![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbwKn1c6Dd9Nuxxz7SzZqYlGsB2JiSlHT-nsQQgh6D93niWHQ0QzZTtCk9JGlQpQQITbLkpBA4CGlsltHVlmngCGmRMf51rZFkUuh98Z7wfc4LQasKc4PB3YjQ3R-dM_OMXnPH36Q1fNk/s400/large_1329808712.jpg)
தற்போது வெளியிடப்படும் பணவீக்கம் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், விலைவாசி உயர்வை துல்லியமாக மதிப்பிட முடிவதில்லை. இந்த புள்ளி விவரத்தை கொண்டு ரிசர்வ் வங்கி பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களில் ஏற்படுத்தம் மாற்றங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பலனை தருவதில்லை என்று கூறப்படுகிறது.
பல வெளிநாடுகளில் உள்ள ரிசர்வ் வங்கிகள், நுகர்வோர் விலை குறியீட்டு எண் பணவீக்கத்தின் அடிப்படையில் பணக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருகிறது.
நம் நாட்டில்தான் மொத்த விலைக் குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கத்தை வைத்து விலைவாசி உயர்வில் பணவீக்கம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை துல்லியமாக கணக்கிட முடியும் இருப்பினும், இதன் தாக்கத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .