பங்குச்சந்தையில் பணத்தை இழப்பது ஏன்?

இந்த பதிவில் புதிதாக ஒன்றும் இல்லை ஏற்கனவே பெரும்பாலானவை முன்னைய பதிவுகளில் சொல்லப்பட்டவைதான்.



பணத்தை இழப்பதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம் என்றாலும் முக்கியமான மூன்று:-

1. பேராசை



2. நிதானமின்மை




3. அதிகப்படியான ரிஸ்க் எடுத்தல்



பங்குச்சந்தையில் பல்வேறு முறைகளில் பங்குவர்த்தகம் செய்ய முடிந்தாலும்,எவை உங்களுக்கு நன்கு தெரியுமோ அவை மட்டுமே செய்ய வேண்டும்.

நல்ல பங்குகளை சந்தை சரிவை பயன்படுத்தி வாங்குங்கள்.



நீங்கள் வைத்திருக்கும் பங்கை பற்றிய தகவல்களை நிறைய படியுங்கள். அதிர்ஷ்டத்தை நம்பி சந்தைக்கு வராதீர்கள்.

சந்தையில் பணம் சம்பாதிப்பது மிக கடினம் ஆனால் பணத்தை விடுவது மிக எளிது. சந்தையில் வர்த்தகம் செய்யும் எவருக்கும் இந்த உண்மை கண்டிப்பாக தெரியும்.

உங்களுக்கென ஒரு வழிவகை வகுத்துக்கொண்டு (make a set of rules) அதை கண்டிப்பாக பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.

வணிகராக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக இதை படிக்கவும்