்லாத வீட்டை அடைய முடிவுசெய்தார். முதல் வீட்டை அடைந்தார், ஒருப்படி தானியம் கேட்டவர் அவர்கள் தானியத்தை தர விளையுமுன் கடவுள் சொன்னதை கேட்டார், " உங்கள் வீட்டில் யாரேனும் மரணம் அடைந்ததுண்டா? ", சென்ற ஆண்டு அவர்கள் வீட்டில் அத்தை மரணமடைந்ததைக் குறிப்பிடவே, அடுத்த வீட்டிற்கு சென்றார். எப்படி ஒவ்வொரு வீடாக சென்றுக் கேட்டார்.. அவர்களும் அத்தையோ, மாமாவோ, அம்மா, அப்பா, மகன், மகள் - என ஏதாவது ஒரு உறவினர்களை இழந்தவர்களாகவே இருந்தனர்.. இறுதியாக எல்லா வீடுகளிலும் சோதித்து கடவுளிடம் திரும்பினார் அந்தப் பெண்.

கடவுள் சொன்னார், " மகளே!! மரணம் உலக நிகழ்வுகளில் ஒன்று!! இது யாருக்கும் தரப்படும் சாபம் அல்ல!! யாருடைய மரணமும் இயற்கையே" என்று அந்த பெண்ணை தெளிவுப்படுத்தி அனுப்பினார். மரணம் மாற்றமுடியாத இயற்க்கை நிகழ்வு, அதை நாம் உணர்ந்து நம் வாழ்க்கையை தொடரவேண்டும் என்ற உண்மை உணர்ந்தவராய் நகர்ந்தார் அந்தப்பெண்..

நமக்கேன் இந்த கதை?
மகனின் மரணத்தை ஏற்க மறுக்கும் அந்த பெண்ணின் மனநிலையே, பங்கு வர்த்தகத்தில் நட்டத்தை ஏற்க மறுப்பதின் பின்னுமுள்ளது!!

மீண்டும் ஒருமுறை பங்குவர்த்தகத்தை நிகழ்நிலை( Spot trading) வர்த்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுகிறேன். ஒரு வணிகர் தன் எல்லா வர்த்தகத்திலுமே ஒரே அளவு லாபம் வரவேண்டுமென எதிர்பார்ப்பதில்லை. வாடிக்கையாளருக்கு தகுந்ததுப்போல் தன் லாபவிகிதத்தை மாற்றி அமைக்க அவர் தயங்குவதில்லை. நிகழ்நிலை வர்த்தகத்தில் நட்டம் ஏற்படாமல் முடிவெடுக்க வர்த்தகருக்கு காலஅவகாசம் உள்ளது. ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் அவ்வாறன காலஅவகாசம் பங்குவர்த்தகருக்கு இருப்பதில்லை, உடனடியாக மாறிக்கொண்டே இருக்கும் பங்கு வர்த்தகத்தில் அதற்கு தகுந்தார்ப்போல் உடனடியாக முடிவெடுப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். எனவே லாப நட்டம் இரண்டையுமே ஏற்கும் மனோபக்குவம் கண்டிப்பாக ஒரு பங்கு வர்த்தகருக்கு வேண்டும்.

பங்குவர்த்தகத்தில் நட்டம் என்பது, நம் லாப விகிதத்தை குறைக்கும் செயல் அல்ல. இங்கு நட்டத்தை வர்த்தகர் ஏற்க வேண்டுமென நாம் குறிப்பிடுவது, ஸ்டாப் லாஸ் (STOP LOSS) ஆர்டரைப் பற்றி..
உடனடியாக மாறிக்கொண்டே இருக்கும் பங்கு வர்த்தகத்தில் அதற்கு தகுந்தார்ப்போல் உடனடியாக முடிவெடுப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். எனவேதான் உங்கள் ஒவ்வொரு வர்த்தகத்திற்கான ENTRY & EXIT இரண்டுமே முன்க்குட்டியே முடிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் (பங்கு ஆய்வாளரின் துணையோடு இது சாத்தியப் படும்). ஒருமுறை ENTER (BUY / SELL) ஆகிவிட்டால் உங்கள் NEARBY TARGET அல்லது STRICT STOP LOSS - இந்த இடங்களில் வெளியேறுவது எவ்வளவு முக்கியமென நாம் உணர்திருக்க வேண்டும்.

நட்டத்தையும் ஏற்று பங்கு வர்த்தகத்தில் நிகர லாபம் ஈட்டுவது என்பது ஒரு மந்திரம் அல்ல - அது ஒரு கலை...

MARKET IS NOT A MAGIC - IT IS A SYSTEM

Rajesh V Ravanappan