காப்பு கட்டுதலும் அதன் மருத்துவ பயனும்

சிலை(மார்கழி) மாதத்தின் கடைசி நாள் போகி,அன்று பூளைப் பூ,வேப்பிலை, ஆவாரம் பூ மூன்றையும்,கோவில்,வீட்டு கூரைகளில் சொருகி வைப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றால், இப்பருவத்தில் உள்ள பூளைப் பூ செடிகள் கோடையில் வறண்டுவிடும். மேலும் கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக நம் உடலில் நீர் வியர்வையாக வெளியேறுவதால் சிறுநீரகத்தில் கல்(கால்சியம் ஆக்ஸலேட்) உருவாக வாய்ப்புகள் உண்டு.

நாம் கூரையில் சொருகி வைக்கும் பூளைப் பூவை கோடையில் நீருடன் கலந்து பருகுவதால் சிறுநீரகம் தொடர்பான தொல்லைகள் தீரும்.

ஆவாரம் பூ பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்தும். இந்து மதத்தின் பழக்க வழக்கம் நம் உடல் நலத்துடன் தொடர்புடையது.

எனவே அவற்றை புறகணிக்காமல் பின்பற்றுவோம்